நேற்று டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணத்தை திரும்ப பெறவேண்டும், டீசல் விலை உயர்வை தடுக்க வேண்டும், உள்ளிட்ட பன்னிரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர். இதனை அடுத்து நேற்று மத்திய அரசுடன் நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில், லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு எழுத்துபூர்வ உறுதிமொழியை அளித்ததன் காரணமாக லாரி உரிமையாளர்கள் தங்களின் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
|