LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சொத்து மற்றும் குற்றப் பின்னணி குறித்த தகவல்களை மறைக்கும் வேட்பாளர்களின் வேட்பு மனுவை நிராகரிக்கலாம் - உச்ச நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு !!!

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது வேட்பு மனுவில், சொத்து மற்றும் குற்றப் பின்னணி குறித்த தகவல்களை மறைத்தால், அவர்களின் வேட்பு மனுக்களை நிராகரிக்கும் அதிகாரம், தேர்தல் அதிகாரிக்கு உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கடந்த 2008 ஆம் ஆண்டு, உச்ச நீதி மன்றத்தில் சில தன்னார்வு அமைப்புகள் மூலம், பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது, அந்த மனுவில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களின் தேர்தல் செலவு கணக்கு, சொத்து விவரங்கள், குற்றப் பின்னணி குறித்த தகவல்கள் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும் எனவும், அப்படி குறிப்பிடாத பட்சத்தில், அல்லது தவறாக குறிப்பிடாலோ, அவர்களின் வேட்பு மனுவை நிராகரிக்கும் அதிகாரத்தை தேர்தல் அதிகாரிக்கு வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 


இந்த மனு தலைமை நீதிபதி, பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வாக்காளர்களால் தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகளைப் பற்றிய தகவல்கள் அவர்களுக்கு தெரிய வேண்டும். இது, அவர்களின் உரிமை. தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாமல் இருப்பது அல்லது தவறாக குறிப்பிடுவது, குற்றப் பின்னணி குறித்த தகவல்களை மறைப்பது, சொத்து விபரங்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்காமல் இருப்பது ஆகியவை, தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல்.எனவே, இதுகுறித்த தகவல்களை தெரிவிக்காத அல்லது மறைப்போரின் வேட்பு மனுக்களை நிராகரிக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு உண்டு என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 

by Swathi   on 13 Sep 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.