சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு அரசுகள் பல்வேறு விதமான முறைகளை கையாண்டு வருகின்றனர். இந்த வகையில் கோவா மாநில அரசு ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதாவது, அரசு துறைகளில் காகித பயன்பாட்டை குறைக்கும் விதமாக, முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முறையில், சட்டசபை நிகழ்ச்சிகளை நடத்த கோவா மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன் முன்னோட்டமாக, கடந்த கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றிய மாநில கவர்னர், பி.வி.வன்சூ, எச்.டி., முறையில் திரையிடப்பட்ட உரையை வாசித்தார். இதையடுத்து, மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும், ஐ - பேடு வழங்கப்பட்டு, சட்டசபை நிகழ்ச்சிகள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படும் என மாநில முதல்வர், மனோகர் பாரிக்கர் கூறியிருந்தார். இந்நிலையில், வரும் 9ம் தேதி சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இந்த சட்டசபை நிகழ்வுகளில், காகிதப் பயன்பாட்டிற்கு பதிலாக எம்.எல்.ஏ.,க்களின் கேள்வி - பதில்கள் டிஜிட்டல் முறையில் இடம் பெறும் என, சட்டப்பேரவை செயலர், என்.பி.சுபேதார் தெரிவித்துள்ளார்.
|