LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

காகித பயன்பாட்டை குறைக்க சட்டசபை நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்கியது கோவா அரசு !!!

சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு அரசுகள் பல்வேறு விதமான முறைகளை கையாண்டு வருகின்றனர். இந்த வகையில் கோவா மாநில அரசு ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதாவது, அரசு துறைகளில் காகித பயன்பாட்டை குறைக்கும் விதமாக, முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முறையில், சட்டசபை நிகழ்ச்சிகளை நடத்த கோவா மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன் முன்னோட்டமாக, கடந்த கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றிய மாநில கவர்னர், பி.வி.வன்சூ, எச்.டி., முறையில் திரையிடப்பட்ட உரையை வாசித்தார். இதையடுத்து, மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும், ஐ - பேடு வழங்கப்பட்டு, சட்டசபை நிகழ்ச்சிகள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படும் என மாநில முதல்வர், மனோகர் பாரிக்கர் கூறியிருந்தார். இந்நிலையில், வரும் 9ம் தேதி சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இந்த சட்டசபை நிகழ்வுகளில், காகிதப் பயன்பாட்டிற்கு பதிலாக எம்.எல்.ஏ.,க்களின் கேள்வி - பதில்கள் டிஜிட்டல் முறையில் இடம் பெறும் என, சட்டப்பேரவை செயலர், என்.பி.சுபேதார் தெரிவித்துள்ளார்.

by Swathi   on 01 Oct 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.