இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அடுத்த ஆண்டு அதிகளவில் உருவாகும் என நவுக்ரி.காம் இணையதளம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தகவல் தொழில் நுட்பம், மருத்துவம், கல்வி, வங்கி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அதிகளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று இந்த இணையதளம் கணித்துள்ளது. உலக பொருளாதார சூழல், இந்திய பொருளாதார சூழல் ஆகியவற்றால் நடப்பாண்டில் வேலைவாய்ப்பு சந்தை மந்தமாக இருந்ததாக கூறியுள்ள இந்த இணைய தளம் அடுத்தாண்டில் இந்தச் சூழல் மாறுவதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளதாகவும் கூறியுள்ளது. வணிக நிறுவனங்கள் மீண்டும் முதலீடுகளை தொடங்கும் பட்சத்தில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என அந்த இணையதளம் கூறியுள்ளது.
|