பான் கார்டு வழங்கும் நடைமுறைகளில் சில மாற்றம் செய்திருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வருமான வரி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும், "பான் கார்டு' நடைமுறையில், அடுத்த மாதம் முதல் மாற்றம் செய்யப்படவுள்ளது. பான் கார்டு பெற விண்ணப்பிக்கும்போது, முகவரி சான்று, அடையாள சான்று, பிறந்த தேதி ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, உண்மை ஆவணங்களையும்(Original Certificate) அளிக்க வேண்டும். நகல்களுடன், இந்த ஒரிஜினல் சான்றிதழ்களை ஒப்பிட்டு உறுதி செய்த பின் தான், விண்ணப்பம் ஏற்கப்படும். ஆய்வு முடிந்ததும், உடனடியாக, ஒரிஜினல் சான்றிதழ்கள், விண்ணப்பதாரரிடம் திரும்ப அளிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
|