LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்: அம்பலமாகும் அரசியல் கட்சிகள்!

நேற்றைய கூட்டத்தில் எங்கள் மீது பிரேமலதா, உதிர்ந்த ரோமங்கள் என்று பண்பாடற்ற வார்த்தைகளை உபயோகித்திருக்கிறார். நன்றி உணர்ச்சியில்லாமல் எங்கள் மீது குற்றம் சுமத்துகிற பிரேமலதாவை பார்த்து நாங்கள் கேட்க விரும்புவதெல்லாம், ஒரு சீட்டுக்கட்சியான தே.மு.தி.க.வை 29 உறுப்பினர்கள் உள்ள கட்சியாக்கி, எதிர்க்கட்சி தலைவர் இருக்கையையும் யாசகம் தந்தது முதல்–அமைச்சர் ஜெயலலிதா.

அதற்காக ஊரெல்லாம் உழைத்து தமிழக மக்களிடம் உத்தரவாதம் கொடுத்து ஓட்டு வாங்கி தந்தது அ.தி.மு.க. தொண்டர்களின் அயராத உழைப்பு. நன்றி மறந்ததும், ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்ததும் அவர்கள் தானே தவிர நாங்களல்ல. நாங்கள் எங்களுக்கு இப்பதவி கிடைப்பதற்கு யார் காரணமானவர்களோ அவர்களுக்கும், அவர்களின் உத்தரவாதத்தை ஏற்று வாக்களித்த தொகுதி மக்களுக்கும் நன்றி உடையவர்களாகவே இருக்கிறோம்.

தாய்ப்பாலை விற்பதற்கு சமமென்று எங்கள் மீது பாய்ந்திருக்கிற பிரேமலதா ஒன்றைத் தெளிவாக்க வேண்டும். இன்றைக்கு கணவர் கட்சிக்கு தலைவர், மனைவி மகளிர் அணிக்கு தலைவி, மச்சான் இளைஞர் அணிக்கு செயலாளர், அநேகமாக மகன்களையும் மாணவரணிக்கு கொண்டுவந்து விடுவார். இப்படித் தே.மு.தி.க. கட்சியை குடும்பக் கட்சியாக மாற்றிவிட்ட இவர்கள் கட்சிக்கு அங்கீகாரம் வாங்கி கொடுத்த 2006 சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்களின் இன்றைய நிலை என்ன? சொத்து சுகங்களை விற்று வீடு வாசலை அடகு வைத்து போட்டியிட்ட வேட்பாளர்களில் எத்தனையோ பேர் இன்று கடனாளிகளாக தத்தளித்து வாழ்க்கையை தொலைத்துக்கொண்டு அலைகின்றனர் என்பதை இவர்கள் அறிவார்களா?

உதாரணத்திற்கு எனது தொகுதியை எடுத்து கொள்ளுங்கள், தே.மு.தி.க.வின் முதல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரிடம் இப்போது பசை இல்லையென்று தானே என்னிடம் பெறுவதை பெற்றுக்கொண்டு சீட்டு தந்தீர்கள். இது எனக்கு மட்டுமல்ல அத்தனை பேரிடமும் ஆதாயம் பெற்றுக்கொண்டு தானே சீட்டு தந்தீர்கள்.

ஒவ்வொரு அரசியல் இயக்கத்தின் தோற்றத்திற்கும் ஒரு பிரத்தியேக கொள்கை பின்னணி உண்டு. ஆனால் தனது கல்யாண மண்டபத்தின் 2 தூண்களுக்காக கட்சி ஆரம்பித்த ஒரே பொதுவாழ்க்கை புனிதன் விஜயகாந்த்தான். பொதுவாழ்க்கை பற்றி பேச விஜயகாந்த் குடும்பத்தினருக்கே அருகதை கிடையாது.

மற்ற கட்சிகள் எல்லாம் மக்களின் விரோத இயக்கம் என்று கணவனும், மனைவியும் போகிற இடங்களில் எல்லாம் புலம்புகிறார்கள். மக்களோடும், தெய்வத்தோடும் மட்டும்தான் கூட்டணி என்று பிரகடனம் செய்து கொண்டே, கூட்டணிக்கு அலைவதே இவர்களின் பிழைப்பு. மக்களை குழப்புவதையே தொழிலாக கொண்ட இவர்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனாவது கூட்டணி வைத்தால் அது மட்டும் தாய்ப்பாலையும், கற்பையும் விற்பதற்கு சமமாகாதா?. பிரேமலதாதான் விளக்க வேண்டும்.

தமிழகத் தேர்தல் கட்சிகளின் நிலை எப்படியுள்ளன என்பதற்கு இந்த அறிக்கை ஒரு ஆதாரம்.

by MAYIL   on 15 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு. குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு! கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு!
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள். தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.
தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்! மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை
இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல். இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.