தமிழகத்தில் அதிமுக தலைமையிலான அரசு பதவி ஏற்றவுடன் மக்களை கவரும் வகையில் பல கர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மக்களின் குடிநீர் தாகத்தை தீர்க்கும் பொருட்டு குறைந்த விலையில் மினரல் வாட்டர் வழங்கிட ஒரு புதிய திட்டத்தை தற்போதைய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டம் வரும் செப்- 15 ம்தேதி துவங்க இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் அரசு பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்து நிலையங்களில் ஒரு லிட்டர் மினரல் பாட்டில் ரூ 10 க்கு விற்பனை செய்யப்படும். தற்போதைய அரசு கொண்டுவந்துள்ள, அம்மா உணவகங்கள், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், ஒரு கிலோ அரிசி இருபது ரூபாய் திட்டம் ஆகியவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த குடிநீர் திட்டமும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|