LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 419 - அரசியல்

Next Kural >

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நுணங்கிய கேள்வியர் அல்லார் - நுண்ணியதாகிய கேள்வியுடையார் அல்லாதார், வணங்கிய வாயினர் ஆதல் அரிது - பணிந்த மொழியினை உடையராதல் கூடாது. (கேட்கப்படுகின்ற பொருளினது நுண்மை கேள்விமேல் ஏற்றப்பட்டது. 'வாய்' ஆகுபெயர். பணிந்தமொழி - பணிவைப்புலப்படுத்திய மொழி. கேளாதார் உணர்வு இன்மையால் தம்மை வியந்து கூறுவர் என்பதாம். 'அல்லால்' என்பதூஉம் பாடம்.)
மணக்குடவர் உரை:
நுண்ணியதாகிய கேள்வியை யுடையாரல்லாதார், தாழ்ந்த சொற்கூறும் நாவுடையாராதல் இல்லை. இது கேள்வியுடையார் தம்மை வியந்து சொல்லா ரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
நுணங்கிய கேள்வியர் அல்லார் -நுண்ணிதாகிய கேள்வியறி வில்லாதார்; வணங்கிய வாயினர் ஆதல் அரிது-பணிவான சொற்களையுடைய ராதல் இயலாது. பொருளின் நுண்மை கேள்விமேலும் சொல்வார் பணிவு வாயின் மேலும் ஏற்றிக் கூறப்பட்டன. கேள்வி என்பதைக் கேள்வியறி வென்று கொள்ளின் ஏற்றுரை வழக்காகாது. 'வாய்' ஆகுபெயர். கேள்வி வாயிலாக அறிவு நிரம்பாதார் செருக்கித் தற்புகழ்ச்சி செய்வர் என்பது கருத்து. 'அல்லால்' என்பது பாடவேறுபாடு.
கலைஞர் உரை:
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.
சாலமன் பாப்பையா உரை:
நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.
Translation
'Tis hard for mouth to utter gentle, modest word, When ears discourse of lore refined have never heard.
Explanation
It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction.
Transliteration
Nunangiya Kelviya Rallaar Vanangiya Vaayina Raadhal Aridhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >