LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

முடிவுக்கு வந்தது அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி !!!

அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை உயர்த்துவதற்கான மசோதாவிற்கு அமெரிக்க செனட் சபையும், பிரதி நிதிகள் சபையும் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, கடந்த 2 வாரங்களாக அமெரிக்காவில் நிலவி வந்த பொருளாதார பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளது.

 

அமெரிக்காவில் புதிய பட்ஜெட்டுக்கு பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் கிடைக்காததால் செலவுக்கு நிதியின்றி அரசு நிர்வாகம் இரண்டு வார காலமாக  முடங்கிக் கிடந்தது. இதனால் பல அரசு துறைகள் மூடப்பட்டதால், சம்பளம் இல்லா விடுப்பில் சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள் விடுப்பில் சென்றுள்ளனர். இந்த நிர்வாக முடக்கத்துக்கு தீர்வு காணுவதற்கான கெடு இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், ஆளும் கட்சியான ஜனநாயக கட்சிக்கும், எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சிக்கும் இடையே நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் வெள்ளை மாளிகையில் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

 

இந்த ஒப்பந்தபடி, கடனுக்கான உச்சவரம்பு 16 லட்சத்து 70 ஆயிரம் கோடி டாலர்களாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது. மேலும், ஜனவரி 2015 வரையிலான நிதி ஒதுக்கீடுக்கும் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்படும். இதனால், இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்ப அழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

by Swathi   on 16 Oct 2013  0 Comments
Tags: அமெரிக்க பொருளாதார நெருக்கடி   ஒபாமா   பொருளாதார நெருக்கடி   அமெரிக்கா   குடியரசு கட்சி   ஜனநாயக கட்சி   அதிபர் ஒபாமா  
 தொடர்புடையவை-Related Articles
தமிழக விவசாயிகளுக்கு உதவ அமெரிக்காவில் மொய் விருந்து... தமிழக விவசாயிகளுக்கு உதவ அமெரிக்காவில் மொய் விருந்து...
அமெரிக்கத் தமிழறிஞர்க்கு பத்மஸ்ரீ விருது..! அமெரிக்கத் தமிழறிஞர்க்கு பத்மஸ்ரீ விருது..!
அமெரிக்காவின் சில மாநிலங்களில் தண்ணீர் உறைந்து பனிக்கட்டி ஆகிவருகிறது அமெரிக்காவின் சில மாநிலங்களில் தண்ணீர் உறைந்து பனிக்கட்டி ஆகிவருகிறது
இலங்கை அரசுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !! இலங்கை அரசுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !!
மோடிக்கு விசா வழங்குவது பெரிய விசயமே அல்ல : அமெரிக்கா !! மோடிக்கு விசா வழங்குவது பெரிய விசயமே அல்ல : அமெரிக்கா !!
தீவிரவாதத்திற்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொண்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் ஒபாமா !! தீவிரவாதத்திற்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொண்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் ஒபாமா !!
உலக அதிகாரமிக்க தலைவர்களின் பட்டியல் - ரஷ்ய அதிபர் முதலிடம் ! சோனியா காந்திக்கு 21 வது இடம் !! உலக அதிகாரமிக்க தலைவர்களின் பட்டியல் - ரஷ்ய அதிபர் முதலிடம் ! சோனியா காந்திக்கு 21 வது இடம் !!
மத்திய அரசு துறையில் ஜி-மெயில், யாஹூ பயன்படுத்த தடை !! மத்திய அரசு துறையில் ஜி-மெயில், யாஹூ பயன்படுத்த தடை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.