1915 மார்ச் இதே நாளில்தான் புளூட்டோவின் முதல் ஒளிப்படம் எடுக்கப்பட்டது. பெர்சிவல் லோவெல் என்பவர் சூரிய குடும்பத்தில் ஒன்பதாவதாக ஒரு கோள் இருப்பதாக நம்பி, அதைத் தேடும் ஆராய்ச்சியிலேயே -1916ஆம் ஆண்டு அவர் இறக்கும்வரை - தனது வாழ்நாள் முழுவதையும் கழித்தார். அந்த ஆராய்ச்சியில் 1915 ஆம் ஆண்டு இதே நாளில் புளூட்டோவின் இரண்டு படங்கள் எடுக்கப்பட்டிருந்தன. அவை எதனுடைய படங்கள் என்று அவர் வரையறுத்திருக்கவில்லை. அதன் பின்னர் 1930 ஆம் ஆண்டு கிளைடு டோம்பா என்பவரால் புளூட்டோ கண்டுபிடிக்கப்ட்டது.
75 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்பதாவது கோளாக கருதப்பட்டு வந்த புளூட்டோ, 2006ஆம் ஆண்டு குறுங்கோளாக வரையறுக்கப்பட்டது. சூரியனை ஒரு சுற்றுப்பாதையில் சுற்றி வர வேண்டும், நிலைநீர் சமநிலையை எட்டுவதற்குத் தகுந்த நிறையைப் பெற்றிருக்க வேண்டும்.
தன் சுற்றுப்பாதைச் சூழலில் அண்மையிலுள்ள பொருள்களை நீக்கியிருக்க வேண்டும் ஆகிய மூன்று அம்சங்களையும் கொண்டதே கோள் என்று சர்வதேச வானியல் கழகம் வரையறுத்துள்ளது. அந்த வகையில், முதல் இரண்டு தன்மைகளைப் பெற்றுள்ள புளூட்டோவுக்கு, அண்மைப்பொருள்களை நீக்கும் தன்மையில்லாததால், 2006ஆம் ஆண்டு அது குறுங்கோள் என்று அறிவிக்கப்பட்டது.
|
சுதந்திரப் போராட்ட வீரராகவும், சிறந்த தேசப் பற்றாளராகவும் திகழ்ந்தவர் ஆச்சார்யா ஜீவத்ராம் பகவான்தாஸ் கிருபளானி. 1888 நவம்பர் 11-ல் (தற்போது பாகிஸ்தானில் உள்ள) சிந்து மாகாணத்தின் ஹைதராபாத் நகரில் பிறந்தார்.
ஹைதராபாதிலேயே பள்ளிக் கல்வி கற்ற கிருபளானி, மும்பையில் உள்ள வில்ஸன் கல்லூரியில் மேல்படிப்பு படித்தார். தொடர்ந்து பூனாவின் பெர்குஸன் கல்லூரியில் வரலாறு மற்றும் பொருளாதாரத்தில் முதுகலை பயின்றார். பிஹாரின் முசாஃபர்பூர் கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் வரலாற்றுப் பேராசிரி யராகப் பணிபுரிந்தார்.
1917-ல் காந்தி நடத்திய சம்பரண் சத்தியாகிரகப் போராட்டத்தின்போது காந்தியின் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். 1920-ல் காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக் கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். காந்தி தொடங்கிய ஆசிரமங்கள் மூலம் கல்வி மற்றும் சமூகச் சீர்திருத்த நடவடிக்கை களில் ஈடுபட்டார். உப்புச் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட போராட்டங்களில் முனைப்புடன் பங்கேற்றார். இந்திய தேசிய காங்கிரஸின் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய அவர், பின்னர் கட்சியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். பிரதமர் பதவிக்கான நபரைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டுக் காங்கிரசு கட்சிக்குள் நடத்தப்பட்ட தேர்தலில் சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களுக்கு அடுத்தபடியாக இரண்டாம் அதிகபட்ச வாக்குகளை இவர் பெற்றிருந்தார். எனினும் மோகன்தாசு கரம்சந்த் காந்தி ஜவகர்லால் நேருவைப் பிரதமராக்கினார்.
தனது வாழ்க்கையில் பல அரசியல், சமூக மாற்றங்களைக் கண்ட கிருபளானி 1982-ல் இதே நாளில் மறைந்தார்.
|