|
||||||||
ஒகர வருக்கம் |
||||||||
ஒளியெனும் பெயரே யொண்சுட ரோனும்
விதுவும் கனலும் விளக்கொடு கீர்த்தியும்
கேட்டை யுமொளிப் பினிடமுங் கிரணமும். ....325
ஒலியெனும் பெயரே ஓசையும் காற்றும்
இடியு மெனவே யியம்பப் பெறுமே. ....326
ஒழுக்க மெனும்பெயர் வழியும் குலமும்
ஆசா ரமுமென அறியப் பெறுமே. ....327
ஒலியல் எனும்பெயர் ஒண்புனல் யாறும
ணில்லுஞ் சருமமும் உடுத்த ஆடையுமாம். ....328
ஒளிவட்ட மெனும்பெயர் சக்கரா யுதமும்
கண்ணா டியுமெனக் கருதுவர் புலவர். ....329
ஒண்மை யெனும்பெயர் நன்மையு மழகும்
மிகுதியும் ஒழுங்கு மறிவும் விளம்புவர். ....330
ஒதுக்க மெனும்பெயர் மறைவும் நடையுமாம். ....331
ஒன்றெனும் பெயரோ ரெண்ணு முத்தியுமாம். ....332
ஒல்லை யெனும்பெயர் சிறுபொழுதும் விரைவும்
தொல்லையும் எனவே சொல்லுவர் புலவர். ....333
ஒதுங்கல் எனும்பெயர் ஒதுங்குதல் நடையுமாம். ....334
ஒளியெனும் பெயரே யொண்சுட ரோனும் விதுவும் கனலும் விளக்கொடு கீர்த்தியும் கேட்டை யுமொளிப் பினிடமுங் கிரணமும். ....325
ஒலியெனும் பெயரே ஓசையும் காற்றும் இடியு மெனவே யியம்பப் பெறுமே. ....326
ஒழுக்க மெனும்பெயர் வழியும் குலமும் ஆசா ரமுமென அறியப் பெறுமே. ....327
ஒலியல் எனும்பெயர் ஒண்புனல் யாறும ணில்லுஞ் சருமமும் உடுத்த ஆடையுமாம். ....328
ஒளிவட்ட மெனும்பெயர் சக்கரா யுதமும் கண்ணா டியுமெனக் கருதுவர் புலவர். ....329
ஒண்மை யெனும்பெயர் நன்மையு மழகும் மிகுதியும் ஒழுங்கு மறிவும் விளம்புவர். ....330
ஒதுக்க மெனும்பெயர் மறைவும் நடையுமாம். ....331
ஒன்றெனும் பெயரோ ரெண்ணு முத்தியுமாம். ....332
ஒல்லை யெனும்பெயர் சிறுபொழுதும் விரைவும் தொல்லையும் எனவே சொல்லுவர் புலவர். ....333
ஒதுங்கல் எனும்பெயர் ஒதுங்குதல் நடையுமாம். ....334
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|