|
||||||||||
எண்ணெய் குளியலில் இருக்கு எண்ணற்ற நன்மைகள் !! |
||||||||||
எண்ணெய் குளியலின் நன்மைகள் : எண்ணெய் குளியல் உடல் வெப்பத்தை தனித்து, ஆழ்ந்த உறக்கத்தை தருகிறது. ஆண்மை குறைப்பாட்டை போக்கும். தேமல்,காளான் தொற்று,சொரியாஸிஸ் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும். சிறுநீரக நோய்களில் இருந்து பாதுக்காக்கும். மேனி பொலிவாகி சொறி,சிரங்கு,படை வராமல் பாதுகாக்கும். மெய்,வாய்,கண்,மூக்கு,செவி ஆகிய ஐம்புலன்களையும் பலப்படுத்தும். உயர் இரத்த அழுத்தம் வராது கட்டுப்படுத்தும். ஆஸ்த்துமா உட்பட 421 கப ரோகங்களையும் கட்டுப்படுத்தும். தைராய்டு கோளம் சரியாக வேலை செய்ய வைக்கும். வறட்டு இருமலை கட்டுப்படுத்தி நுரையீரலை பலப்படுத்தும். உடல் வறட்சியை நீக்கி செழுமை படுத்தும். குரல் வளமடையும், சைனஸ், அடுக்கு தும்மல், தலைவலி, ஒற்றை தலைவலி ஆகியவையை நீக்கும். மாரடைப்பு வராமல் தடுக்கும். நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி,உள்ளுறுப்புகளை வலிமையாக்கி ஆயுளை அதிகரிக்கும். எண்ணெய் குளியலின் போது கடைபிடிக்க வேண்டியவை : மிதமான வெயில் வந்த பின்பு, உடலில் எண்ணெய் தேய்த்து, மிதமான சூட்டில் உள்ள வெந்நீரில் குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்த்து குளித்த அன்று, அசைவ உணவு மற்றும் பழைய,புளித்த,காரமான உணவுகளை தவிர்த்து சாத்வீக உணவுகளையே குறைந்த அளவு உண்ண வேண்டும். பகலில் தூங்காது, கடினமான பணிகளை செய்யாது, அன்று முழுவதும் உடல் போகம் கொள்ளாது தவிர்க்க வேண்டும். எண்ணெய் குளியலுக்கு பிறகு யோகாசனம் செய்யக்கூடாது. எண்ணெய் தேய்பதற்க்கு முன்பே செய்து விடலாம்.
ஆண்கள் புதன், சனி கிழமைகளிலும், பெண்கள் சொவ்வாய், வெள்ளி கிழமைகளிலும் எண்ணெய் குளியல் செய்ய வேண்டும். சாதரணமாக எண்ணெய் குளியல் செய்வோர் நல்லெண்ணய் அல்லது தேங்காய் எண்ணெயில் கருவேப்பிலை, மருதாணி , சீரகம், செம்பருத்தி பூ,சோற்றுக் கற்றாழை,கலந்து காய்ச்சி வாரம் இருமுறை வெதுவெது நீரில் (சுடுநீர் அல்ல) குளித்து வர மேற்கண்ட வியாதிகள் வராமல் காக்கலாம்.
நோயாளிகள் மருத்துவர் அல்லது யோகா ஆசிரியர் ஆலோசனையின் படி திரிபலாதி, அசன ஏலாதி, குமரி தைலம் போன்ற தைலங்களை தேய்த்து சுடுநீரில் குளித்து வர மேற்கூறிய சகல நோய்களும் நீங்கும். |
||||||||||
by Swathi on 05 Aug 2014 0 Comments | ||||||||||
Tags: எண்ணெய் குளியல் Oil Bath Ennai Kuliyal | ||||||||||
Disclaimer: |
||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|