LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

காதலர் தினத்தையொட்டி, ஓசூரில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஒரு கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி!

காதலர் தினத்தையொட்டி, ஓசூரில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஒரு கோடி ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் பசுமை  குடில்கள் மற்றும் திறந்தவெளி மூலம் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜா மலர் சாகுபடி செய்யப்படுகிறது. 

தாஜ்மஹால், நோப்ளஸ், ப்ர்ஸ்ட்ரெட், கிரான்ட்காலா, பிங்க், அவலான்ஜ் உள்ளிட்ட 35- க்கும் மேற்பட்ட வகைகளில்  ரோஜாக்கள் உற்பத்தியாகிறது. இங்கு உற்பத்தியாகும் ரோஜாக்கள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர் தினம் போன்ற விழாக்களுக்காக மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் வளைகுடா நாடுகளுக்கு  ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. 

காதலர் தினத்துக்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு கோடிக்கு மேல் மலர்கள் ஏற்றுமதி செய்வது வழக்கம். வரும் பிப்.14ம் தேதி கொண்டாடப்படும் காதலர் தினத்திற்காக, 1ம் தேதி முதல் பூக்களை சீர்படுத்தும் பணியில்  மலர் சாகுபடியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு ஓசூர் பகுதியில் இருந்து சர்வதேச சந்தைகளுக்கு ஒரு கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்ய சாகுபடியாளர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

இது குறித்து கிருஷ்ணகிரி  தோட்டக்கலை அமைப்பின் தலைவர் வெங்கடாசலம் என்ற பாபு கூறியதாவது:

கடந்த ஆண்டு ஒரு ரோஜா மலர் 15 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது சர்வதேச சந்தைகளில் கென்யா, எத்தியோப்பியா, நெதர்லாந்து போன்ற  நாடுகளில் ரோஜா மலர்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. அவை இந்திய ரோஜாக்களுக்கு போட்டியாகவும் உள்ளது. குறைந்த விலைக்கும் விற்கின்றனர். 

தமிழகத்தை பொறுத்தவரை, குறிப்பாக ஓசூரில் சொட்டு நீர் பாசனம்  மூலமே உற்பத்தி செய்கிறோம். நல்ல மண் வளத்தால், தரமான பூக்களை உற்பத்தி செய்கிறோம். கடந்த சில நாட்களாக நிலவும் கடும் பனியின் காரணமாக பூக்கள் உற்பத்தி குறைந்து உள்ளது. இந்த ஆண்டு சர்வதேச சந்தையில்  நம் நாட்டு மலர் ரூ. 15 முதல் 20 வரை விற்பனையாகும் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

by Mani Bharathi   on 04 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு. குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு! கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு!
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள். தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.
தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்! மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை
இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல். இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.