|
|||||
காதலர் தினத்தையொட்டி, ஓசூரில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஒரு கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி! |
|||||
காதலர் தினத்தையொட்டி, ஓசூரில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஒரு கோடி ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் பசுமை குடில்கள் மற்றும் திறந்தவெளி மூலம் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜா மலர் சாகுபடி செய்யப்படுகிறது. தாஜ்மஹால், நோப்ளஸ், ப்ர்ஸ்ட்ரெட், கிரான்ட்காலா, பிங்க், அவலான்ஜ் உள்ளிட்ட 35- க்கும் மேற்பட்ட வகைகளில் ரோஜாக்கள் உற்பத்தியாகிறது. இங்கு உற்பத்தியாகும் ரோஜாக்கள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர் தினம் போன்ற விழாக்களுக்காக மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. காதலர் தினத்துக்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு கோடிக்கு மேல் மலர்கள் ஏற்றுமதி செய்வது வழக்கம். வரும் பிப்.14ம் தேதி கொண்டாடப்படும் காதலர் தினத்திற்காக, 1ம் தேதி முதல் பூக்களை சீர்படுத்தும் பணியில் மலர் சாகுபடியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஓசூர் பகுதியில் இருந்து சர்வதேச சந்தைகளுக்கு ஒரு கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்ய சாகுபடியாளர்கள் திட்டமிட்டு உள்ளனர். இது குறித்து கிருஷ்ணகிரி தோட்டக்கலை அமைப்பின் தலைவர் வெங்கடாசலம் என்ற பாபு கூறியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை, குறிப்பாக ஓசூரில் சொட்டு நீர் பாசனம் மூலமே உற்பத்தி செய்கிறோம். நல்ல மண் வளத்தால், தரமான பூக்களை உற்பத்தி செய்கிறோம். கடந்த சில நாட்களாக நிலவும் கடும் பனியின் காரணமாக பூக்கள் உற்பத்தி குறைந்து உள்ளது. இந்த ஆண்டு சர்வதேச சந்தையில் நம் நாட்டு மலர் ரூ. 15 முதல் 20 வரை விற்பனையாகும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். |
|||||
by Mani Bharathi on 04 Feb 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|