சிம்புதேவன் படத்தை தொடர்ந்து, நடிகர் விஜய் அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஆக்சன் வித் திரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.
இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். ராஜா ராணி வெற்றி கொடுத்த அட்லி தனது இரண்டாவது படத்தை மாஸ் படமாக்கவேண்டும் என்ற துடிப்போடு விஜய்க்காக எழுதியுள்ள கதையாம் இது.
விஜய் 59 படத்தின் வேலைகள் இப்போதே ஆரம்பமாகிவிட்டன. இந்தப் படத்தில் விஜய் மீண்டும் போலீஸ் யூனிபார்ம் போடப்போகிறாராம். ஏற்கனவே போக்கிரி, ஜில்லா படங்களில் போலீஸ் ஆக நடித்திருக்கிறார் விஜய். விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகும் இந்த படம் 2016 பொங்கல் ரிலீஸ் என்று கூறுகிறார்கள் அட்லியின் நெருங்கிய வட்டாரங்கள்.
|