தமிழர்களின் ஆடற்கலையைக் கற்பிக்கும் வகையில் ஓராண்டுப் பட்டயப் படிப்பை நடத்த SRM பல்கலைக்கழகம் முடிவு செய்த்துள்ளது. இது குறித்து SRM பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராயம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ் மொழியின் தொன்மைச் சிறப்புகளையும் பெருமைகளையும் வெளிப்படுத்தவும், மேலும் வளர்க்கவும் SRM பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராயம் அமைக்கப்பட்டுச் செயல்பட்டு வருவதைத் தாங்கள் அறிவீர்கள். இத் தமிழ்ப்பேராயம் தமிழ்ப் பராம்பரிய ஆடற்கலையைக் காப்பாற்றவும், வளர்க்கவும், தொடர்ந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கவும், பிறமொழி ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கவும் தமிழர்களின் ஆடற்கலையைக்(Dance) கற்பிக்கும் வகையில் ஓராண்டுப் பட்டயப் படிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளது. தொன்றுதொட்டுப் பல தலைமுறைகளாகத் தமிழ் மரபுவழியில் நடனத்தைக் கற்பித்துவரும் தஞ்சை நட்டுவனார்களைக் கொண்டு நடனம் கற்பித்தலும் தொடர்ந்து பயிற்சியும் நடைபெறும்.
இந்த நடன வகுப்பை இன்றைய அறிவியல் வளர்ச்சியின் ஊடகங்கள் வாயிலாக (online Skype classes) நடத்த விரும்புகிறோம்.
மரபுவழி நடன ஆசிரியர் நடனத்தைக் கற்பிக்க, ஒரு மாணவி நடனமாட, அதை உலகில் எந்தப் பகுதியில் இருந்தும் பார்த்துப் பயிற்சி பெறவும், ஐயங்கள் இருந்தால் உடனுக்குடன் கேட்டுத் தெரிந்துகொள்ளும் வகையிலும் பல்லாண்டு கால அனுபவம்பெற்ற தலைசிறந்த நட்டுவனார் ஆடிக்காட்டும் வகையிலும் பயிற்சி வகுப்புகள் அமையும்.
ஒவ்வொரு வாரமும் அந்தந்த நாட்டின் சூழலுக்கு ஏற்ப வாரத்தின் இறுதி இரு நாட்களில் ஒவ்வொரு நாளும் இரண்டு மணிநேரப் பயிற்சியும், ½ மணிநேரத்திலிருந்து 1 மணி நேரம் வரை ஐயங்கள் தெளிவுபடுத்தலும் நடைபெறும். இந்த நடனப் பயிற்சியை வீட்டிலிருந்தோ அல்லது ஏதேனும் பயிற்சி மையத்திலிருந்தோ (எ-டு. தமிழ்ச்சங்கம்) ONLINE SKYPE வாயிலாக நேரடியாகப் பார்த்து பயில இயலும். வகுப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்துப் பயிற்சி நடுவங்களை அமைத்திடத் திட்டமிட்டுள்ளோம்.என SRM பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராயம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சிக் கட்டணம் - ஏறத்தாழ ஒரு மாணவருக்கு 500 US Dollar அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|