- முனைவர் கி.செம்பியன்
சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு (27)
(சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை---சுவையும் ஒளியும் ஊறும் ஓசையும் நாற்றமுமென்று சொல்லப்பட்ட தன்மாத்திரை களைந்தனது கூறுபாட்டையும்; தெரிவான்கட்டே உலகு---- ஆராய்வானறிவின் கண்ணதே உலகம்-- பரிமேலழகர்)
சுவை - நாக்கு - நீர் -> உவர்ப்பு, புளிப்பு, இனிப்பு
ஒளி - கண் - தீ -> நிறம், நீளம், குட்டை, பருமன்
ஊறு - உடல் - காற்று -> குளிர்ச்சி, வெப்பம், வன்மை, மென்மை
ஓசை - செவி - விண் -> ஓசைகள்
நாற்றம் - மூக்கு - மண் -> வாசனைகள்
சுவை நாவினால் அறியப்படுவது; நாக்கு நீரின் வடிவம்.
ஓளி கண்ணால் உணரப்படுவது; கண் தீயின் வடிவம்.
ஊறு உடலால் தெரியப்படுவது; உடல் காற்றின் வடிவம்.
ஓசை செவியால் கேட்கப்படுவது; செவி விண்ணின் வடிவம்.
நாற்றம் மூக்கால் அறியப்படுவது; மூக்கு மண்ணின் வடிவம்.
ஐந்து இயல்புகள், ஐந்து புலன்கள், ஐந்து பூதங்கள்.
இவைதாம் மனிதன்!
இவைதாம் உலகம்!
மனிதனை உலகம் படைத்தது!
இந்தக் குறள் முடிவாக என்ன சொல்கிறது?
இவற்றை ஆராய்வான் அறிவின் கண்ணதே உலகம்!
உலகத்தால் படைக்கப்பட்ட மனிதன் உலகை ஆராய்கிறான்!
உலகத்தால் படைக்கப்பட்ட மனிதன் உலகை ஆராய்ந்தால் உலகப் பயன்கள் கிட்டும்!
நீரின் தன்மையை ஆராய்ந்தால், நீராவி இயங்கி, நீராவி ஆற்றல்........
நீரைப் பிரித்தால் நைட்டிரஜன், ஆக்ஸிஜன்
நீரைக் காற்றுடன் கலந்து அழுத்திப் பாய்ச்சினால் பாறைகளைத் துளைக்கலாம்!
நீரின் வீச்சால் பெரிய டர்பைன்களை இயக்கலாம்!
ஆராய்வான் அறிவின்கண்ணதே உலகம்!
தீயை ஆராய்ந்தால்,
வெப்ப இயங்கிகளை (என்ஜின்) உருவாக்கலாம்!
அதைப் பயன்படுத்தி 200 கி.மீ. வேகத்தில் ஓட்டலாம்!
மின்னாற்றலைப் பெறலாம் (Thermo Power)
அணுவைப் பிளந்தால் வெப்பம்!
வெப்பத்தின் வெளியேற்றமே ஏவுகணைகளைத் தூக்குகின்றது!
புவி ஈர்ப்பு வட்டத்தைக் கடந்து விண்ணில் திரியலாம்!
காற்றின் தன்மையை ஆராய்ந்தால்
வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை அமைக்கலாம்!
செல்லிடங்களில் பேசலாம்!
இயங்கிகளின் டயர்களில் காற்று, மேடு பள்ளங்களில் விழுந்து செல்லும் அதிர்ச்சியைத் தாங்கிக்கொண்டு 100 பேரைத் தூக்கிச்செல்கின்றது!
ஆராய்வான் அறிவின்கண்ணதே உலகம்!
விண்ணின் தன்மையை ஆராய்ந்தால்,
ஏவுகணை செலுத்தலாம்; விண்கலங்களை மிதக்கவைக்கலாம். விண்ணிலிருந்து மண்ணை அளக்கலாம்; மண்ணிலிருந்து விண்ணை அளக்கலாம்!
மண்ணின் தன்மையை ஆராய்ந்தால்,
நிலக்கரி, கன்னெய், சிலிகான், டைட்டானியம், எரிவாயு, நவமணிகள் இன்னும் பல்வேறு தாதுக்களை அறியலாம்!
ஆராய்வான் அறிவில் அடங்குவதே உலகம்!
பஞ்சபூதங்களால் ஆன இந்த மனித உடலை ஆராய்ந்தால், ஆணும் பெண்ணும் சேராமல் குழந்தையைப் பிறக்கவைக்கலாம்!
ஒரு பூதத்தால் (புல், மரம்)
இரு பூதங்களால் (நத்தை, சிப்பி, முரள்மீன்)
மூன்று பூதங்களால் (கறையான், எறும்;பு)
ஐந்து பூதங்களால் (விலங்கு)
ஆன உயிர்களும் உள்ளன.
இவற்றை ஆராய்ந்தால்,
வௌவாலிடத்தில் ரேடார் ஆற்றல் உண்டு!
கரப்பான் பூச்சி மீசையில் ஆண்டனா ஆற்றல் உண்டு!
எறும்பிற்கு வாசனை ஆற்றல் மிகுதி!
பூனைக்கு இரவில் கண் தெரியும்!
இவற்றை மேலும் ஆராய்ந்தால்,
ஆராய்வான் அறிவின்பாற்பட்டதே உலகம்!
ஏவுகணையின் விலை என்ன?
விண்கலன்களின் விலை என்ன?
வானூர்தியின் விலை என்ன?
உலகம் எதற்கு விலை கொடுக்கிறது?
உலகத்தில் கிடைக்கும் பொருள்கள் ஒன்றோடொன்று சேர்க்கப்பட்டுப் புதிய பொருள்கள் ஆகின்றன!
உலகில் இல்லாதது வெளியில் இல்லை!
அந்த உலகமோ,
பஞ்சபூதங்களுக்குக் கட்டுப்பட்டன!
ஐந்தின் வகைதெரிவான் கண்ணதே உலகம்!
இதைச் சொன்னவன் தமிழ் வள்ளுவன்!
வணக்கம் வள்ளுவரே!
(தொடரும்....)
|