LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்

ஓங்கி உலகளந்த தமிழர் - 6 : வாழ்க்கை வளத்திற்கேற்ப

- முனைவர் கி.செம்பியன்

 

மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை       (51)


(மனைத்தக்க மாண்பு உடையளாகித் தற்கொண்டான் வளத்தக்காள்---மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகளையுடையளாய்த் தன்னைக் கொண்டானது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை யுடையாள்; வாழ்க்கைத் துணை---அதற்குத் துணை---பரிமேலழகர்)


தோட்டி முதல் தொண்டைமான்வரை உள்ளது உலகம்.

ஒரு பெண் யாருக்குத் துணைவியானாளோ அவனது வருவாய்க்கு ஏற்ப வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அவளே தமிழ்ப்பெண்; அப்பண்பே தமிழ்ப்பண்பு!

ஏனெனில், அப்பொழுது ஆண் மட்டுமே பொருள் ஈட்டுபவன்.

பிறந்த வீடு பணக்கார வீடாக இருக்கலாம்; புகுந்த வீட்டின் வசதி வாய்ப்புக்களுக்கு ஏற்ப வாழ மாறிக்கொள்ள வேண்டும்.

வாழ்க்கையை அன்பு கட்டுப்டுத்துகிறதா; பொருளாதாரம் கட்டுப்படுத்துகிறதா?

வாழ்க்கையை நிலைநிறுத்துவது பருத்திப் புடவையா, பட்டுப்புடவையா, குடிசை வீடா, மாடி வீடா?

பணம் வாழ்க்கையைப் பாதிக்குமா?

தற்கொண்டானின் வளத்திற்கேற்ப வாழவேண்டும்; அது வள்ளுவரின் காலம்!

இருவருமே வருவாய் ஈட்டுபவரானால்?

கணக்கு எளிமையாக முடிகிறது!

இருவர்தம் வருவாய்க்கு ஏற்ப!

வருவாய்க்கும் வாழ்க்கைக்கும் தொடர்பிருக்கிறது!

வள்ளுவர் வளம் என்றார்; பரிமேலழகரோ வருவாய் என்று உரை வகுத்தார்!

செல்வமும் செல்வமும் ஒன்று சேர்ந்தது----கோவலன் கண்ணகி!

செல்வம் தொலைந்தது.

தேரில் சென்றவன் நடக்கத் தயாரானான்!

கண்ணகியும் நடக்க ஆயத்தமானாள்!

மதுரையில் குடிசை வீட்டில் தங்கினாள்!

தானே காய்கறி நறுக்கினாள்; சமைத்தாள்.

கோபுரத்தில் வாழ்ந்தவள் குடிசையில் உணவு பரிமாறினாள்!

அவள்தான் தமிழ்ப்பண்பாட்டுக் கண்ணகி!

வள்ளுவரே, துணைவி ஊதியம் தேடக், கணவன் அமர்ந்து உண்டால் என்ன செய்வது?

வளத்தக்கான் வாழ்க்கைத் துணை!

 

(தொடரும்....)

by Swathi   on 23 Feb 2016  0 Comments
Tags: தமிழர்   உலகம்   திருவள்ளுவர்   திருக்குறள்   செம்பியன்   கி.செம்பியன்   Ulagam  
 தொடர்புடையவை-Related Articles
Thirukkural translation in Swahili (சுவாஹிலி மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Swahili (சுவாஹிலி மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
பூம்புகார் நிறுவனத்தின் வீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் திட்டம்!!! பூம்புகார் நிறுவனத்தின் வீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் திட்டம்!!!
திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்! திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்!
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில்  திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா ! திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா !
மலேசிய பள்ளிகளில் திருக்குறள் !! மலேசிய பள்ளிகளில் திருக்குறள் !!
ஓங்கி உலகளந்த தமிழர் - 15 : செய்தாலும் கெடும்; செய்யாவிட்டாலும் கெடும்! ஓங்கி உலகளந்த தமிழர் - 15 : செய்தாலும் கெடும்; செய்யாவிட்டாலும் கெடும்!
தமிழர்களின் 12 வகையான உணவுப் பழக்கங்கள்!! தமிழர்களின் 12 வகையான உணவுப் பழக்கங்கள்!!
உலகம்  உனக்காக - ச.சவகர்லால் உலகம் உனக்காக - ச.சவகர்லால்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.