LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்

ஓங்கி உலகளந்த தமிழர் - 8 : அன்பற்றவன் எலும்புக்கூடு

- முனைவர் கி.செம்பியன்

அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க்   
கென்புதோல் போர்த்த வுடம்பு      (80)

அன்பின் வழியது உயிர்நிலை---அன்பு முதலாக அதன்வழி நின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாவது; அவ்வன்பில்லாதார்க்கு உளவான உடம்புகள் என்பினைத் தோலாற்போர்த்தனவாம், உயிர்நின்றனவாகா---பரிமேலழகர்)


உயிர்கள் ஒன்றன்மீது ஒன்று அன்பு செலுத்துகின்றன.

பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் அன்புணர்ச்சி உண்டு.

கொடிய விலங்குகளும் குட்டிகளிடத்தில் அன்பு செலுத்துகின்றன.

தாயன்பு மேலானது.

அன்பின் வழியது உயிர்நிலை என்கிறார் வள்ளுவர்.

உயிர் நிலைபெறுவது அன்பினால்!

உயிர் நிலைபெறுதல் என்றால் உயிர்கள் தொடர்ந்து உண்டாவதா?

இரண்டையும் சார்ந்ததா?

அன்பு இல்லாத மனிதனை வள்ளுவர் தோலால் போர்த்தப்பட்ட எலும்பு என்கிறார்.

அன்பு இருந்தால் மனிதன், இல்லாவிட்டால் எலும்புக்கூடு!

கோடி கோடி மக்கள் வாழ்கின்றார்கள்.

இவர்களுள் எவன் மனிதன், எவன் எலும்புக்கூடு?

நிறுத்தால் அவனவன் எடை அறியலாம்!

ஸ்கேனிங் செய்தால் உள்பாகங்கள் புரியலாம்!

ஒருவனிடத்தில் அன்பு உடையவன் இன்னொருவனிடத்தில் அன்பு இல்லாதவன்!

ஏதோ ஓரிடத்தல் அன்பு உடையவன்.

ஓரிடத்திலும் ஒருபொருளிலும் அன்பு இல்லாதவன் என்று ஒருவன் இருக்கமுடியுமா?

அன்பே கடவுள்!

பெரிய பொருளாக இருக்கிறதே!

அவனது நாட்டின் மீது உள்ள அன்பினால், எனது நாடு விடுதலையடையவேண்டும் என்று போராடியபோது சுட்டான்!

புலி தனது குட்டியின்மீது கொண்ட அன்பினால்,உணவு ஊட்ட எண்ணித் தாய்மானைக் கொன்றது!

இராமன் சீதையிடம் வைத்த அன்பினால் இராவணனைக் கொன்றான் போரில் மற்றும் பலரையும் கொன்றான்!

அன்பு கொலை செய்யுமா?

பீமன் பாஞ்சாலியின்மீது கொண்ட அன்பினால் துச்சாதனனைப் பிளந்தான்!

மன்னர்கள் தங்கள் தங்கள் நாட்டின்மீது கொண்ட அன்பினால் எதிரி நாட்டு மன்னர்களையும் மக்களையும் கொன்றார்கள்!

பாண்டியன் நெடுஞ்செழியன் கோப்பெருந்தேவிமீது கொண்ட அன்பால் தவறான தீர்ப்புரைத்தான்!

கண்ணகி கோவலன்மீது கொண்ட அன்பால், வழக்காடிப் பாண்டியனின் உயிரைப் போக்கினாள்; மதுரையை எரித்தாள்?

கண்ணகி அன்பு உடையவளா இல்லையா?

அமெரிக்கர்கள் தங்கள் நாட்டின்மீது கொண்ட அன்பினால்தான்  ஹிரோஷிமா, நாகசாகியில் அணுக்குண்டு வீசினார்களோ?

சீதையின்மீது இராவணன் கொண்ட அன்பு முறையற்றது.

முறையான அன்பு, முறையற்ற அன்பு!

யார் இவற்றை அளவிடுபவர்?

மனிதன் அன்பின் அடையாளமா, அறிவின் அடையாளமா?

ஒரு கன்னத்தில் அறைந்;தார்க்கு மறு கன்னத்தைக் காட்டியது அன்பா?

உதைத்த காலுக்குச் செருப்புத் தைத்துக் கொடுத்தது அன்பா?

சிலுவையில் அறைந்திட உடலைக் காட்டியது அன்பா?

பசித்த வயிற்றையும் இளைத்த மேனியையும் கண்டு வாடியது அன்பா?

யானைக்காலில் குழந்தையை இடறமுற்பட்டபோது, தடுத்து நிறுத்த ஓடிய புலவன் அன்பின் வயப்பட்டவனா?

புறாவிற்காகத் துலாபாரத்தில் ஏறிய அரசன் அன்பானவனா?

கன்றிற்காக மகனைக் கொன்றவன் பசுவின்மீது அன்பு உடையவனா?

கல்லடி வாங்கிய முகம்மதுநபி மக்கள்மீது அன்பு கொண்டவரா?

அன்பு, அருள், பரிவு, பற்று, பாசம், இரக்கம்!

அன்பு வைத்தால் ஆபத்தா?

 

(தொடரும்....)

by Swathi   on 07 Mar 2016  0 Comments
Tags: எலும்புக்கூடு   Anbu   Elumbu Koodu   ஓங்கி உலகளந்த தமிழர்   Thamilar   அன்பு   Thirukkural  
 தொடர்புடையவை-Related Articles
ஓங்கி உலகளந்த தமிழர் - 15 : செய்தாலும் கெடும்; செய்யாவிட்டாலும் கெடும்! ஓங்கி உலகளந்த தமிழர் - 15 : செய்தாலும் கெடும்; செய்யாவிட்டாலும் கெடும்!
ஓங்கி உலகளந்த தமிழர் - 8 : அன்பற்றவன் எலும்புக்கூடு ஓங்கி உலகளந்த தமிழர் - 8 : அன்பற்றவன் எலும்புக்கூடு
ஓங்கி உலகளந்த தமிழர் - 6 : வாழ்க்கை வளத்திற்கேற்ப ஓங்கி உலகளந்த தமிழர் - 6 : வாழ்க்கை வளத்திற்கேற்ப
ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை
ஓங்கி உலகளந்த தமிழர் - 5 : உலகம் யார் கையில் ஓங்கி உலகளந்த தமிழர் - 5 : உலகம் யார் கையில்
அன்பின்  இலக்கணம் - பா.பனிமயம் அன்பின் இலக்கணம் - பா.பனிமயம்
பேச்சாட்டன்.. - வித்யாசாகர் பேச்சாட்டன்.. - வித்யாசாகர்
நீயென்பவள்தான் நானாயிருக்கிறேன் மகளே..- வித்யாசாகர் நீயென்பவள்தான் நானாயிருக்கிறேன் மகளே..- வித்யாசாகர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.