LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்

ஓங்கி உலகளந்த தமிழர் - 12 : மலர்தலும் கூம்பலும்

- முனைவர் கி.செம்பியன்

உலகந் தழீஇய தொட்ப மலர்தலுங்
 கூம்பலு மில்ல தறிவு     (425)

(உலகம் தழீஇயது ஒட்பம்--- உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்பமாம்;  மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு---அந்நட்பின்கண் முன்மலர்தலும் பின் கூம்புதலு மின்றி ஒரு நிலையானாவது அறிவாம்


தழீஇயது இல்லதென்பன---அவ்வத்தொழின்மேனின்றன. உலகமென்பது ஈண்டுயர்ந்தோரை. அவரோடு கயப்பூ போல வேறுபடாது கோட்டுப்பூப்போல ஒரு நிலையே நட்பாயினான் எல்லா வின்பமுமெய்துமாகலின், அதனை அறிவென்றார். காரியங்கள் காரணங்களாக உபசரிக்கப்;பட்டன. இதனைச் செல்வத்தின் மலர்தலும் நல்குரவிற் கூம்பலுமில்லதென்று உரைப்பாருமுளர்--பரிமேலழகர்)

வள்ளுவம் நுட்பமானது.

வள்ளுவரின் பார்வை தனித்துவமானது. தமிழ் இலக்கியப் பரப்பில் வேறு எந்தப் புலவரும் காணாதது!

மலரைப் பார்க்கின்றோம்; மலரும், வாடும்! மற்றொரு மலர் பூக்கும்.

ஆனால், இந்த மலர் காலையில் மலர்ந்து மாலையில் கூம்பும்! மீணடும் அதே மலர் அவ்வண்ணமே செய்யும்!

இது தாமரை!

அல்லி மாலையில் மலர்ந்து காலையில் கூம்பும்! இவை நீர்;ப்பூக்கள்.

தாமரைப் பூவினை முகத்திற்கும் கண்;ணிற்கும் உவமையாக்கினர் மற்றத் தமிழ்ப்புலவர்.

தாமரையை விளக்கு என்;றார் கம்பர்!

தாமரை மலரின் இதழடுக்குப் போல வீதிகளும், பொகுட்டுப் போல் மன்னன் கோவிலும் அமைந்தது மதுரை மாநகரம் என்றது பரிபாடல்!

மற்றப் பூக்களுக்கும் தாமரைக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு ஒரு பூவே பல நாட்களுக்கு மலரும் கூம்பும்! இத்தன்மையை நோக்கியறிந்து வெளிப்படுத்த்pயவர் வள்ளுவரே!

மன்னன் உயர்ந்தோரை நட்பாக்கிக்கொள்ளவேண்;டும்; அந்த நட்பு ஒரு நேரத்தில் இனித்தும், மறுநேரத்தில் கசந்தும் மாறிமாறி நிகழாமல், ஒரே தன்மைத்தாய்த் திகழவேண்டும்!

மாற்றம் என்பது மானுடத்தின் தத்துவமாக இருக்கலாம்; அந்த மாற்றம் மணிக்கு மணி நிகழ்ந்தால், அது தடுமாற்றம்; தடுமாற்றம் கூடாது!

துத்துவத்திற்கு ஏற்பக் கூட்டா?

கூட்டிற்கு ஏற்பத் தத்துவமா?

வளரும் நாடு வளர்ந்;த நாடகளுடன் நட்புறவு கொள்ளும்போது சில ஆண்டுகள் நட்பாகவும், சில ஆண்டுககள் பகையாகவும் மாறுபடாமல், சீரான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆத்தகு போக்கினை, நடைமுறையினை அறிவுடைமை என்கினறார்.

மன்னனும் உயர்ந்தோரும் ஆட்சியாளர்களும் எப்படி வேண்டுமானாலும் உறவாடட்டும்.

நாம் மலர்தலும் கூம்பலும் என்னும் வள்ளுவப் பார்வையைக் கற்றுக்கொள்வோம்!

உம் பார்வை ஒன்றே போதுமே, பல்லாயிரங் கதை சொல்லுமே!

வணக்கம் வள்ளுவரே!

 

(தொடரும்....)

by Swathi   on 04 Apr 2016  0 Comments
Tags: Malar   Malarthal   Thirukkural Katturai   மலர்   மலர்தல்   திருக்குறள்     
 தொடர்புடையவை-Related Articles
Thirukkural translation in Swahili (சுவாஹிலி மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Swahili (சுவாஹிலி மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
புரொபேஷனரி ஆபீசர் பணிக்கான IBPS தேர்வு : பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்... புரொபேஷனரி ஆபீசர் பணிக்கான IBPS தேர்வு : பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்...
திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்! திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்!
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில்  திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா ! திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா !
மலேசிய பள்ளிகளில் திருக்குறள் !! மலேசிய பள்ளிகளில் திருக்குறள் !!
முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
யார் சொன்னது காதலுக்கு கண் இல்லை - கவிப்புயல் இனியவன் யார் சொன்னது காதலுக்கு கண் இல்லை - கவிப்புயல் இனியவன்
முள்ளில் மலர்ந்த பூக்கள் 02 - கவிப்புயல் இனியவன் முள்ளில் மலர்ந்த பூக்கள் 02 - கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.