LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்

ஓங்கி உலகளந்த தமிழர் - 11 : நல்லனவும் அல்லனவும்

- முனைவர் கி.செம்பியன்

    நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கா
     லல்லற் படுவ தெவன்         (379)


(நன்று ஆங்கால் நல்லவாக் காண்பவர்---நல்வினை விளையுங்கால் அதன் விளைவாய இன்பங்களைத் துடைக்குந்திறன் நாடாது இவை நல்;லவென்று இயைந்தனுபவிப்பார்; அன்று ஆங்கால் அல்லற்படுவது எவன்---ஏனைத்தீவினை விளையுங்கால் அதன் விளைவாய துன்பங்களையும் அவ்வாறனுபவியாது துடைக்குந்திறன் நாடி அல்லலுழப்பது என் கருதி--பரிமேலழகர்)

முதலில் ஒரு குழந்தை - மகிழ்ச்சி!

அடுத்ததும் ஓர் ஆண் குழந்தை--மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

மூன்றாவது ஒரு பெண் குழந்தை--வருத்தம்! (பெண்ணியவாதிகள் பொறுத்தருளவேண்டும்)

முதலில் பிறந்த ஆண் குழந்தை, நான் ஆணாகப் பிறக்கவா, பெண்ணாகப் பிறக்கவா என்று பெற்றோரைக் கேட்டுக்கொண்டா பிறந்தது? அதற்கு மகிழ்ச்சியடைந்தவர், பெண் பிறந்ததற்காக வருந்துவானேன்?

பலநாள் மிதிவண்;டியில் ஒழுங்காகப் போய்வந்தார்; மகிழ்ந்தார்;! ஒருநாள் கீழே விழுந்துவிட்டார்;! புருவத்தில் அடி; குருதி கொட்டியது; முக்கியமான நரம்பு துண்டிக்கப்பட்டுவிட்டது; பலநாள் வைத்தியம்; நல்லவேளை, பைத்தியம் பிடிக்கவில்லை!

அந்த மிதிவண்டியைப் பார்த்துப் பார்த்து வருத்தம்! பலநாள் ஒழுங்காகச் சென்று மகிழ்வித்த வண்டி, ஒருநாள் இப்படிச் செய்துவிட்டது!

நல்லது நடந்தது; யாரைக் கேட்டு நடந்தது? அதற்கு மகிழ்ந்தார்!

கெட்டது நடந்தது; யார் சொல்லி நடந்தது? இதற்கு மட்டும் ஏன் வருந்தவேண்டும்?

நல்ல சட்டை; நல்ல நிறம்; நல்ல தையல்; அவருக்கு மிகப் பொருத்தம்; அதை அணிந்தாலே தனி அழகு; ஆள் பாதி ஆடை பாதி என்பார்களே, அஃது இந்தச் சட்டையைப் பார்த்துத்தானோ, அப்;படி ஓர் அழகு; பலரும் கேட்டிருக்கிறார்கள், எங்கே தைக்கப்பட்டது என்று; பல மேடைகளி;ல் பலருடைய கண் பட்டது; கடைத்தெருவிலே, பேருந்திலே, மக்கள் கூடும் எந்த இடத்திற்குச் சென்றாலும், அந்தச் சட்டையால் ஓர் ஆழகுப் பார்வைக் கிடைத்துவந்தது அவருக்கு! அந்தத் தையல்காரர் எத்தனையோ பேருக்குத் தைக்கிறார்; அவையெல்லாம் பேர் பெறவில்லை; இவருக்குத் தைத்தது மட்டும் அத்தனை நேர்த்தி!

ஐயகோ,

ஒருநாள் அரசு நகரப் பேருந்தில் கூட்டத்தோடு ஏறும்போது ஒரு கம்பியில் சிக்கிப் பார்வையான இடத்தில் கிழிந்துவிட்டது; ஈடு செய்ய முடியாத கிழிசல்!

அந்தச் சட்டையை நினைந்து நினைந்து பலநாள் வருத்தம்!

அது இருந்தால் இது இல்லை; இது இருந்தால்; அது இல்லை; அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால், அவனுக்கு இங்கே இடமில்லை----என்றான் பட்டுக்;கோட்டை கலியாணசுந்தரம்; அந்த நேர்த்தி யாரைக் கேட்டு நடந்தது? அதற்கு மகிழ்ந்தார்!

மகிழத் தெரிந்த மனமே, இதற்கு ஏன் வருந்துகிறாய்?

நல்லனவற்றிற்கு மகிழ்ந்தால், அல்லனவற்றிற்கும் மகிழ்;ச்சி கொள்!
ஓன்றிற்கு மகிழ்ந்து மற்றொன்றிற்கு வருத்தமா?

கூடாது!

மகிழாதே; வருந்தாதே!

எது நடந்தாலும் நடுநிலையாக இருக்கக் கற்றுக்கொள்!

ஓட்டையும் செம்பொன்னையும் ஒக்கவே நோக்கு!

அதற்காகக் காதுகளில் ஓடுகளையா தொங்கவிட்டுக்கொள்ள முடியும்?

ஓடுபோட்ட கூரையைப் பெர்;ன்னம்பலம் ஆக்கலாமா?

ஒரு மன்னன் கட்டினான்; மகிழ்ச்சி!

ஒரு மன்னன் இடித்தான்; வருத்தம்!

ஒரு மன்னன் பிறந்தான்; மகிழ்ச்சி!

அந்த மன்னனை இந்த மன்னன் வெட்டினான்; வருத்தம்!

தீபாவளி வெடி வெடித்தது; இன்பம், கொள்ளை இன்;பம்!

இந்த முறை கண்ணில் பட்டுவிட்டது;  கண்ணே வெந்துவிட்டது;

துன்பம், துன்பம்!

பல ஆண்டுகளாகக் காளையை அடக்கிவரும் வீரன் அவன்; பல தங்கக் காசுகளை வென்றவன்! மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! இந்தப் பொங்கலின்போது வயிற்றில் முட்டி உயரே தூக்கிவிட்டது அந்தக் காளை! துயரமோ துயரம்!

பலமுறை விண்ணிலே பறந்து சாதனை; உலகம் மகிழ்ந்தது! இம்முறை வெடித்துவிட்டது; உலகமே துயரம்!

இன்பமும் துன்பமும் கலந்ததுதான் உலகம் என்று தெரிந்திருந்;தாலும்,

 இன்பத்தைக் கண்டு மகிழாமலும்

துன்பத்தைக் கண்டு வருந்தாமலும்

எப்படி வாழமுடியும்?

வள்ளுவரே வணக்கம்!

அந்த முறையைக் கற்றுத்தாரும்!

 

(தொடரும்....)

by Swathi   on 28 Mar 2016  0 Comments
Tags: திருக்குறள் கட்டுரை   Thirukkural Article   Thirukkural Katturai              
 தொடர்புடையவை-Related Articles
ஓங்கி உலகளந்த தமிழர் - 14 : அறிவு எங்கே இருக்கிறது? ஓங்கி உலகளந்த தமிழர் - 14 : அறிவு எங்கே இருக்கிறது?
ஓங்கி உலகளந்த தமிழர் - 12 : மலர்தலும் கூம்பலும் ஓங்கி உலகளந்த தமிழர் - 12 : மலர்தலும் கூம்பலும்
ஓங்கி உலகளந்த தமிழர் - 11 : நல்லனவும் அல்லனவும் ஓங்கி உலகளந்த தமிழர் - 11 : நல்லனவும் அல்லனவும்
ஓங்கி உலகளந்த தமிழர் - 10 : அறிவியல் (Science) என்றால் என்ன? ஓங்கி உலகளந்த தமிழர் - 10 : அறிவியல் (Science) என்றால் என்ன?
ஓங்கி உலகளந்த தமிழர் - 9 : எது எதிலிருந்து ஓங்கி உலகளந்த தமிழர் - 9 : எது எதிலிருந்து
ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.