கடந்த சிலநாட்களாக சதம் அடித்து கொண்டிருக்கும் வெங்காயத்தின் விலை இன்னும் 3 வாரத்தில் குறையும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் வெங்காயம் விலை கடந்த சில மாதங்களாக, அதிகரித்த வண்ணம் இருக்கிறது. டெல்லியில் கடந்த சில நாட்களாக ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்றது. இந்த விலை நேற்று 100 ரூபாயாக உயர்ந்தது. இதேபோல் மற்ற முக்கிய நகரங்களில் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகைகள் நெருங்கும் பட்சத்தில் வெங்காயத்தின் இந்த விலை உயர்வு, சாதாரண மக்களை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் வெங்காயத்தை இறக்குமதி செய்வது பற்றி அரசு பரிசீலனை செய்து வருகிறது.
இந்நிலையில், வெங்காயம் விலை உயர்வு குறித்து மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் கூறும்போது, ''இன்னும் இரண்டு, மூன்று வாரங்களில் வெங்காயம் விலை குறையும். வெங்காய விலை உயர்வு தொடர்பாக நாளை ஆலோசனை நடத்துவதற்கு உணவு அமைச்சர் என்னை அழைத்திருக்கிறார். இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்திருக்கிறது. ஆனால், பரவலாக பெய்த மழையால் வெங்காயம் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பற்றாக்குறையை போக்குவதற்காக, எகிப்து மற்றும் சீனாவில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சரத் பவார் தெரிவித்துள்ளார்.
|