ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல - ஊணும் உடையும் அவை யொழிந்தனவும் மக்களுயிர்க்கெல்லாம் பொது; மாந்தர் சிறப்பு நாண் உடைமை - நன்மக்கட்குச் சிறப்பாவது நாணுடைமையே, அவையல்ல. (ஒழிந்தன - உறக்கமும் அச்சமும் காமமும். சிறப்பு - அவ்வுயிர்களின் வேறுபாடு. 'அச்சம்' என்று பாடமோதுவாரும் உளர்.)
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல - உணவும் உடையும் அவை யொழிந்த பிறவும் மக்களுயிர்க் கெல்லாம் பொதுவாக வுரியனவாம்; நாண் உடைமை மாந்தர் சிறப்பு- ஆயின், நாணுடைமையோ நன்மக்கட்கே சிறப்பாக வுரியதாம். ஊணுடையொழிந்தன அணி மனை பேச்சு கல்வி முதலியன.'அச்சம் ' என்னும் பாடம் சரியானதன்று.
கலைஞர் உரை:
உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான தேவைகளாக அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான்.
சாலமன் பாப்பையா உரை:
உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே.
Translation
Food, clothing, and other things alike all beings own;
By sense of shame the excellence of men is known.
Explanation
Food, clothing and the like are common to all men but modesty is peculiar to the good.