LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மகுடேசுவரன்

ஊதுவர்த்தி முனைமேல் சுடரின் தீண்டல் - கவிஞர் மகுடேசுவரன்

தீப்பட்டுப் பழுத்து
தன்னைத் தரத் தொடங்கியது

மெலிந்த வெண்புகை
நடுங்கி நடுங்கி மேலேற
உடன் சில ஒற்றுகளும்
ஒட்டிக்கொண்டன

மணத்தின் எடையோடு
எப்படி அது எழுகிறதென்று
வியக்கிறேன்

மேல் சென்றதும்
நெளி கோட்டுரு கலைந்து
திக்கற்றுத் திரும்பியது

அங்குமிங்கும் அலைந்து
அறை நிறைந்தது

உருக்கலைந்த மென்புகை
உட்சென்றூட்டிய
நறுமணம்
இந்தக் காலைக்குப் போதுமானது !

 

- - கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 19 Dec 2014  0 Comments
Tags: Oothupathi   Theendal   ஊதுவர்த்தி   தீண்டல்           
 தொடர்புடையவை-Related Articles
ஊதுவர்த்தி முனைமேல் சுடரின் தீண்டல் - கவிஞர் மகுடேசுவரன் ஊதுவர்த்தி முனைமேல் சுடரின் தீண்டல் - கவிஞர் மகுடேசுவரன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.