மதியம் உடல்குறைத்த வெள்ளாங் குருகினம் பைங்கால் தடவிச் செங்கயல் துரந்துண்டு கழுக்கடை அன்னதம் கூர்வாய்ப் பழிப்புலவு எழில்மதி விரித்தவெண் தளைஇதழ்த் தாமரை மலர்மலர் துவட்டும் வயல்அணி ஊர (5)
கோளகைக் குடிலில் குனிந்திடைந் தப்புறத்து இடைநிலை அற்றபடர் பெருவெளி யகத்து உடல்முடக்கு எடுத்த தொழிற்பெரு வாழ்க்கைக் கவைத்தலைப் பிறைஎயிற் றிருள்எழில் அரக்கன் அமுதம் உண்டிமையா அவரும் மங்கையரும் (10)
குறவரும் குறவத் துணையரும் ஆகி நிலம்பெற் றிமைத்து நெடுவரை இறும்பிடை பறவைஉண் டீட்டிய இறால்நறவு அருந்தி அந்நிலத் தவர்என அடிக்கடி வணங்கும் வெள்ளிஅம் குன்றகம் உள்ளுறப் புகுந்தொரு (15)
தேவனும் அதன்முடி மேவவும் உளனாம் எனப்புயம் கொட்டி நகைத்தெடுத் தார்க்க பிலம்திறந் தன்ன பெருவாய் ஒருபதும் மலைநிரைத் தொழுங்கிய கரம்இரு பத்தும் விண்ணுடைத் தரற்றவும் திசையுட்கி முரியவும் (20)
தாமரை அகவயின் சேயிதழ் வாட்டிய திருவடிப் பெருவிரல் தலைநக நுதியால் சிறிதுமலை உறைத்த மதிமுடி அந்தணன் பொன்அணி மாடம் பொலிநகர்க் கூடல் ஆவண வீதி அனையவர் அறிவுறில் (25)
ஊருணி அன்னநின் மார்பகம் தோய்ந்தஎன் இணைமுலை நன்னர் இழந்தன அதுபோல் மற்றவர் கவைமனம் மாழ்கி செற்றம்நிற் புகைவர்இக் கால்தீண்டலையே. (29)
|