ஆஸ்திரேலியா அரசு இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கி கவுரவித்தது.
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டகாரர் சச்சின் டெண்டுல்கர் சதத்தில் சதம் உட்பட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தகாரான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி ஏற்றார். மேலும் அவருக்கு இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க பரிசிலித்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர் ஜீலியா கில்லார்ட், ஆஸ்திரேலியர்கள் மற்றும் சிறந்த சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் ஆஸ்திரேலிய நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்படும் என அறிவித்தார். ஆஸ்திரேலியா கலை மற்றும் பிராந்திய அமைச்சர் இந்தியா வரும்போது சச்சினுக்கு ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும் என அந்நாட்டு எம்.பி., ஒருவர் எதிர்ப்பு தெரிவித்த போதும் சச்சினுக்கு இவ்விருது கிடைத்துள்ளது. சச்சினுக்கு விருது வழங்கப்படுவதை ஆதரித்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கில்கிறிஸ்ட், இதனால் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நல்லுறவு வலுப்படும் என கூறினார். ஆனால் மற்றொரு வீரரான மாத்யூ ஹைடன் விருதுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் ஹைடன் கூறுகையில், சச்சின் ஆஸ்திரேலியாவில் வசித்தால், அவருக்கு பிரதமர் பதவி கூட அளியுங்கள் என கூறினார்.சோலி சொராப்ஜிக்கு பின்னர் ஆஸ்திரேலியாவின் விருதை பெறும் இரண்டாவது இந்தியர் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.
|