- ஓரெழுத்து ஒருமொழி என்பது தமிழில் நெடுங்காலமாகப் பேசப்படும் ஒன்று. பொதுவாக நெட்டெழுத்துகள் (ஆ, ஈ, ஊ..) போன்ற யாவும் (ஔ இதில் விலக்கு) பொருள்தரும் சொற்கள்.
உயிரெழுத்துக்கு முன்னே "யகவச பதநம" ஆகிய எட்டு எழுத்துகளின் மெய்யெழுத்தும் சேர்ந்த உயிர்மெய் எழுத்தில் பலவும் தனிமொழிகள்.
மகரவரிசையில் ஆறு (மா, மீ, மூ, மே, மை, மோ)
"தபந" வரிசையில் ஒவ்வொன்றிலும் ஐந்து
- (தா, தீ, தூ, தே, தை;
பா, பீ, பூ, பே, பை, போ; நா, நீ, நே, நை, நோ)
"கவச" வரிசையில் ஒவ்வொன்றிலும் நான்கு: (கா, கூ, கை, கோ; வா, வீ, வை, வௌ; சா, சீ, சே, சோ)
ய வரிசையில் ஒன்று யா.
ஆக நெடில் உயிர் 6 + ம வரிசை 6 + தபந வரிசை 5 (3*5= 15) + கவச வசிரை 4 (3*4= 12), யகரவரிசை 1 = மொத்தம் 40
இவற்றோடு குறில் எழுத்துகள் தொ, து ஆகிய இரண்டும் சேர்ந்து மொத்தம் 42 சொற்கள் என்பார்கள்.
இதனை நன்னூல் நூற்பா 129 கூறுகின்றது!
உயிர்மவி லாறுந் தபவி லைந்துங் கசவி னாலும் யவ்வி லொன்று மாகு நெடினொது வாங்குறி லிரண்டோ டோரெழுத் தியல்பத மாறேழ் சிறப்பின
ஆறேழ் = 6x7 = 42 என்று முடிக்கின்றார்.
பாட்டின் வரிகள்:
உயிர்மவி லாறு = உயிர் ஆறு + ம-வில் ஆறு தபவிலைந்து = த, ப, வ ஆகியவற்றில் ஐந்து (ஒவ்வொன்றிலும் ஐந்து) கசவினாலும் = க, ச, வ ஆகியவற்றில் நான்கு (ஒவ்வொன்றிலும் நான்கு) யவ்விலொன்று = ய வரிசையில் ஒன்று ஆக நெடினொது வாங்கு = நெடிலோடு ஆங்கு குறிலிரண்டோடு = குறில் இரண்டோடு ஓரெழுத்து இயல் பதம் ஆறேழ் சிறப்பின = ஓரெழுத்து இயல்பதம் ஆறேழ் (=42) சிறப்பின.
நன்றி: செ. இரா. செல்வக்குமார்
|