நான் என்னுடைய விளைநிலத்தில் உற்பத்தி செய்து அதை மீண்டும் விதையாக்கும் முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளேன். விவசாயி தன்னுடைய விளைபொருளுக்கு தானே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதும் அதற்காக விவசாயி தரமான உணவு பொருளை உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் எனக்கு நானே விதித்துக்கொண்ட விதி. அதன்பொருட்டு செயல்பட உள்ளேன்.
படத்தில் இருக்கும் பயிர் நம் பாரம்பரிய நெற்பயிரான பூங்கார் 90 முதல் 100 நாட்களுக்குள் மகசூல் தரக்கூடியது. இப்பயிருக்கு காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் இருந்தால் போதும். மேலும் வெயில் மழை இரண்டையுமே தாங்க கூடிய வல்லமை கொண்ட பயிர் ரகம். அதே நேரத்தில் ரசாயன உரங்களையும் பூச்சிக்கொள்ளிகளையும் ஏற்றுக்கொள்ளாது. பயன்படுத்தாகாது என்பது. இயற்கை விவசாயத்தின் எழுதப்படாத விதி. மாறாக இயற்கை உரங்களையும் மீன் கழிவுகையும் பயன்படுத்தலாம். இந்த விதைக்கு விலை ரூ.55 என நிர்ணயம் செய்துள்ளேன். இயற்கை மீதும் இயற்கை விவசாயத்தின் மீதும் ஆர்வமுள்ளோர் தொடர்பு கொள்ளவும்.
ஞானமூர்த்தி ராஜா (Ganesa Moorthy Roja)
கைபேசி: 9500796349
|