LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஒரு கிடாயின் கருணை மனுவின் கதை என்ன தெரியுமா?

சுரேஷ் சங்கைய்யா இயக்கத்தில் வித்தார்த், ரவீனா நடிக்கும் படம் ஒரு கிடாயின் கருணை மனு. ஈராஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் ஒரு ஆட்டு கிடாயை மையமாக கொண்டது. விதார்த் கிராமத்தில் ஆடு மேய்க்கிற ஒருவர். அவர் செல்லமாக வளர்க்கும் ஆடு ஒன்று காணாமல் போகிறது. அதனை தேடி அலைகிறார். அந்த தேடலின் போது அவருக்கு ஒரு காதலியும் கிடைக்கிறாள். இருவரும் சேர்ந்து அதனை தேடுகிறார்கள். அந்த ஆடு கோவிலுக்கு பலி கொடுப்பதற்காக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதை காண்கிறார்கள். 


கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆட்டை எப்படி அவர்கள் அதிலிருந்து காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதை வழிபாடு என்கிற பெயரில் உயிர்பலி கொடுப்பது தவறு என்பதை உணர்த்தும் படம். 


விலங்குகளை பெற்ற பிள்ளைகளை போல பாதுகாக்கும் கிராமத்தினர் அதே விலங்கை கோவிலுக்கு பலியிடுவது ஏன் என்ற கேள்வியையும் முன் வைக்கிறது படம். இந்த படத்தில் ஆட்டின் பார்வையில் இருந்தும் காட்சிகள் விரிகிறது. ஆட்டின் கண்ணும், சத்தமும் உணர்த்தும் தகவல்களை விதார்த் புரிந்து கொள்வது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. சில இடங்களில் கிராபிக்ஸ் காட்சிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது. “உலகின் எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும்” என்பதை கிடாயின் கருணை மனுவாக இருக்கிறது.

by CinemaNews   on 29 Jun 2016  0 Comments
Tags: Oru Kidayin Karunai Manu   Oru Kidayin Karunai Manu Story   Oru Kidayin Karunai Manu Movie   Vidtharth   ஒரு கிடாயின் கருணை மனு        
 தொடர்புடையவை-Related Articles
ஒரு கிடாயின் கருணை மனுவின் கதை என்ன தெரியுமா? ஒரு கிடாயின் கருணை மனுவின் கதை என்ன தெரியுமா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.