LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- காகம் கலைத்த கனவு

ஒரு மனிதனுக்காகக் காத்திருந்த அன்றைய தினம்

 

அன்றையக் காலை
கல்விழுந்த குளம்போன்ற முகத்தோடுதான் விடிந்தது.
தெருவெங்கும் வாகனங்கள் சிறகுகட்டிப் பறந்தன.
சில சில்லாட்டு வண்டிகளும்
குடல் தெறிக்க
இருந்த வேகத்தை எல்லாமே ஒன்றுசேர்ந்து
ஓடித் தொலைந்தன புழுதியுடன் புழுதியைப்போல்.
நான் மட்டும்
அந்தக் கடையடியில் காத்திருந்தேன்.
முன்னர் கொடுத்த வாக்குறுதி மீறாது
எனக்குள்ளும் இதயம்
அரிசி அரைக்கின்ற இயந்திரத்தைப் போன்று
சத்தமிட்டு என்னை அச்சப் படுத்தியும்
சொன்னபடி அந்த மனிதன் வருவான்
என்ற நினைப்பில்
சந்தியிலே மேய்கின்ற மாடுகளும் ஓடிய அன்றைய தினத்தில்
என் கண்களை மேயவிட்டுக் காத்திருந்தேன். 
மனிதர்கள்
காலாலே பறந்தார்கள்.
எல்லோர்க்கும்
பிடரியிலே குதி பட்டது. 
சில கிழவிகள்
அன்றுதான் வேகமாய் நடந்ததை நான் கண்டேன். 
அன்று ஆமை கூடப்
புலிப்பாய்ச்சல் பாய்ந்திருக்கும்.
அந்த அளவுக்கு பயங்கரமாய் இருந்தது நகரம்.
நானோ
கடையடியில் அவனைக் காத்தபடி.
பால்மணம் மாறாத சூரியன்
கடலுக்குள் இருந்து நடைபழகி வருவதற்குள்
எனது நகரம் கறுத்தது. 
இருந்தும் கண்களை மேயவிட்டுக் காத்திருந்தேன்.
எனது நினைவில் வரும்போது உம்மா
பழுக்காத மாங்காய்மாதிரி விறைந்த முகத்தோடு
இன்னொரு தரமும் அகதியாய் போவதற்கு
ஆயத்தங்கள் செய்துகொண்டிருந்த
காட்சிகள் வந்து போயின. 
அந்த மனிதன்
வந்தானோ போனானோ
நானறியேன்!
காற்று மட்டும் பொய்யையும் மெய்யையும் கலந்து
எதையோ சொல்லிக்கொண்டு போனது
காதில் விழுந்தது. 

 

அன்றையக் காலை

கல்விழுந்த குளம்போன்ற முகத்தோடுதான் விடிந்தது.

 

தெருவெங்கும் வாகனங்கள் சிறகுகட்டிப் பறந்தன.

சில சில்லாட்டு வண்டிகளும்

குடல் தெறிக்க

இருந்த வேகத்தை எல்லாமே ஒன்றுசேர்ந்து

ஓடித் தொலைந்தன புழுதியுடன் புழுதியைப்போல்.

 

நான் மட்டும்

அந்தக் கடையடியில் காத்திருந்தேன்.

முன்னர் கொடுத்த வாக்குறுதி மீறாது

எனக்குள்ளும் இதயம்

அரிசி அரைக்கின்ற இயந்திரத்தைப் போன்று

சத்தமிட்டு என்னை அச்சப் படுத்தியும்

சொன்னபடி அந்த மனிதன் வருவான்

என்ற நினைப்பில்

சந்தியிலே மேய்கின்ற மாடுகளும் ஓடிய அன்றைய தினத்தில்

என் கண்களை மேயவிட்டுக் காத்திருந்தேன். 

 

மனிதர்கள்

காலாலே பறந்தார்கள்.

எல்லோர்க்கும்

பிடரியிலே குதி பட்டது. 

 

சில கிழவிகள்

அன்றுதான் வேகமாய் நடந்ததை நான் கண்டேன். 

 

அன்று ஆமை கூடப்

புலிப்பாய்ச்சல் பாய்ந்திருக்கும்.

அந்த அளவுக்கு பயங்கரமாய் இருந்தது நகரம்.

 

நானோ

கடையடியில் அவனைக் காத்தபடி.

பால்மணம் மாறாத சூரியன்

கடலுக்குள் இருந்து நடைபழகி வருவதற்குள்

எனது நகரம் கறுத்தது. 

 

இருந்தும் கண்களை மேயவிட்டுக் காத்திருந்தேன்.

எனது நினைவில் வரும்போது உம்மா

பழுக்காத மாங்காய்மாதிரி விறைந்த முகத்தோடு

இன்னொரு தரமும் அகதியாய் போவதற்கு

ஆயத்தங்கள் செய்துகொண்டிருந்த

காட்சிகள் வந்து போயின. 

 

அந்த மனிதன்

வந்தானோ போனானோ

நானறியேன்!

காற்று மட்டும் பொய்யையும் மெய்யையும் கலந்து

எதையோ சொல்லிக்கொண்டு போனது

காதில் விழுந்தது. 

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.