LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- நீதிக் கதைகள்

ஒரு மிட்டாய்!

     ஒரு சமயம் திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் ரயிலுக்காகக் காத்திருந்த பெரியார் (முழுப் பெயர்: ஈ.வெ.ராமசாமி) அங்கிருந்த கடை ஒன்றிற்குச் சென்றார்.ஒரு காலணா கொடுத்து மிட்டாய் கேட்டார்.


     வந்தவர் தந்தை பெரியார் என்பதை அறிந்த கடைக்காரர், காலணாவை வாங்கிக் கொண்டு கை நிறைய மிட்டாய்களை அள்ளிக் கொடுத்தார். மிட்டாய்களை வாங்கிய பெரியார் கடைக்காரனைப் பார்த்து, “எங்க ஊர்ல இவ்வளவு தரமாட்டேங்கறான். நீங்க கை நிறையத் தர்றீங்க.


     அப்ப இன்னொரு காலணாவுக்குத் தாங்க!” என்று கூறிவிட்டு இன்னொரு காலணாவை எடுத்து நீட்டினார். கடைக்காரர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார். கொடுக்கலாமா வேண்டாமா என்று நினைத்துத் தடுமாறினார். அப்போது பெரியார், “”ஐயா! வியாபாரத்துல வியாபாரியாத்தான் இருக்கணும். காலணாவுக்கு இவ்வளவு மிட்டாயை அள்ளிக் கொடுத்தா, உங்க வியாபாரம் என்னாகிறது.


     நானாக இருந்தாலும், எத்தனை வேண்டியவரா இருந்தாலும் உள்ளதைத்தான் தரணும்!” என்றார். பின்னர் ஒரே ஒரு மிட்டாயை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி மிட்டாய்களை கடைக்காரரிடமே கொடுத்துவிட்டார் தந்தை பெரியார். அவரது நியாயமான நடத்தையைக் கண்ட கடைக்காரர் பெரிதும் வியந்தார்.

by parthi   on 09 Mar 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
14-Apr-2020 08:06:48 nandhini said : Report Abuse
ஆச்சரியம் ஆனால் உண்மை.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.