LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- சொற்களின் பொருள் அறிவோம்

ஒருவர் மொழியறிந்தவரா, மொழியறிந்தவர் அல்லரா என்பதை இந்த ‘அல்ல’வை வைத்து எளிதில் கணிக்கலாம் !

பெரும்பாலும் எதிர்மறை வாக்கியங்கள் அமைக்காமல் நம்மால் எழுத முடியாது. அடிக்கடி இவற்றைப் பயன்படுத்துவோம். அவை எல்லாவற்றுக்கும் பொத்தம் பொதுவாக ‘அல்ல’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். எழுவாய் -அதாவது அல்ல என்று எதைக் கூற வருகிறோமோ அந்தப் பெயர்ச்சொல் - அஃறிணைப் பலவின்பாலாக இருந்தால் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

நாம் எல்லாவற்றுக்குமே குருட்டுப்பூனை விட்டத்தில் தாவினாற்போல் அல்ல போட்டு எழுதிக்கொண்டிருக்கிறோம். அவன் நம்பத்தகுந்தவன் அல்ல, அவர்கள் சொன்னது அதுவல்ல, அவர்களுக்குத் தெரியாததல்ல.

அல்லன், அல்லள், அல்லர், அல்ல, அன்று - என்னும் இந்த ஐந்து எதிர்மறை ஈறுகளை மனதில் கொள்ள வேண்டும். உயர்திணை ஒருமையில் ஆண்பாலுக்கு அல்லன் என்றும் பெண்பாலுக்கும் அல்லள் என்றும் உயர்திணைப் பன்மையில் அல்லர் என்றும் எழுத வேண்டும்.

அஃறிணைப் பன்மையில் மட்டுமே அல்ல என்று எழுதலாம். அது ஒருமையாக இருந்தால் அன்று எனல் வேண்டும்.

அவன் நல்லவன் அல்லன்
அவள் நல்லவள் அல்லள்
அவர்கள் நல்லவர்கள் அல்லர்
அவை நல்லவை அல்ல
அது நல்லது அன்று

இந்தப் பயன்பாட்டில் தெளிவான நிலையெடுக்கத் தெரியவில்லை என்றால் இல்லை என்பதை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தப் பார்க்கலாம். ஆனாலும் பொருள் தருவதில் இல்லை என்னும் ஈற்றுச்சொல் நுண்ணிய வேறுபாட்டுத் தொனியைக் காட்டும். அவன் நல்லவன் அல்லன் என்பது மாற்றி மறுக்கிறது. அவன் நல்லவன் இல்லை என்பது ஊன்றி நிறுவுகிற தொனியில் உள்ளது.

திராவிட இயக்க மேடைகளில் பிழையோ பிழையென இந்த அல்ல படும் அல்லல்களை ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

ஒருவர் மொழியறிந்தவரா, மொழியறிந்தவர் அல்லரா என்பதை இந்த ‘அல்ல’வை வைத்து எளிதில் கணிக்கலாம் !

 

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 17 Dec 2014  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
18-Dec-2014 06:48:23 ARULPRAKASH.A said : Report Abuse
Arumai
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.