விவசாயிகள் நமது சமூகத்தின் சொத்தாகும். அவர்களிடமிருந்துதான் அரசு நெல் கொள்முதல் செய்து வருகிறது. விவசாயிகளுக்கு அரசு வழங்கும் பணத்தை, இடையிலுள்ள சில நபர்கள் புகுந்து முறையாகக் கொடுப்பதில்லை எனப் புகார்கள் வருகின்றன. அவ்வாறு, விவசாயிகளை யாராவது ஏமாற்றினால், அவர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சி கொல்கத்தாவில் நேற்று நடந்த போது அதில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு காசோலைகளை வழங்கி, இவ்வாறு பேசினார்.
|