LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF
- மற்றவை

நமது வாழ்க்கையின் நல்லதும் கெட்டதும்

நமது எண்ணங்களின் அடிப்படையில் தான் ஒவ்வொரு காரியமும் நல்லதாகவும் கெட்டதாகவும் அமைகிறது. நமது மனதில் நல்ல எண்ணங்களும் உண்டாகும் சில சமயங்களில் கெட்ட எண்ணங்களும் உண்டாகும.

 

இந்த இரண்டு எண்ணங்களும் தெரிந்தோ தெரியாமலோ நாம்தான் காரணகர்த்தாவாகிறோம். நாம் வெளிப்படையாகச் சொல்லும் ஆசைகள் நல்லெண்ணங்களாக உருவெடுக்கிறது. நாம் ரகசியமாக மனதில் வைத்துக்கொள்ளும் கெட்ட ஆசைகள் தீய எண்ணங்களாக வடிவெடுக்கின்றன. இரவு வந்துவிட்டால் நாம் இருட்டிவிட்டதே என்று கவலைப்படுவதில்லை. ஒரு விளக்கை ஏற்றி வைத்தால் போதும் இருள் தானாகவே அகன்று விடும். அதேபோன்று நல்லெண்ணங்களுக்கு முக்கியமான இடம் கொடுத்துப் பழகினால் தீயவை தானாகவே மறைந்து விடும்.

 

எது நல்லது? எது கெட்டது? தாம் அதன் மூலமாக பெறுகின்ற உணர்ச்சியைப் பொறுத்து தான் அது அமைகிறது. என்னிடம் தோன்றும் எண்ணம் என்னைப் பற்றிய தற்பெருமையை பிறரிடம் பொறாமையை என்னுடைய சுயநலத்தைத் தூண்டி விட்டால் அவை கெட்டவை என்னிடம் ஏற்படும் எண்ணங்கள் பிறருடைய நன்மைக்காகச் சேவை செய்யும்படி என்னை எளியவனாக நினைக்க உதவும்படி உன்னுடைய செயலினால் எவருக்கும் கெடுதல் ஏற்படாதபடி அமையுமானால் அவை நல்லவையாகும்.

 

எனக்கு எல்லாம் வேண்டும் இன்னும் வேண்டும் என்று மேலும் மேலும் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பவர் எவ்வளவு செல்வங்களைப் பெற்றிருந்தாலும் அவன் ஏழைதான். எனக்கு எதுவும் வேண்டாம் என்னிடம் இருக்கும் சிறிதளவுள்ள பொருளையும் பிறருக்காகக் கொடுத்து விடுவேன் என்று சொல்லி செயல்படுகிறானோ அவன் பொருள் இல்லாவிட்டாலும் செல்வந்தன்தான்.

 

ஆக நாம் உலகத்தில் சுவைப்பவை தொடுபவை, உணர்பவை ஒவ்வொன்றையும் ஆண்டவன்தான் அளித்தான் என்பதை உணர்ந்து கொள்வோம். ஒரு முயற்சி சுயநலத்திற்காக அமையும் போது தீய எண்ணம் ஆகிவிடுகிறது அதுவே பொது நலத்திற்காக அமையும்போது நல்ல எண்ணம் ஆகிவிடுகிறது.

by Srichandra   on 21 Nov 2014  0 Comments
Tags: வாழ்க்கை   நமது வாழ்க்கை   நல்லது   கெட்டது           
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.