நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., பதவிகளுக்கான, 2,500 பணியிடங்கள் காலியாக உள்ளதாக, ராஜ்யசபாவில் மத்திய பணியாளர் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதில் ஐ.ஏ.எஸ்., பணியிடங்கள் மட்டும் 1,480ம், ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கான பணியிடங்கள், 1,093ம் காலியாக உள்ளன. ஐ.ஏ.எஸ்., பதவிக்கு மொத்தம் அங்கீகரிக்கப்பட்ட இடங்கள், 6,217 ஐ.பி.எஸ்., பதவிக்கு, 4,730. வளர்ச்சி திட்டங்கள் அதிகரிப்பு, பயிற்சி முடித்த அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவு போன்ற காரணங்களால் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
|