வயிறு நிறைய சாப்பிடுபவர்களுக்கு, உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படும் என மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். குறிப்பாக அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ஞாபக சக்தி குறையும் என்று சமீபத்திய ஆய்வு நிருபித்துள்ளது. இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டனர். 600 முதல் 1526 கலோரிகள் உண்பவர் முதல் குழுவாகவும், 1526 முதல் 2143 கலோரிகள் உண்பவர் இரண்டாவது குழுவாகவும், 2143 முதல் 6000 கலோரிகள் உண்பவர் மூன்றாவது குழுவாக வகைபடுத்தப்பட்டனர். இந்த மூன்று குழுவினரிடமும், ஒரு வினா- விடை கொடுக்கப்பட்டது. இதில் முதல் வகையைச் சேர்ந்தவர்கள் ஓரளவுக்கு விடையை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இரண்டாவது வகையினர் அதை விட சற்று குறைவான பதிலையே கொடுத்துள்ளனர். மூன்றாவது வகையினர் மிக மிகக்குறைவான கேள்விகளுக்கே பதில் கூறியுள்ளனர். அதனால் அவர்களுக்கு ஞாபக சக்தி குறைவு ஏற்பட்டுள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்தனர்.
அதிகம் சாப்பிடுவதால், நிரிழிவு நோய், மாரடைப்பு நோய், ஞாபக சக்தி குறைவு ஆகியவை ஏற்படலாம். எனவே வயிறு முட்ட சாப்பிடக் கூடாது. ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பது கணக்கல்ல. அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது என்பது தான் முக்கியம்.
நாற்பது வயதிற்கு மேல் உள்ளவர்கள், அதிகமான உணவு உட்கொள்வதை தவிர்த்து உணவு சாப்பிடும் வேளைகளை வேண்டுமானால் கூட்டிக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகம் சாப்பிட்டாலும் ஆபத்து. சாப்பிடாமல் இருந்தாலும் ஆபத்து. எனவே மிதமான உணவை தினசரி ஐந்து வேலைகள் சாப்பிட்டால் நல்லது என்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் அளவான சாப்பாடு, ஆரோக்கியமான வாழ்வு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
|