|
||||||||
ஓவியம் - மதிமுகிலன் |
||||||||
சிகப்பு விழுந்தது சில்லறையை சரிபார்த்தவள்
சுட்டெரிக்கும் சூரியனை
சற்றும் பொருட்படுத்தாமல்
சன்னல்களை தட்ட ஆரம்பித்தாள்
தொன்னூறு வினாடிகள்
தொளாயிரம் சிற்றுந்துகள்
தொட்டுத்தொட்டு கெஞ்சினாள்
தட்டிலும் விழுந்தன
தடப்போக்கர்களின் எரிச்சலுடன் சில சில்லரையும்
பச்சை விழுந்தது
பச்சிளங்குழந்தை புன்னகைத்தது
பசியாற்றினாள் படபடப்புடன்
பச்சை சற்றே மாற
பிச்சைத்தட்டுடன் மீண்டும் பனியில்
அருகில் கண்டதையாவும்
அறைநிமிடமென்று தலைப்பிட்டு
அனுப்பினேன் ஓவியப்போட்டிக்கு
அருமை என்றவர்கள்
ஆயிரமாயிரமாய் பரிசளித்தனர்
உறக்கம் வரவில்லை
உண்மைக்கு கிடைத்த பரிசால்
உரிமைகோர நேரமின்றி
உழைத்து கொண்டிருப்பவள்
உல்லமென்றும் காத்திருக்கும் சிகப்பு விழுவதற்காக……
-மதிமுகிலன் |
||||||||
by Mathimukilan on 27 Dec 2015 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|