LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கலைசைக்கோவை

பாங்கற்கூட்டம்

தலைவன் பாங்கனைச் சார்தல்.
44.
இந்துறை மாடக் கலைசைத் தியாகரை யேத்தலர்போல்
நைந்துநைந் தேங்கனெஞ் சேநந்த நண்பனை நண்ணிவருத்
தந்துடை யாயென்றித் தன்மைசொன் னாற்சுத்த தத்துவங்கள்
ஐந்து முபகரித் தாற்போலு மானந்த மாக்குவனே. (1)

பாங்கன் தலைவனை உற்றது வினாதல்
45.
வளைத்தனை யோபல மாமுனி மாற்றலர் மாய்ந்திடப்போர்
விளைத்தனை யோவன்றிக் கொத்துறு முத்தமிழ் வேலையின்வாய்த்
திளைத்தனை யோதென் கலைசைத் தியாகர் சிலம்பன்னதோள்
இளைத்தனை யோவிதென் னேயறை வாயென் னிறையவனே. (2)

தலைவன் உற்றதுரைத்தல்
46.
நெருங்கலை வாரிநஞ் சுண்ட தியாகர் நெடுங்கலைசை
தருங்கலை வாரி நிரம்பிய வென்மதி தண்ணறுங்கா
வருங்கலை வாரி னகிலமின் னார்முகில் வாயொளிப்ப
ஒருங்கலை வாரித யத்தினுற் றேனண்ப வோர்ந்துகொள்ளே. (3)

கற்றறி பாங்கன் கழறல்
47.
சீதக் கமலத் தடஞ்சூழ் கலைசைத் தியாகரருள்
வேதக் கடலி னெறியறி வேந்தற்கும் வேந்தவொரு
மாதக் கவலையுற் றேனென்று தேம்பிமெய் வாடன்மிக
நோதக்க தாலிது வோதிட்ப மானநின் ணுண்ணறிவே. (4)

கிழவோன் கழற்றெதிர் மறுத்தல்
48.
காரங் கிரீவர் கலசத் தியாகர் கலைசையன்னார்
ஆரங்கொள் வாயி னமிர்தமு ழூரு வரம்பையும்பொற்
றோங்க மோங்கு சுவர்க்கமுங் காணிற் சிலதவிந்த
வீரங்கள் பேசிய வாயைநன் னீரின் விளக்குவையே.

49.
விலைக்கே யெனைககொள் கலைசைத் தியாகர்வில் வெற்பொருநூல்
வலைக்கே மதுகைப் புலிதுவக் குண்டென்ன மாதொருத்தி
தலைக்கேறு தொங்கலிற் கட்டுண்டு நெஞ்சந் தளர்ந்தனைநன்
னிலைக்கே ழுலகினு மொப்பின்றி நின்ற நெடுந்தகையே. (6)

கிழவோன் வேட்கைதாங்கற்கருமை சாற்றல்
50.
திடத்தாய் சிலத கலைசைத் தியாகர் செழுஞ்சிலம்பின்
இடத்தா ரணங்கென் னறிவாம் பயமுற்று மேந்துதனக்
குடத்தான் முகந்துண்ண வற்றிய நானந்தக் கொம்பர்கடி
தடத்தாடி னாலன்றி யாறாதென் காமத் தழலிதுவே. (7)

பாங்கன் தன்மனத்தழுங்கல்
51.
மைந்தோதி வில்லர் கலைசைத் தியாகர் வளர்சடைமேல்
இந்தோவில் லோநுத றந்தோமின் னோவிடை யென்னுயிர்க்குப்
பந்தோவெற் ‍போதன நந்தோ மிடறென்று பன்னிப்பன்னி
அந்தோ புலம்புறு மாலண்ணன் மொய்ம்பெங் கடங்கியதே. (8)

பாங்கன் தலைவனோடழுங்கல்
52.
ஆளா வெனைக்கொள் கலைசைத் தியாகரை யாதரியார்
தோளாச் சுரைபுரை காதிற் புகாதசொற் போலவென்சொல்
கேளா தொழித்தது மென்றீ வினைப்பய ன்கேழின்மன்னா
தாளார மேருத் தளர்ந்தா லெவரிங்குத் தாங்குவரே. (9)

பாங்கன் எவ்விடத் தெவ்வியற்றென்றல்.
53.
நாலாறு நல்குங் கலைசைத் தியாகர்நன் னாட்டொழுகும்
பாலாறு வந்திழி நந்திவெற் போகொல்லிப் பண்பயின்று
காலாறு சுற்றுங் கமலவைப் போவிடங் காவிலுன்பால்
மாலாறு வைத்தவட் கென்வண்ண மன்ன வழங்கெனக்கே. 10

தலைவன் அஃது இவ்விடத் திவ்வியற்றென்றல்.
54.
சரமே விழிகுஞ் சரமே தடமுலை தண்சதபத்
திரமே முகஞ்சித் திரமே திருவுரு சேர்ந்தவர்க்கு
வரமே யளிக்குங் கலசத் தியாகர்வண் கோவிருந்த
புரமே யிடமுன்னை நாளென்னை வாழ்வித்த பொற்றொடிக்கே.11

இறைவனைத் தேற்றல்.
55.
சற்றிடம் யான்சென் றனையாளைக் கண்டுனைச் சார்தருவேன்
நற்றிடங் கொண்டிங்கு நிற்றிமன் னாமுன்னை நாட்பாவை
உற்றிடஞ் சென்று கலைசைத் தியாக ருரைத்தருளிச்
சொற்றிடங்கொண்டுவரல்பார்த்து நின்றவன்றொண்டரொத்தே. 12

குறிவழிச் சேறல்.
56.
ஆடுங் கொலோசுனை பாடுங் கொலோவிசை யம்மனைபந்
தாடுங் கொலோமலர் சூடுங் கொலோவகி லாண்டமுய்ய
ஆடுங் கருணைக் கலைசைத் தியாக ரசலத்தர்கொண்
டாடுஞ் சயசிங்கம் வாடும் படி‍செய் தகன்மயிலே. 13

இறைவியைக் காண்டல்.
57.
பிடியே நடைகைப் பிடியே யிடைகுழற் பின்னலரா
மடியே வடமும் மடியே யதிலுண்டு மைக்கணஞ்சேல்
அடியேனை யாளுங் கலைசைத் தியாகர்வெற் பண்ணல்சொன்ன
படியே தெரிசித்த லாலிவ ளேயந்தப் பைங்கொடியே. 14

இகழ்ந்ததற் கிரங்கல்
58.
ஈட்டற மோங்கிட வேந்துநம் வேந்த ரெறிதிரைநீர்க்
கோட்டகஞ் சூழ்ந்த கலைசைத் தியாகர் குலவுதொண்டை
நாட்டணி யன்னவர் நாட்டவை நாட்டத்தை நாட்டப்பட்டால்
வாட்ட முறாரல்லர் முன்பெள் ளியதென் மதியின்மையே. 15

தலைவனை வியத்தல்.
59.
சேற்றம் புயத்தடஞ் சூழுங் கலைசைத் தியாகர்வெற்பில்
தோற்றந் தருமென் முலையாள் விழியெனுஞ் சூருடைவெங்
கூற்றங் குதித்தெதிர் பாயவஞ் சாதுபல் கூற்றுக்களால்
மாற்றந்த மந்திர மெவ்வாறு பெற்றனன் மன்னவனே. 16

தலைவியை வியத்தல்.
60.
பணியா பரணர் கலைசைத் தியாகர் பனிவரைமேல்
அணியார் சுடரிரு வேலேந் தியநம் மரசிருகண்
மணியாடு பாவையின் மேன்மைய ரேயிவர் வாய்ந்ததிருத்
தணியா ரருளென்ன வேதணிப் பாரண்ண றாபத்தையே. 17

தலைவன்றனக்குத் தலைவி நிலை கூறல்.
61.
திண்டே ருலாவு மறுகார் கலைசைத் தியாகர்வெற்பில்
தண்டே னலங்கலந் ‍தோளாய் கலைக்கடற் சாரமுற்றும்
உண்டே வருமொர் முகில்பார்த் தொருவல்லி ‍யொல்கிநிற்கக்
கண்டேன்பண் டேர்தரு வண்டேறி வாழுமக் காவகத்தே. 18

தலைவன் சேறல்.
62.
வலித்தென்னை யாளுங் கலைசைத் தியாகர் வரைப்புறத்தே
சலித்தலின் றென்மனத் தாமரை யேந்திய தாண்மலர்மேற்
கலித்திடு கிண்கிணிக் கொத்துஞ் சிலம்புங் கலின்கலினென்
றொலித்திடத்தான்றனிபாடுங்கொலோவென்னுயிர்த்துணையே. 19

தலைவன் தலைவியைக்காண்டல்.
63.
எங்களை கண்டென் கலைசைச் சிதம்பர வீசர்வெற்பில்
திங்களின் வாயெழு வெண்கதி ராலென்றன் சித்தவிடா
யுங்கடுங் காமப் பிணியுந் தணித்‍தென் னுயிர்தனியே
மங்கள மின்கொடி போனின்ற வாவிந்த வார்பொழிற்கே 20

கலவியின் மகிழ்தல்.
64.
பத்திக் கிரங்குங் கலைசைத் தியாகர் பனிவரைமேல்
எத்திக்குஞ் சூழ்தரு கூர்ங்கணல் லாரிவ ரீர்ங்கனிவாய்த்
தித்திக்குமட்டுத்தெவிட்டா துண்டேனுக்குச்சேரிற்கைப்பாய்த்
தத்திக் குமட்டு மருந்தாஞ் சுரருண்ணுந் தண்ணமுதே. 21

புகழ்தல்.
65.
எம்பாவை யேற்குங் கலைசைத் தியாக ரெடுத்து முன்னாள்
தம்பா லிருந்த கலசத்தை வேதன் றனக்குணர்ந்துன்
அம்பார மென்முலைக் கொப்பின்மை யாமென் றளித்து விட்டால்
கொம்பான நுண்ணிடை யாயினி நேரென்ன கூறுவதே. 22

தவைவியைப் பாங்கியொடுவருகெனப் பகர்தல்.
66.
தேங்கிய நீரொலி யோங்குங் கலைசைத் தியாகர்கையில்
தாங்கிய மானு முமையவ ளேந்து தனிக்கிளியும்
நீங்கியிங் கென்னெதிர் வந்தா லெனச்சென்று நீவருங்கால்
பாங்கிதன் னோடிங் கினிவர வேண்டும் பனிமொழியே. 23

தலைவியைப் பாங்கிற் கூட்டல்.
67.
சிற்பர னாரெஞ் சிதம்பர வீசர் திருக்க‍லைசைப்
பற்பல போதுகள் சேர்ந்துழித் தெய்வப் பரிமளஞ்சேர்
கற்பகப் போதொன்று சார்ந்தது போலக் கனங்குழையாய்
வெற்பக நீசென்று நின்னெழி லாயத்தை மேவுகவே. 24

இதுவுமது.
68.
காராருங் கண்டர் கலசத் தியாகர் கலைசைவெற்பில்
ஓராவி தன்னுட் பலபூ மலர்ந்திட் டுறநடுவண்
சீரார்செந் தாமரை யொன்றலர்ந் தென்னத் தெரியிழைநீ
மாராய நின்மங்கை மாராயந் தன்னை மருவுகவே. 25

by Swathi   on 19 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.