LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கலைசைக்கோவை

பாங்கியிற் கூட்டம்

தலைவன் உட்கோள் சாற்றல்.
94.
செங்கே ழிதழிக் கலைசைத் தியாகர் சிலம்பிலுமக்
கிங்கேய் கவண்வைத் தெறிவான்சிந் தாமணி யென்பதுவும்
சங்கேந்தி மார்பின் மணியுங் கொணர்ந்து தரவும்வல்லேன்
பங்கே ருகமனை யீரென்னை யாளும் பணிவிடைக்கே. (1)

பாங்கி குலமுறை கிளத்தல்.
95.
நாரங்கொள் வேணிக் கலைசைத் தியாகர்நன் னாட்டிறைவா
ஆரங்கள் வேட்டவர் நற்சுகந் தாதி யணிவரல்லாற்
பீரந் தருமலர் வேண்டு வரோநின் பெரும்பிணையல்
பாரம் பரியமன் றாற்சூட்ட லென்குறப் பைங்கொடிக்கே. (2)

தலைவன் தலைவிதன்னை உயர்த்தல்.
96.
மருப்பொதி சோலைக் கலைசைத் தியாகர் வரைமடவீர்
விருப்பொ டருண கிரிநாத ரன்று விதம்விதமாப்
பொருப்புறை வேலவர் வள்ளியொ டாடிறும் பூதுரைத்த
திருப்புகழ் கேட்டறி யீரோ விஃதென்னை செப்பியதே. (3)

பாங்கி அறியாள்போன்று வினாதல்.
97.
ஆடிய பாதர் கலைசைக் தியாகர்வெற் பாடருவி
ஓடிய பைஞ்சுனைச் செங்கழு நீர்பறித் தொண்குறிஞ்சி
பாடியங் காவிற் பயிலுமின் னார்களெம் பார்த்திபனே
கோடியின் மேலுளர் யாருன துள்ளங் குழைத்தவரே. (4)

இறையோன் இறைவிதன்மை இயம்பல்.
98.
மகமேரு வில்லர் கலசத் தியாகர் வளர்கலைசைச்
சுகமே மொழிகிஞ் சுகமே யிதழா சுகம்விழிபன்
னகமே மருங்கு னகமே தனதட நன்றிகொன்றார்
அகமே குழன்முண் டகமேபொற் பாதமென் னாருயிர்க்கே. 5

பாங்கி தலைவியருமை சாற்றல்.
99.
வெள்ளாறு சூடுஞ் சிதம்பர வீசர் வியன்கலைசை
வள்ளா லெமது நகராச னீன்ற வரமயிலைத்
தெள்ளார் கலியினிற் றிங்களின் பின்வரு சீரணங்கை
எள்ளா வெளியளென் றெண்ணுதி போலு மிதயத்திலே. 6

தலைவன் தலைவி இன்றியமையாமை இயம்பல்.
100.
அரக்கவி ராம்பலஞ் செவ்வா யணங்கணி யார்கலைசை
புரக்கவல் லாரெஞ் சிதம்பர வீசர்மெய்ப் போகமென்னும்
சரக்கறை யாயின தையலை நீதமி யேற்களிக்க
இரக்கமுன் பால்வரு மேனிற்கு மாலுயி ரென்றனுக்கே. 7

பாங்கி நின்குறை நீயே சென்றுரையென்றல்.
101.
அண்டர்கொண் டாடுங் கலைசைத் தியாக ரருணைவெற்பா
வண்டலர் போதகந் தானேசென் றாடும் வகையதுபோல்
கொண்டலங்கோதைக்குநீயேசென்றுள்ளக்குறையையெல்லாம்
கண்டறை மோவெம்ம னோரின்ன கூறல் கடவதன்றே. 8

பாங்கியைத் தலைவன் பழித்தல்.
102.
தோட்டார்குழலிக் கென்சோர்வையெல்லாஞ் சொல்லித்தோயுமின்பம்
கூட்டா யெனவுன்னை யானிரந் தேனேதிர் கூறித்தொண்டை
நாட்டார் கலைசைத் தியாகேசர் பாதத்தை நாடிப்பற்ற
மாட்டார் நிலையையொத் தாயிது வோவுன் மதிநுட்பமே. 9

பாங்கி பேதைமை ஊட்டல்.
103.
இதைத்குறு வேலிக ணாட்டவெண் கோட்டுக் கிருங்கரியை
வதைக்குந்தன் கேளிர் மறம்போல வஞ்சியும் வன்சமனை
உதைக்குஞ் சரணர் கலைசைத் தியாகரை யுன்னலர்போல்
பதைக்கும் பிறரனுக் கந்தெரி யாத பரிசினளே. 10

காதலன் தலைவி மூதறிவுடைமை மொழிதல்.
104.
ஆலைக் கழனிக் கலைசைத் தியாக ரணிவரைமேல்
சோலைக் கிடைவந்து சோர்ந்து நின்றேற்குச் சுவைமொழியாம்
பாலைப் பவளவள் ளத்தூ டளித்துப் பசிதணித்த
மாலைக் குழலியை நீயறி யாளெனன் மாலுரையே. 11

பாங்கி முன்னுறுபுணர்ச்சி முறையுறக் கூறல்.
105.
தேனேறுய் யானக் கலைசைத் தியாகர் சிவகங்கைநீர்
தானேசென் றாடினன் பின்பாட வோர்துணை தான்கொள்வனோ
மீனேயு நோக்கி யுனக்கன்ன ளாயிடின் மேலும்வெற்பா
ஊனே யுயிரென்ன வொன்றாகி யொன்றுக வுங்களிலே. 12

தலைவன் தன்னிலை சாற்றல்.
106.
தென்னார் கலைசைத் தியாகேச ருக்குத் திருவசந்த
நன்னாளிற் சீதள வுற்சவஞ் செய்பவர் நல்லன்புபோல்
இந்நா ளெமக்கன்பு வைத்துப சாந்த மெதுசெய்யினும்
என்னா மின்னாகந் தழுவச்செய் யாவிடி னேந்திழையே. 13

பாங்கி உலகியல் உரைத்தல்.
107.
கட்டா ரழகியைக் காமுறி னீயுண்மை காட்டிருபத்
தெட்டா கமஞ்சொல் கலைசைத் தியாக ரிமயப்பெண்ணைத்
தொட்டானந் தத்திரு நாணணிந் தாங்கிந்தத் தொல்லுலகில்
பட்டாங்கி லுள்ள படியே வரைந்துகொள் பார்த்திபனே. 14

தலைமகன் மறுத்தல்.
108.
திருந்தார் புரந்தழற் கிட்டார் கலைசைத் தியாகர்வெற்பில்
பெருந்தாகங் கொண்டுழல் வானைக் குளந்தொட்டுப்பின்புதுநீர்
அருந்தாங் கெனச்சொன்ன வாதர வாகு மணங்கனையாய்
வருந்தாதம் மாதை மணம்புரிந் தாடென்ற வாய்மொழியே. 15

பாங்கி அஞ்சி அச்சுறுத்தல்.
109.
பாங்காடும் வேட்டைக் கெமர்வரு வாரவர் பார்க்கின்வெகு
தீங்காய் விளையு நிசிவந்த தியாங்களுஞ் செல்குவமால்
பூங்காவி லேறுங் கலைசைத் தியாகர் பொருப்பிலினி
ஏங்காம லிப்புனம் விட்டைய நீயு மெழுந்தருளே. 16

தலைவன் கையுறை புகழ்தல்.
110.
தன்கையிற் கங்கொள் கலைசைக் கலசவு தாரன்வெற்பில்
மின்கையிற் கொண்டு தரிக்கத் தகுமொரு வேடன்கண்ட
தென்கயி லாயம் வடகயி லாயத்துஞ் சீர்த்திகொண்ட
தென்கயிற் பூந்தழைக் கொப்பாந் தழையில்லை யெங்கணுமே. 17

பாங்கி கையுறை மறுத்தல்.
111.
வானாடர் சூழுங் கலைசைத் தியாகர் வளரும்வெற்பா
கானார்நின் கைத்தழை மானாள்பொற் றேரல்குற் காணிலெமர்
ஆனா தயிர்ப்பரிக் குன்றத்த தன்றிதென் றையுறவு
நானா விதங்கொள்வ ராலிது வாங்குத னன்மையன்றே. 18

ஆற்றா நெஞ்சினோடு அவன் புலத்தல்.
112.
முருகுஞ் சுரும்புஞ் செறிகுழ லாள்பத மூன்றுமன்பு
பெருகுநம் பாலென் றிருந்தநெஞ் சேநடம் பேரன்பர்கண்
டுருகும் படிசெய் கலைசைத் தியாகரை யுன்னலர்போல்
கருகும் படிநம்மி னிம்மாந் தழைசெய் கருமமென்னே. 19

பாங்கி ஆற்றுவித்தகற்றல்.
113.
தெருள்வான் கலைசைத் தியாகேச ரன்பரிற் செப்பியம்மான்
அருள்வாங் குவனுந்தி யெல்லா யிரங்கரத் தாலடைந்த
இருள்வாங்கி யாங்கெழும் போதிங்கு வாவந் திரவலருன்
பொருள்வாங்கு தன்மையின் வாங்கிக் கொள்வேனின் கைப்பூந்தழையே. 20

மடலே பொருளென மதித்தல்.
114.
அடலேற தேறுங் கலைசைத் தியாக ரருட்பணிக்காம்
உடலே றுயிரென்ன வென்னுயிர்க் கோருயி ராவிருந்தார்
கடலேய் விழிதந்த காமக் களிமயக் கத்தைநெஞ்சே
மடலே யமிர்தசஞ் சீவினி யாக்கொண்டு மாற்றுவமே. 21

பாங்கிக்கு உலகின்மேல்வைத்து உரைத்தல்.
115.
வேய்வார்மென் றோளியர் காதற் கடலிடை வீழ்ந்துமிகச்
சாய்வார் கிழிபிடித் தூர்வார் மடல்பின் றடங்குவடு
பாய்வா ரிமாசல ராசன் குமாரி பணைமுலைகள்
தோய்வார் கலைசைத் தியாகேசர் வெற்பிலஞ் சொற்கிளியே 22

‍அதனைத் தன்மேல்வைத்துச் சாற்றல்.
116.
காசியின் மேன்மைக் கலைசைத் தியாகர்மெய்க் காட்சியைப்போல்
பூசிவெண் ணீறெருக் கம்பூ வணிந்தென்பு பூண்டுநல்லாய்
பாசிழை யார்வடி வார்படங் காட்டிப் பனைமடலாம்
வாசியை நாளையுன் னூர்வயி னூர்ந்து வருகுவனே. 23

பாங்கி தலைமகளவயவத்தருமை சாற்றல்.
117.
மத்தம் புனையுங் கலைசைத் தியாகர் வரைக்கரசே
நத்தஞ்சு கந்தரத் தாள்கருங் கூந்த னறையெழுதி
முத்தம் பதிந்த முறுவற்செவ் வாயின் மொழிவரைந்திச்
சித்தம் பரநடுத் தீட்டுவ ரோவந்தத் தேவருமே. 24

தலைமகன் தன்னைத்தானே புகழ்தல்.
118.
நெறித்தமெல் லோதிநல் லீரென்றன் வல்லவ நீர்மைசற்றும்
குறித்தறி யீர்திருத் தொட்டிக் கலையிற் குளிர்ந்தநிலா
எறித்தமின் வேணிச் சிதம்பர வீசர்தம் மின்னருளால்
பொறித்தபொற் பாவையு ளாவியுங் கூடப் புகுவிப்பனே. (25)

அலர்முலைப் பாங்கி அருளியல் கிளத்தல்.
119.
அன்றிலம் பிள்ளையுந் தூக்கணம் புள்ளினத் தஞ்சினையும்
ஒன்றிய வெண்குரு கின்முட்டை கூட்டொடு மோங்கும்வெற்பா
மன்றினின் றாடுங் கலைசைத் தியாகரை வாழ்த்தலர்போற்
கொன்றிப் பனைமடல் கொள்ளார் குணப்பெருங்குன் றத்தரே. (26)

பாங்கி கொண்டுநிலை கூறல்.
120.
எல்லாந் தெரிக்குமென் சொல்லா லினியந்த விந்திரையின்
நல்லார்புல்லாரெனினாண்பெண்ண தாய்மண்ணினண்ணிநிற்கும்
புல்லார்நல் லாரெனக் கொண்டுன் குறைமுடி பூங்கலைசை
அல்லார் மிடற்றர் சிதம்பர வீசர்வெற் பாதிபனே. (27)

தலைவி இளமைத்தன்மை பாங்கி தலைவற்குணர்த்தல்.
121.
கற்றில கண்கள் களவுகண் மென்முலை காண்பதற்குச்
சற்றில வாம்பலி னாம்பற் பிறந்தில தண்கலைசை
நற்றியா கேசர்நன் னாட குறுமுளை நாட்டுகொம்பர்
பற்றிடு மோவென்கொல் பேதைக் கிரந்து பகர்கின்றதே. (28)

தலைவன் தலைவி வருத்தியவண்ண முரைத்தல்.
122.
களியானைத் தோலர் கலசத் தியாகர் கழலிறைஞ்சும்
அளியார்க் களிக்குங் கலைசையன் னாய்சிறி யானொருசிற்
றுளியாற் சிலையின் வலிகுறைத் தாங்கன் றுனதுயிராம்
கிளியார் மொழிவிழி வேலாலென் னுள்ளங் கிழித்தனளே. (29)

பாங்கி செவ்வியருமை செப்பல்.
123.
வாரா ளொருவிளை யாட்டினுக் கெங்கும் வளர்த்தகிள்ளை
பாராள் கலைசைத் தியாகர்வெற் பாமதன் பார்த்துருகும்
ஏராள்பொன்னூசலி லேறாளென் னோநினைந் தெங்களையும்
சேரா ளவளுக் கடியேனெவ் வாறு தெரிவிப்பதே. (30)

தலைவன் செவ்வியெளிமை செப்பல்.
124.
கொப்பிடு மஞ்செவிப் பஞ்சடி யாயருள் கூர்ந்தெனையும்
கைப்பிடித் தாளுங் கலைசைத் தியாகர் கயிலைவெற்பில்
மைப்பிடி போனடை மானுக்கு நான்வந்த வாறுசற்றே
செப்பிடிற் சேர்த்துத்தன் செப்பிடு சாந்தமுன் செப்பிடுமே. (31)

பாங்கி என்னை மறைத்தபின் எளிதென நகுதல்.
125.
நன்னறும் போது நெடுநாரு மோர்வயி னண்ணிடினும்
இன்னணி கூரப் பிணைப்பாரில் லாம லிணைந்தொன்றுமோ
பின்னக மோலிக் கலைசைத் தியாகர் பெரியவெற்பா
நின்னகத் தெண்ணமற் றென்னையல் லாம னிறைவுறுமே. 32

‍அந்நகை பொறாது அவன் புலம்பல்.
126.
நிழலார் மழுவர் கலைசைத் தியாகர் நெடுங்கிரிமேல்
குழலார் மொழிமட வாடந்த காமக் கொடுங்கனல்கூர்ந்
தழலாயுள் வேசறும் வேலையி னீயெனை யாற்றலின்றித்
தழலா கியநகை நெய்தனைப் பெய்தனை தாழ்குழலே. 33

பாங்கி தலைவனைத் தேற்றல்.
127.
பன்னூறங் கையகத் தெய்தினும் வாய்மைப் பயன்றருமோர்
நன்னூல் வழிச்செல்வர் போற்பலர் பாங்கியர் ஞாங்கருற்றும்
என்னூ தியச்சொல் வழியெம் பிராட்டி யிசைந்து றுமால்
பொன்னூர் கலைசைத் தியாகர்வெற் பாவுறல் புன்கணையே. 34

பாங்கி கையுறை யேற்றல்.
128.
அக்கணப் பன்னெம் மாபோ னொருவன்முன் னாதரித்த
தெக்கண மாகயி லாயத்திற் றோன்றுஞ் சிறப்பதனால்
முக்கண ரெங்கள் கலைசைத் தியாகரை மோகிப்பர்போல்
இக்கண மேற்பன்மன் னாநின்கை மாந்தழை யேந்திழைக்கே. 35

கிழவோன்ஆற்றல்.
129.
மந்திர ரூபர் கலைசைத் தியாகர வளரருள்போல்
தந்திர மோங்கிய பாங்கிதன் வாண்முகத் தண்மதிபார்த்
திந்திரன் வாழ்வுந் துரும்பாக வெண்ணியின் றென்னிதயம்
சந்திர னைக்கண் டுவந்த சகோரந் தனையொத்ததே. 36

இறைவன்றனக்குக் குறைநேர்பாங்கி இறைவிக்கு
அவன்குறையுணர்த்தல்.
130.
கல்லாரக் கண்ணி கலசத் தியாகர் கலைசைவெற்பில்
வல்லா ரொருவர் வருவர்வந் தாலொன்றும் வாய்திறந்து
சொல்லாரென் கண்ணெதிர் நிற்பாரப் பாற்புனச் சூழல்விட்டுச்
செல்லார் தழைகளெல் லாந்தரு வாரென் செயத்தக்கதே. 37

இறைவி அறியாள்போன்று குறியாள் கூறல்.
131.
நாகந் திசைகொள் கலைசைத் தியாகரென் னாதர்நந்தி
நாகந் தனின்முனி வோர்வாழ் குகைக்கு நயந்துமத
நாகங்கை யான்மயிற் றோகை யலகிட்டு நன்னுதலாய்
நாகந் தருசெம் மணிவிளக் கேற்றிடு நாடொறுமே. 38

132.
மைந்தானை யூருங் கலைசைத் தியாகர் வரையினிற்கூர்
அந்தானை யொண்கண்ணி யுன்மேல் விருப்பின னாகிமதம்
சிந்தானை யொன்றிங்கு வந்ததுண் டோவெனத் தேடியன்று
வந்தானை யின்றுகண் டேன்புனத் தூடென் மறைப்பதுவே. 39

பாங்கியைத்(?) தலைவி மறைத்தல்.
133.
மன்றாட வல்ல கலைசைத் தியாகர் வரைமங்கைதீங்
கொன்றாத தொண்டைநன் னாட்டிற் றழைகைக்கொண் டுங்கொதுங்கி
நின்றார் தமைநம் புனத்தய லேகண்டு நீமதித்தல்
நன்றா விருந்த துனக்குமுன் சொற்கு நடுவின்மையே. 40

பாங்கி என்னை மறைப்பது என்னெனத்தழால்.
134.
அளிக்குங்கண் ணாளர் கலைசைத் தியாகருக் கன்பரைப்போல்
தெளிக்குமென் சொன்னயம் பார்த்துமுன் கண்ணருட் சீதவெள்ளம்
குளிக்குந் தவமுடை யேன்றனக் குண்மைக் குறிப்புணர்த்தா
தொளிக்குங் கருத்தென்னை யென்னுயி ராகிய வொண்ணுதலே. 41

பாங்கி கையுறை புகழ்தல்.
135.
மலையத் தகுவன யாரென்ன கூறினு மாதர்நல்லாய்
மலையத் தகுவன வல்லநம் மன்பர்க்கு வாய்த்தனவ
மலையத்தர் நித்தர் கலைசைத் தியாகர் மகிழ்ந்ததமிழ்
மலையத் தகும்பிட்டுத் தொட்டிந்த வார மருத்தழையே. 42

தோழி கிழவோன் துயர்நிலை கிளத்தல்.
136.
நடிக்குந் தயாளர் கலைசைத் தியாகர்பொன் னாகத்தந்தார்
முடிக்குமைம் பாலி யிறாற்றிரள் கீண்டு முருகையுரல்
அடிக்குஞ் சரம்பிடிக் கூட்டுதல் பார்த்தன் றசுரருயிர்
குடிக்குமஞ் சேயனை யானெனைப் பார்த்துக் குழைந்திடுமே. 43

மறுத்தற் கருமை மாட்டல்.
137.
தீயாடு செங்கைத் தலத்தார் கலைசைத் தியாகர்வெற்பர்
ஓயாமற் றந்த தழைக்கோ ரளவில்லை யூங்கவர்க்கென்
வாயாரச் சொன்னபொய்க் குந்தொகை யின்றிந்த மட்டுமினிப்
பேயாடல் பார்க்கினும் பாரே னவரிடர் பெண்ணமுதே. 44

தலைவன்குறிப்புவேறாக நெறிப்படக்கூறல்.
138.
செப்பனை வோர்களுங் காணக் கலைசைத் தியாகவெங்கள்.(?)
அப்பனை வேண்டி யருக்கென்பு நீறணிந் தண்ணலவன்
ஒப்பனை வல்லி யுதியன் பகைவந் துதித்திடவே
இப்பனைகொள்ளுங்கொ‍லோவென்னவோ பின்னுமெண்ணுவதே. 45

தோழி தலைவியை முனிதல்.
139.
கைப்பாகும் பேரலர் வாராது காத்துன் கருத்தின்வழி
தப்பாம னிற்பவர்க் கெம்பெரு மாட்டி தயாநிறைத்து
முப்பாழு நீக்குங் கலைசைத் தியாகரை முன்னலர்போல்
இப்பாவி சொன்னசொற் றீங்கும் பொறுத்தொழி யென்றனையே. 46

தலைவி பாங்கியை முனிதல்.
140.
சுற்றம் பரிசனத் தன்புடை நீதுள வோன்மறையைப்
பெற்றம் பரிகொள் கலைசைத் தியாகர் பிறங்கலன்பர்
அற்றம் பரிவொடு சொற்றாய் சொனதறி யாமையென்றென்
குற்றம் பரிகரி யென்றா யெல்லாமென் குறையென்பதே. 47

தலைவி கையுறையேற்றல்.
141.
ஊரு வரத்தழை கொண்டணி யாவிடி னூடிமடல்
ஊருவர் மன்னர் தழையுடுத் தாலல ரோதியிந்த
ஊருவர்ப் பாமென் கலைசைத் தியாகர்வில் ‍லோதிநல்லாய்
ஊருவர் நீரலர் தீங்கரும் பாங்கை யுறைநமக்கே. 48

இறைவி கையுறை ஏற்றமை பாங்கி இறைவற் குணர்த்தல்.
142.
அலைமேல் வருமங்கை யான்போ யளித்தலு மங்கைக்கொண்டு
தலைமேற் கொண்டேபின் கலைசைத் தியாகர் தமனியமா
மலைமேற்செங்கோடலுங்கொண்டலுங் கண்டென வண்டழையை
முலைமே லணைத்துக் கொண் டாடிய மோக மொழிவரிதே. 49

பாங்கி தலைமகற்குக் குறியிடங் கூறல்.
143.
கருப்பாலை யார்க்குங் கலைசைத் தியாகர் கயிலைவெற்பா
திருப்பாற் கடலிடை மால்கண் வளருஞ் சிறப்பதுபோல்
உருப்பாய் பளிக்கறை மேனீலக் கற்சுனை யொன்றுளதால்
விருப்பார யாங்கள் பகல்விளை யாடும் வியலிடமே. 50

பாங்கி குறியிடத்திறைவியைக்கொண்டு சேறல்.
144.
காவியப் பாக்கொள் கலைசைத் தியாகர் கனகமன்றுள்
ஓவியப் பாவையொப் பாய்சுனை மூழ்கி யுழைகிடந்த
ஆவியப் பானல்கொய் தம்மாந் தளிர்பறித் தங்ஙனமோர்
மாவியப் பார்தரு செம்மலை நோக்குவம் வாவிரைந்தே. 51

பாங்கி தலைவியைக்குறியிடத்துய்த்து நீங்கல்.
145.
திகிரிநின் றோட்குடைந் தேயுகு முத்தமுன் சீறடிக்கே
திகிரியம் பாறை யுறுத்துமிங் கேநிற்க சென்றுமுன்னான்
திகிரியந் தேரல்கு லாய்தென் கலைசைத் தியாகர்நந்தித்
திகிரியஞ் சாரல் வழிசீத் தொதுக்கித் திரும்புவனே. 52

இ‍றைவி இறையோனிடத் தெதிர்ப்படுதல்.
146.
நந்தாத செல்வக் கலைசைத் தியாகரை நாடிமுன்னான்
சிந்தா குலமறப் பூசித்த புண்ணியந் தேம்பொழில்வாய்க்
கந்தாவ தின்றி வறியேன் றவித்திடு காலத்தென்வாய்
ஐந்தாலுங் கொள்ள‍வொர் தெள்ளமிர் தப்பிழம் பாய்நின்றதே. 53

புணர்ச்சியின் மகிழ்தல்
147.
மாலா தரிக்குங் கலைசைத் தியாகர் வரத்தின்வரும்
பாலா றுடனொரு தேனாறு வந்தொன்று பட்டிடினும்
வேலா வலயத்தின் மேலாம் விருப்புடை யேற்களித்த
ஆலால மன்னகண் ணாளிதழ்த் தேனையொப் பாவதின்றே. 54

புகழ்தல்.
148.
தண்டக நாடர் கலைசைத் தியாகர் சராசனமாக்
கொண்டபொன் மேருவிற் றாரகை சூழ்ந்தெனக் கூர்ந்திலகும்
வண்டர ளத் தொடை சேர்முலை யீருங்கள் வாயினின்சொற்
கண்டதன் பின்னல்ல வோகண்டு நாளுங் கரைகின்றதே. 55

தலைமகன் தலைமகளை ஆயத்துவிடுத்தல்.
149.
அரணங்கள் சூழ்தென் கலைசைத் தியாகர்தம் மன்பருக்கே
சரணபத் மங்களைத் தந்தாளு மீசர் தடங்கிரிமேல்
பிரணவ மந்திரங் கட்குமுன் னாநிற்கும் பேறதுபோல்
திரணவ ரத்னமன் னாயுன தாயஞ் சிவணுகவே. 56

பாங்கி தலைவியைச்சார்ந்து கையுறைகாட்டல்.
150.
தோகாயுன் மூரற்கு நேரற்ற வாரந் துடைத்தகற்றிப்
பாகாயசொல்லிநின்மெய்க்குமங்கைக்கும்வெம்பார்வைக்குநேர்
ஆகாவ சோகரிந் தம்புய நீலங்கொய் தியான்கொணர்ந்தேன்
நீகாண் கலைசைத் தியாகேசர் நீண்முது குன்றினின்றே. 57

பாங்கி தலைவியைப் பாங்கிற் கூட்டல்.
151.
பாலாம் பகத்தர் கலைசைத் தியாகர் பனிவரைமேல்
பாலார் மொழிபல் பரிமளப் போது பறித்துனதைம்
பாலாரச் சூட்டுபு சித்திரித் தேனினிப் பண்புடனிப்
பாலாசி னீங்கிச்செல் வாம்நம தாயம் பயிலிடமே. 58

பாங்கி தலைவியை நீங்கித் தலைவற்கு ஓம்படைசாற்றல்.
152.
இத்திரு வின்பொருட் டேதே துழைத்தன னெங்கள்வெற்பா
அத்திறன் யாவு மறிவா யுபகரித் தாருயிர்க்கு
மத்திநின் றேற்றுங் கலைசைத் தியாகர் மகிழுமருட்
சத்தியைப் போனடு நின்றளித் தேனையுந் தாங்குகவே. 59

பாங்கி தலைமகனை உலகியன் மேம்பட விருந்து விலக்கல்.
153.
வள்ளித்தண் கந்த மதுவும் வலைப்பட்ட மான்றசையும்
தெள்ளித் திரட்டிய செந்தினை மாவையுந் தித்திக்கநீர்
அள்ளிப் புசித்தெம் பழங்குடிற் றங்கி யணைந்தவிராத்
தள்ளிப்பின் னேகுங் கலைசைத் தியாகர் தனிநகர்க்கே, 60

விருந்திறை விரும்பல்.
154.
நனைப்போ தணியு நறுங்குழ லீர்தம்மை நாடிநெஞ்சில்
நினைப்போர்க் கருளுங் கலைசைத் தியாகர் நெடுங்கிரிமேல்
தினைப்போ னகமு மறியூ னுணவுந் தெரிந்தளித்தால்
வினைப்போக மன்றந்த மெய்ப்போக மாகும் விருந்தினர்க்கே. 61

by Swathi   on 19 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.