LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

பாரபட்சம் காட்டாத பண்பாளர்

சூழ்நிலைக்குத தக்கபடி பாரபட்சம் காட்டுகின்ற குணம் பலரிடம் உண்டு .

ஒரு பெண்மணி ஒரு ஜவுளிக்கடைக்குள் நுழைந்தாள் . சீக்கிரமாக ஒரு சேலை கொடுங்கள் என்றார் . கடை ஊழியர் நூற்றுக்கணக்கான சேலைகளை அள்ளிப்போட்டு செலக்ட் பண்ணுங்கள் என்றார் . அதற்கெல்லாம் நேரமில்லை . நீங்களே ஏதாவது ஒன்றை எடுத்துப்போடுங்கள் என்றார் அந்த பெண்மணி . நாங்களாக எடுத்துக்கொடுத்தால் ஏதாவது குறை சொல்வீர்கள் . கலர் பிடிக்க வேண்டும் தரத்தைப் பார்க்க வேண்டும என்று நீட்டிக் கொண்டே போனார் கடைக்காரர் .

அதைப்பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை . சுமாரான விலையில் ஒரு புடவையை நீங்களே எடுத்துக் கொடுங்கள் . ஏன்னா புடவை எனக்கில்லை . என்னோட நாத்தனாருக்கு . அவளுக்குப் பிறந்த நாளாம் . புடவை எடுக்கச்சொல்லி அடம் பிடிக்கிறார் என் வீட்டுக்காரர் என்றார் அந்தப் பெண்மணி .

தன்னோடு கொள்கையில்வேறுபட்டிருந்தாலும் அவர்களோடும் பாரபட்சம் காட்டாமல் பழகியவர் பெருந்தலைவர் காமராசர் . இவரும் மூதறிஞர் இராஜாஜி அவர்களும் கொள்கையில் வேறுபட்டு நின்றவர்கள் . இராஜாஜி சுதந்திரக் கட்சியைத் தொடங்கிய நேரம் . அரசியல் மோதல் உச்சகட்டத்தை எட்டியிருந்த வேளை சென்னை இல்லத்தில் கட்சித் தொண்டர்களோடு இராஜாஜி குறித்து விவாதம் செய்துகொண்டிருந்தார் பெருந்தலைவர் மூதறிஞர் அவரைத் தேடி அங்கு வருகிறார் என்ற செய்தி அறிந்ததும் முன் வாசலுக்கே ஓடி வந்து வரவேற்றார் பெருந்தலைவர் .

ஐயா , வணக்கம் . நீங்க இங்க வரணுமா ? சொல்லலி விட்டிருந்தா நானே ஓடி வந்திருப்பேன் . உங்களது அறிவுக்கும் அனுபவத்திற்கும் நீங்கள் என்னைத் தேடி வருவதா என்று துடித்தார் தலைவர் . அதைக்கண்டு இராஜாஜியே உருகிப்போனார் . தமது கடைசி காலத்தில் இராஜாஜி தமது கட்சியினருக்கே காமராசர்தான் தலைவர் . சுதந்திரக் கட்சியினர் அவரிடமே ஆலோசனை கேட்டுச்செயல்பட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தார் .

பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ஜீவா அவர்கள் காமராசர் அவர்களோடு கொள்கையில் மாறுபட்டு நின்றவர்தான் . ஆனாலும் அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறுதி நிலை வந்த நேரத்தல் அவர் சொன்ன வார்த்தைகள் என் மனைவிக்குத் தந்தி கொடுங்கள் காமராசருக்குப் போன் செய்யுங்கள் .

டாக்டர் கலைஞர் அவர்கள் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அவரின் அன்னையார் இயற்கை எய்தினார் . அதை அறிந்ததும் பெருந்தலைவர் விரைந்து அவர் இல்லம் சென்று அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார் .

காதலைப் பற்றி குறுந்தொகை கூ றும் கருத்து இது

நிலத்தினும் பெரிதே

வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரளவின்றே

இதனையே பெருந்தலைவரின் கருணைக்கும் ஒப்பிட்டுச் சொல்லலாம் .

by Swathi   on 02 Sep 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.