|
||||||||
பச்சரிசி வடகம் (pacha arisi vadagam ) |
||||||||
தேவையானவை : பச்சரிசி – 1 கிலோ எலுமிச்சம் பழம் – 3 பெருங்காயம் – 1/4 டீஸ்பூன் ஜவ்வரிசி – 200 கிராம் உப்பு – தேவையான அளவு பச்சை மிளகாய் – 100 கிராம் செய்முறை : 1.முதலில் பச்சரிசி, ஜவ்வரிசி இரண்டையும் நன்கு சுத்தம் செய்து மிஷினில் நன்றாக அரைத்து கொள்ளவும்.அடி கனமான பாத்திரத்தில் 12 கப் தண்ணீர்விட்டு கொதிக்கவிட வேண்டும். கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்த மாவை மொத்தமாகக் கொட்டி, கைவிடாமல் கிளறவேண்டும். 2.10 நிமிடங்களுக்குள் மாவு வெந்து நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து இறுக மூடிவைக்கவும்.காம்பில்லாத பச்சை மிளகாயுடன் உப்பு சேர்த்து நைசாக அரைத்து, சிறிதளவு தண்ணீரில் கரைத்து பெரிய சக்கை இல்லாமல் வடிகட்டிக் கொள்ளவும். 3.மிளகாய்க் கரைசல், எலுமிச்சைச் சாறு இரண்டையும் கிளறிய மாவில் கொட்டி நன்கு கலக்கவேண்டும். ஒரு பாத்திரத்தில் மோர்கலந்த தண்ணீரைத் தொட்டுக்கொண்டு உழக்கில் மாவை அடைத்து, விரும்பிய வடிவத்தில் வடகம் இடலாம்.இதனை வெயிலில் 4 நாள் காயவைத்து காற்றுப் புகாத டப்பாவில் எடுத்துவைக்கவும். |
||||||||
by kanika on 12 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|