LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- வட மலை நிகண்டு

பகர ஆகார வருக்கம்

 

பாரதி யெனும்பெயர் பனுவ லாட்டியும்
தோணியு மெனவே சொல்லப் பெறுமே. ....1085
பாண்டி லெனும்பெய ரிடப ராசியும்
சகடமு மூங்கிலுந் தாங்குறு சிவிகையும்
காளையுங் கட்டிலும் விளக்கின் றகளியும்
வட்டமு மெனவே வழங்கப் பெறுமே. ....1086
பரணி யெனும்பெயர் பதியொடு சேர்ந்த
சோலையு நாடுங் காடு நீரும்
பாடற் பல்லியமும் பாட்டுமோ ரிசையும்
கையும் பொழுது நீட்டித்தலுங் கருதுவர். ....1087
பாரா வார மெனும்பெயர் கடலும்
கடற்கரைப் பெயருங் கருதப் பெறுமே. ....1088
பாசெனும் பெயரே பசுமையு மூங்கிலும். ....1089
பாரெனும் பெயரே தேரின் பரப்பும்
உரோகிணிப் பெயரும் புவனியு முரைப்பர். ....1090
பாம்பெனும் பெயரே பன்னக விகற்பமும்
வரம்பின் பெயரும் வழங்கப் பெறுமே. ....1091
பாரி யெனும்பெயர் பாரின் பெயருங்
கட்டிலின் பெயருநல் லாடையு முந்நீரும்
மனைவி பெயருமோர் வள்ளலு மாமே. ....1092
பாடி யெனும்பெயர் ஊரு நாடும்
நகர மும்படை வீடு நவிலுவர். ....1093
பானல் எனும்பெயர் கருநிறக் குவளையும்
மருத நிலமும் வயலும் வழங்கும். ....1094
பாத்தி யெனும்பெயர் பகுத்தலும் வீடும்
சிறுசெய்யு மென்னச் செப்புவர் புலவர். ....1095
பாழி யெனும்பெயர் தவத்தோர் சாலையும்
நகரமும் பெலமும் நண்ணல ரூரும்
படுக்கையும் பாயலும் பாழ்படு பொருளும்
மலைமுழை விலங்கு துயிலிடமு மாமே. ....1096
பாலெனும் பெயரே பகுத்தலும் பக்கமும்
கீரமும் இயல்பும் இடமுங் கிளத்துவர். ....1097
பாசன மெனும்பெயர் பாண்டமுஞ் சுற்றமும்
உண்கலப் பெயரும் உரைக்கப் பெறுமே. ....1098
பாடெனும் பெயரே பக்கமும் படுதலும்
பெருமையுஞ் சத்த வொலியும் பேசுவர். ....1099
பாலிகை யெனும்பெயர் பட்டவாள் முட்டும்
அதரமும் வட்டப் பெயரு மாமே. ....1100
பாகெனும் பெயரே பாக்கின் பெயரும்
பகுத்தலும் குழம்பும் பாலும் பாகனும்
சருக்கரைப் பெயருஞ் சாற்றப் பெறுமே. ....1101
பாளித மெனும் பெயர் கண்ட சர்க்கரையும்
குழம்பும் பட்டா டையுமே கூறுவர். ....1102
பாணமெனும் பெயர் பட்டின் விகற்பமும்
அம்பும் பவள வண்ணக் குறிஞ்சியுமாம். ....1103
பாக மெனும்பெயர் பாதியும் பிச்சையும்
நாவலர் கவிதைப் பாகமும் நவிலுவர். ....1104
பாக லெனும்பெயர் பலாவின் தருவும்
ழூவகைக் கார வல்லியு மொழிகுவர். ....1105
பாதிரி யெனும்பெயர் பாதிரி மரமும்
மூங்கிலு மெனவே மொழியப் பெறுமே. ....1106
பால மெனுலெனும் பெயர் நெற்றியு மழுவும்
நீரிடைப் பரப்புகற் பாலமு நிகழ்த்துவர். ....1107
பாவ மெனும்பெயர் பாவகப் பெயருந்
தீவினைப் பெயரும் செப்பப் பெறுமே. ....1108
பாய்மா வெனும்பெயர் பரியொடு புலியுமாம். ....1109
பாக்கெனும் பெயர்செம் பழுக்காய்ப் பெயரும்
எதிர்கா லத்தைப் பகரிடைச் சொல்லுமாம். ....1110
பாடல மெனும்பெயர் சிவப்பும் பாதிரியும்
குதிரையு மெனவே கூறப் பெறுமே. ....1111
பாத்தெனும் பெயரே பருத்தூண் பெயரும்
அடிசிற் பெயரொடு கஞ்சியு மாமே. ....1112
பார மெனும்பெயர் கவசமும் பொறையும்
கலனையும் பாரும் நீரின் கரையும்
வன்பா ரமுமரக் கலமும் வழங்கும். ....1113
பாவெனும் பெயரே பரத்தலும் பனுவலும். ....1114
பாலை யெனும்பெயர் பாலை நிலமும்
அந்நிலப் பாடலும் பிரிவ துரைத்தலும்
பொருண்மேற் பிரிதலும் புணர்ந்துடன் போதலும்
புனர்பூ சமுமோர் மரமும் புகலுவர். ....1115
பார்த்த லென்னும் பெயர்பரப் புதலும்
தோற்றுதற் பெயருஞ் சொல்லப் பெறுமே. ....1116
பாவை யெனும்பெயர் சித்திரப் பாவையும்
திருமக ளாடலுஞ் செப்புவர் புலவர். ....1117
பாயச மெனும்பெயர் பாற்சோற் றினுடனே
பாற்குறண் டியென் பெயர்தானும் பகருவர். ....1118

 

பாரதி யெனும்பெயர் பனுவ லாட்டியும்

தோணியு மெனவே சொல்லப் பெறுமே. ....1085

 

பாண்டி லெனும்பெய ரிடப ராசியும்

சகடமு மூங்கிலுந் தாங்குறு சிவிகையும்

காளையுங் கட்டிலும் விளக்கின் றகளியும்

வட்டமு மெனவே வழங்கப் பெறுமே. ....1086

 

பரணி யெனும்பெயர் பதியொடு சேர்ந்த

சோலையு நாடுங் காடு நீரும்

பாடற் பல்லியமும் பாட்டுமோ ரிசையும்

கையும் பொழுது நீட்டித்தலுங் கருதுவர். ....1087

 

பாரா வார மெனும்பெயர் கடலும்

கடற்கரைப் பெயருங் கருதப் பெறுமே. ....1088

 

பாசெனும் பெயரே பசுமையு மூங்கிலும். ....1089

 

பாரெனும் பெயரே தேரின் பரப்பும்

உரோகிணிப் பெயரும் புவனியு முரைப்பர். ....1090

 

பாம்பெனும் பெயரே பன்னக விகற்பமும்

வரம்பின் பெயரும் வழங்கப் பெறுமே. ....1091

 

பாரி யெனும்பெயர் பாரின் பெயருங்

கட்டிலின் பெயருநல் லாடையு முந்நீரும்

மனைவி பெயருமோர் வள்ளலு மாமே. ....1092

 

பாடி யெனும்பெயர் ஊரு நாடும்

நகர மும்படை வீடு நவிலுவர். ....1093

 

பானல் எனும்பெயர் கருநிறக் குவளையும்

மருத நிலமும் வயலும் வழங்கும். ....1094

 

பாத்தி யெனும்பெயர் பகுத்தலும் வீடும்

சிறுசெய்யு மென்னச் செப்புவர் புலவர். ....1095

 

பாழி யெனும்பெயர் தவத்தோர் சாலையும்

நகரமும் பெலமும் நண்ணல ரூரும்

படுக்கையும் பாயலும் பாழ்படு பொருளும்

மலைமுழை விலங்கு துயிலிடமு மாமே. ....1096

 

பாலெனும் பெயரே பகுத்தலும் பக்கமும்

கீரமும் இயல்பும் இடமுங் கிளத்துவர். ....1097

 

பாசன மெனும்பெயர் பாண்டமுஞ் சுற்றமும்

உண்கலப் பெயரும் உரைக்கப் பெறுமே. ....1098

 

பாடெனும் பெயரே பக்கமும் படுதலும்

பெருமையுஞ் சத்த வொலியும் பேசுவர். ....1099

 

பாலிகை யெனும்பெயர் பட்டவாள் முட்டும்

அதரமும் வட்டப் பெயரு மாமே. ....1100

 

பாகெனும் பெயரே பாக்கின் பெயரும்

பகுத்தலும் குழம்பும் பாலும் பாகனும்

சருக்கரைப் பெயருஞ் சாற்றப் பெறுமே. ....1101

 

பாளித மெனும் பெயர் கண்ட சர்க்கரையும்

குழம்பும் பட்டா டையுமே கூறுவர். ....1102

 

பாணமெனும் பெயர் பட்டின் விகற்பமும்

அம்பும் பவள வண்ணக் குறிஞ்சியுமாம். ....1103

 

பாக மெனும்பெயர் பாதியும் பிச்சையும்

நாவலர் கவிதைப் பாகமும் நவிலுவர். ....1104

 

பாக லெனும்பெயர் பலாவின் தருவும்

ழூவகைக் கார வல்லியு மொழிகுவர். ....1105

 

பாதிரி யெனும்பெயர் பாதிரி மரமும்

மூங்கிலு மெனவே மொழியப் பெறுமே. ....1106

 

பால மெனுலெனும் பெயர் நெற்றியு மழுவும்

நீரிடைப் பரப்புகற் பாலமு நிகழ்த்துவர். ....1107

 

பாவ மெனும்பெயர் பாவகப் பெயருந்

தீவினைப் பெயரும் செப்பப் பெறுமே. ....1108

 

பாய்மா வெனும்பெயர் பரியொடு புலியுமாம். ....1109

 

பாக்கெனும் பெயர்செம் பழுக்காய்ப் பெயரும்

எதிர்கா லத்தைப் பகரிடைச் சொல்லுமாம். ....1110

 

பாடல மெனும்பெயர் சிவப்பும் பாதிரியும்

குதிரையு மெனவே கூறப் பெறுமே. ....1111

 

பாத்தெனும் பெயரே பருத்தூண் பெயரும்

அடிசிற் பெயரொடு கஞ்சியு மாமே. ....1112

 

பார மெனும்பெயர் கவசமும் பொறையும்

கலனையும் பாரும் நீரின் கரையும்

வன்பா ரமுமரக் கலமும் வழங்கும். ....1113

 

பாவெனும் பெயரே பரத்தலும் பனுவலும். ....1114

 

பாலை யெனும்பெயர் பாலை நிலமும்

அந்நிலப் பாடலும் பிரிவ துரைத்தலும்

பொருண்மேற் பிரிதலும் புணர்ந்துடன் போதலும்

புனர்பூ சமுமோர் மரமும் புகலுவர். ....1115

 

பார்த்த லென்னும் பெயர்பரப் புதலும்

தோற்றுதற் பெயருஞ் சொல்லப் பெறுமே. ....1116

 

பாவை யெனும்பெயர் சித்திரப் பாவையும்

திருமக ளாடலுஞ் செப்புவர் புலவர். ....1117

 

பாயச மெனும்பெயர் பாற்சோற் றினுடனே

பாற்குறண் டியென் பெயர்தானும் பகருவர். ....1118

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.