|
||||||||
பகர ஆகார வருக்கம் |
||||||||
பாரதி யெனும்பெயர் பனுவ லாட்டியும்
தோணியு மெனவே சொல்லப் பெறுமே. ....1085
பாண்டி லெனும்பெய ரிடப ராசியும்
சகடமு மூங்கிலுந் தாங்குறு சிவிகையும்
காளையுங் கட்டிலும் விளக்கின் றகளியும்
வட்டமு மெனவே வழங்கப் பெறுமே. ....1086
பரணி யெனும்பெயர் பதியொடு சேர்ந்த
சோலையு நாடுங் காடு நீரும்
பாடற் பல்லியமும் பாட்டுமோ ரிசையும்
கையும் பொழுது நீட்டித்தலுங் கருதுவர். ....1087
பாரா வார மெனும்பெயர் கடலும்
கடற்கரைப் பெயருங் கருதப் பெறுமே. ....1088
பாசெனும் பெயரே பசுமையு மூங்கிலும். ....1089
பாரெனும் பெயரே தேரின் பரப்பும்
உரோகிணிப் பெயரும் புவனியு முரைப்பர். ....1090
பாம்பெனும் பெயரே பன்னக விகற்பமும்
வரம்பின் பெயரும் வழங்கப் பெறுமே. ....1091
பாரி யெனும்பெயர் பாரின் பெயருங்
கட்டிலின் பெயருநல் லாடையு முந்நீரும்
மனைவி பெயருமோர் வள்ளலு மாமே. ....1092
பாடி யெனும்பெயர் ஊரு நாடும்
நகர மும்படை வீடு நவிலுவர். ....1093
பானல் எனும்பெயர் கருநிறக் குவளையும்
மருத நிலமும் வயலும் வழங்கும். ....1094
பாத்தி யெனும்பெயர் பகுத்தலும் வீடும்
சிறுசெய்யு மென்னச் செப்புவர் புலவர். ....1095
பாழி யெனும்பெயர் தவத்தோர் சாலையும்
நகரமும் பெலமும் நண்ணல ரூரும்
படுக்கையும் பாயலும் பாழ்படு பொருளும்
மலைமுழை விலங்கு துயிலிடமு மாமே. ....1096
பாலெனும் பெயரே பகுத்தலும் பக்கமும்
கீரமும் இயல்பும் இடமுங் கிளத்துவர். ....1097
பாசன மெனும்பெயர் பாண்டமுஞ் சுற்றமும்
உண்கலப் பெயரும் உரைக்கப் பெறுமே. ....1098
பாடெனும் பெயரே பக்கமும் படுதலும்
பெருமையுஞ் சத்த வொலியும் பேசுவர். ....1099
பாலிகை யெனும்பெயர் பட்டவாள் முட்டும்
அதரமும் வட்டப் பெயரு மாமே. ....1100
பாகெனும் பெயரே பாக்கின் பெயரும்
பகுத்தலும் குழம்பும் பாலும் பாகனும்
சருக்கரைப் பெயருஞ் சாற்றப் பெறுமே. ....1101
பாளித மெனும் பெயர் கண்ட சர்க்கரையும்
குழம்பும் பட்டா டையுமே கூறுவர். ....1102
பாணமெனும் பெயர் பட்டின் விகற்பமும்
அம்பும் பவள வண்ணக் குறிஞ்சியுமாம். ....1103
பாக மெனும்பெயர் பாதியும் பிச்சையும்
நாவலர் கவிதைப் பாகமும் நவிலுவர். ....1104
பாக லெனும்பெயர் பலாவின் தருவும்
ழூவகைக் கார வல்லியு மொழிகுவர். ....1105
பாதிரி யெனும்பெயர் பாதிரி மரமும்
மூங்கிலு மெனவே மொழியப் பெறுமே. ....1106
பால மெனுலெனும் பெயர் நெற்றியு மழுவும்
நீரிடைப் பரப்புகற் பாலமு நிகழ்த்துவர். ....1107
பாவ மெனும்பெயர் பாவகப் பெயருந்
தீவினைப் பெயரும் செப்பப் பெறுமே. ....1108
பாய்மா வெனும்பெயர் பரியொடு புலியுமாம். ....1109
பாக்கெனும் பெயர்செம் பழுக்காய்ப் பெயரும்
எதிர்கா லத்தைப் பகரிடைச் சொல்லுமாம். ....1110
பாடல மெனும்பெயர் சிவப்பும் பாதிரியும்
குதிரையு மெனவே கூறப் பெறுமே. ....1111
பாத்தெனும் பெயரே பருத்தூண் பெயரும்
அடிசிற் பெயரொடு கஞ்சியு மாமே. ....1112
பார மெனும்பெயர் கவசமும் பொறையும்
கலனையும் பாரும் நீரின் கரையும்
வன்பா ரமுமரக் கலமும் வழங்கும். ....1113
பாவெனும் பெயரே பரத்தலும் பனுவலும். ....1114
பாலை யெனும்பெயர் பாலை நிலமும்
அந்நிலப் பாடலும் பிரிவ துரைத்தலும்
பொருண்மேற் பிரிதலும் புணர்ந்துடன் போதலும்
புனர்பூ சமுமோர் மரமும் புகலுவர். ....1115
பார்த்த லென்னும் பெயர்பரப் புதலும்
தோற்றுதற் பெயருஞ் சொல்லப் பெறுமே. ....1116
பாவை யெனும்பெயர் சித்திரப் பாவையும்
திருமக ளாடலுஞ் செப்புவர் புலவர். ....1117
பாயச மெனும்பெயர் பாற்சோற் றினுடனே
பாற்குறண் டியென் பெயர்தானும் பகருவர். ....1118
பாரதி யெனும்பெயர் பனுவ லாட்டியும் தோணியு மெனவே சொல்லப் பெறுமே. ....1085
பாண்டி லெனும்பெய ரிடப ராசியும் சகடமு மூங்கிலுந் தாங்குறு சிவிகையும் காளையுங் கட்டிலும் விளக்கின் றகளியும் வட்டமு மெனவே வழங்கப் பெறுமே. ....1086
பரணி யெனும்பெயர் பதியொடு சேர்ந்த சோலையு நாடுங் காடு நீரும் பாடற் பல்லியமும் பாட்டுமோ ரிசையும் கையும் பொழுது நீட்டித்தலுங் கருதுவர். ....1087
பாரா வார மெனும்பெயர் கடலும் கடற்கரைப் பெயருங் கருதப் பெறுமே. ....1088
பாசெனும் பெயரே பசுமையு மூங்கிலும். ....1089
பாரெனும் பெயரே தேரின் பரப்பும் உரோகிணிப் பெயரும் புவனியு முரைப்பர். ....1090
பாம்பெனும் பெயரே பன்னக விகற்பமும் வரம்பின் பெயரும் வழங்கப் பெறுமே. ....1091
பாரி யெனும்பெயர் பாரின் பெயருங் கட்டிலின் பெயருநல் லாடையு முந்நீரும் மனைவி பெயருமோர் வள்ளலு மாமே. ....1092
பாடி யெனும்பெயர் ஊரு நாடும் நகர மும்படை வீடு நவிலுவர். ....1093
பானல் எனும்பெயர் கருநிறக் குவளையும் மருத நிலமும் வயலும் வழங்கும். ....1094
பாத்தி யெனும்பெயர் பகுத்தலும் வீடும் சிறுசெய்யு மென்னச் செப்புவர் புலவர். ....1095
பாழி யெனும்பெயர் தவத்தோர் சாலையும் நகரமும் பெலமும் நண்ணல ரூரும் படுக்கையும் பாயலும் பாழ்படு பொருளும் மலைமுழை விலங்கு துயிலிடமு மாமே. ....1096
பாலெனும் பெயரே பகுத்தலும் பக்கமும் கீரமும் இயல்பும் இடமுங் கிளத்துவர். ....1097
பாசன மெனும்பெயர் பாண்டமுஞ் சுற்றமும் உண்கலப் பெயரும் உரைக்கப் பெறுமே. ....1098
பாடெனும் பெயரே பக்கமும் படுதலும் பெருமையுஞ் சத்த வொலியும் பேசுவர். ....1099
பாலிகை யெனும்பெயர் பட்டவாள் முட்டும் அதரமும் வட்டப் பெயரு மாமே. ....1100
பாகெனும் பெயரே பாக்கின் பெயரும் பகுத்தலும் குழம்பும் பாலும் பாகனும் சருக்கரைப் பெயருஞ் சாற்றப் பெறுமே. ....1101
பாளித மெனும் பெயர் கண்ட சர்க்கரையும் குழம்பும் பட்டா டையுமே கூறுவர். ....1102
பாணமெனும் பெயர் பட்டின் விகற்பமும் அம்பும் பவள வண்ணக் குறிஞ்சியுமாம். ....1103
பாக மெனும்பெயர் பாதியும் பிச்சையும் நாவலர் கவிதைப் பாகமும் நவிலுவர். ....1104
பாக லெனும்பெயர் பலாவின் தருவும் ழூவகைக் கார வல்லியு மொழிகுவர். ....1105
பாதிரி யெனும்பெயர் பாதிரி மரமும் மூங்கிலு மெனவே மொழியப் பெறுமே. ....1106
பால மெனுலெனும் பெயர் நெற்றியு மழுவும் நீரிடைப் பரப்புகற் பாலமு நிகழ்த்துவர். ....1107
பாவ மெனும்பெயர் பாவகப் பெயருந் தீவினைப் பெயரும் செப்பப் பெறுமே. ....1108
பாய்மா வெனும்பெயர் பரியொடு புலியுமாம். ....1109
பாக்கெனும் பெயர்செம் பழுக்காய்ப் பெயரும் எதிர்கா லத்தைப் பகரிடைச் சொல்லுமாம். ....1110
பாடல மெனும்பெயர் சிவப்பும் பாதிரியும் குதிரையு மெனவே கூறப் பெறுமே. ....1111
பாத்தெனும் பெயரே பருத்தூண் பெயரும் அடிசிற் பெயரொடு கஞ்சியு மாமே. ....1112
பார மெனும்பெயர் கவசமும் பொறையும் கலனையும் பாரும் நீரின் கரையும் வன்பா ரமுமரக் கலமும் வழங்கும். ....1113
பாவெனும் பெயரே பரத்தலும் பனுவலும். ....1114
பாலை யெனும்பெயர் பாலை நிலமும் அந்நிலப் பாடலும் பிரிவ துரைத்தலும் பொருண்மேற் பிரிதலும் புணர்ந்துடன் போதலும் புனர்பூ சமுமோர் மரமும் புகலுவர். ....1115
பார்த்த லென்னும் பெயர்பரப் புதலும் தோற்றுதற் பெயருஞ் சொல்லப் பெறுமே. ....1116
பாவை யெனும்பெயர் சித்திரப் பாவையும் திருமக ளாடலுஞ் செப்புவர் புலவர். ....1117
பாயச மெனும்பெயர் பாற்சோற் றினுடனே பாற்குறண் டியென் பெயர்தானும் பகருவர். ....1118
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|