LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- வட மலை நிகண்டு

பகர அகர வருக்கம்

 

பகுதி யெனும்பெயர் பரிவே டத்துடன்
வட்ட வடிவு மிரவியு நேமியும். ....1009
பகலெனும் பெயர்பகற் போதும் பிரிவும்
நடுவும் பரணி நாளும் இயம்புவர். ....1010
பச்சை யெனும்பெயர் பசுமையும் புதனும்
தோலும் இலாபமு மரகத மணியுமாம். ....1011
பங்கெனும் பெயரே பகுத்தலும் சனியும்
முடமும் பாதியும் மொழிந்தனர் புலவர். ....1012
பக்க மெனும்பெய ரருகு மிறகுந்
திதியு மண்மையுஞ் செப்பப் பெறுமே. ....1013
பதமெனும் பெயரே பாதமும் சோறும்
வரிசையும் விழாவும் வழியும் வார்த்தையும்
உணவு மீரமுஞ் செல்வியுஞ் சேமமும்
பொழுது மெனவே புகன்றனர் புலவர். ....1014
பணியெனும் பெயரே பணமுடைப் பாம்பும்
தொழிலுந் தொழில்படு கலனுஞ் சொல்லுவர். ....1015
பயமெனும் பெயரே பாலும் சலிலமு
மச்சமும முதுமி லாபமு மாமே. ....1016
பரவை யெனும்பெயர் பரப்புங் கடலுமாம். ....1017
பயோதர மெனும்பெயர் மேகமு முலையுமாம். ....1018
பனியெனும் பெயரே துன்பமு நடுக்கமும்
அச்சமுங் குளிர்ச்சியு மிமமு மாமே. ....1019
பகவ னெனும்பெயர் பரமனு மாலும்
பிரமனும் அருகனும் குருவும் புத்தனும். ....1020
பண்ணவ னெனும்பெயர் முனியும் தேவனும்
குருவுந் திறலோன் பெயருங் கூறுவர். ....1021
பசுவெனும் பெயர்வெண் பெற்றமு முயிருமாம். ....1022
படியெனும் பெயரே பகையும் குணமும்
புவனமு முலகமும் புகலப் பெறுமே. ....1023
படப்பை யெனும்பெயர் நாடு நகரமும்
தோட்டமும் பசுநிரைப் பெயருஞ் சொல்லுவர். ....1024
பட்டெனும் பெயரே பட்டின் விகற்பமும்
சிற்றூர்ப் பெயரும் துகிலுஞ் செப்புவர். ....1025
பள்ளி யெனும்பெயர் தவத்தோ ரிடமும்
துயிறலும் பாயலுஞ் சிற்றூர்ப் பெயரும்
கோயிலின் பெயருங் கூறப் பெறுமே. ....1026
பட்ட மெனும்பெயர் மேம்படு பதவியும்
வழியுங் கவரி மாவுந் துகிலும்
வாயிலு மதகரி முகப டாமும்
விலங்கு துயிலிடமும் படமும் விளம்புவர். ....1027
பதுக்கை யெனும்பெயர் பாறையு மேடும்
சிறுதூ றுமெனச் செப்புவர் புலவர். ....1028
பதலை யெனும்பெயர் மலையுந் தாழியும்
ஒருகட் பரந்த வாய்ப்பறையு மோதுவர். ....1029
பணையெனும் பெயரே பருத்தலு ழூங்கிலும்
மருத நிலமும் வயலு முரசமும்
குதிரையின் பந்தியு மரத்தின் கொம்புமாம். ....1030
பண்ணை யெனும்பெயர் வயலும் வாவியும்
சபையு மகளிர் விளையா டிடமும்
விலங்கு துயிலிடமும் விளம்புவர் புலவர். ....1031
படுவெனும் பெயரே மரத்தின் குலையும்
மதுவும் நன்மையும் வாவியு மாமே. ....1032
பயம்பெனும் பெயரே பகடுபடு குழியும்
நீர்நிலைப் பெயரு நிகழ்த்தினர் புலவர். ....1033
பங்க மெனும்பெயர் சேறும் துகிலும்
பின்னமுந் தீவினைப் பெயரும் பேசுவர். ....1034
பரிசு மென்பெயர் கணைப்படைக் கலமும்
புரிசை யுள்ளுயர்ந்த நிலமும் அகழியும்
மேடையு மெனவே விளம்புவர் புலவர். ....1035
பணவை யெனும்பெயர் பரணுங் கழுதுமாம். ....1036
படையெனும் பெயரே பரிமாக் கலனையும்
ஆயுதப் பொதுவு மடர்கொடுஞ் சேனையும்
கண்படை யுடனே கலப்பையுங் கருதுவர். ....1037
பலமெனும் பெயரே பழமும் கிழங்கும்
சேனையும் லாபமும் நிறையும் செப்புவர். ....1038
பங்கி யெனும்பெயர் ஆண்பான் மயிரும்
அஃறிணைப் பொதுவின் பெயரு மாமே. ....1039
பண்ட மெனும்பெயர் பண்ணி காரத்துடன்
விண்டொளிர் பொன்னும் விளம்பப் பெறுமே. ....1040
படலிகை யென்னும் பெயர்பெரும் பீர்க்கும்
கைமணி வட்டமும் பூத்தட்டின் பெயருமாம். ....1041
படங்கென் பெயர்பெருங் கொடியு மேற்கட்டியும். ....1042
படலை யெனும்பெயர் வாசிக் கோவையும்
படர்தலுந் தொடையலும் பரந்தவாய்ப் பறையுமாம்.....1043
பண்ணெனும் பெயரே பரிமாக் கலனையும்
பாட்டின் பண்ணும் பகரப் பெறுமே. ....1044
பறையென் பெயர்புள்ளி னிறகும் பணையும்
வசனமு மெனவே வழங்கப் பெறுமே. ....1045
பகழி யெனும்பெயர் பகழிக் குதையும்
கணையு மெனவே கருதப் பெறுமே. ....1046
பரமெனும் பெயரே பரிமாக் கலனையும்
மெய்யு மெய்புகு கருவியும் பாரமும்
முன்பு மேலு மொழிந்தனர் புலவர். ....1047
பழங்கணெ னும்பெய ரோசையும் துன்பமும். ....1048
படிறெனும் பெயரே பொய்யொடு களவுமாம். ....1049
பந்த மெனும்பெயர் சீரின் தொடர்ச்சியும்
அழகும் திரட்சியும் கிளையொடு கட்டுமாம். ....1050
பத்திர மெனும்பெய ரழகும் நன்மையும்
சுரிகையும் சிங்கா சனமும் புள்ளிறகும்
இலையு மெனவே இயம்பப் பெறுமே. ....1051
பலியெனும் பெயரே தேவ பூசையும்
பிச்சையும் பலித்தலும் பேசுவர் புலவர். ....1052
பரியெனும் பெயரே பாது காத்தலும்
பருத்தியுஞ் சுமத்தலுங் குதிரையும் பெருமையும். ....1053
பகடெனும் பெயரே பெருமையு மெருதும்
எருமை யாண்பெயருந் தோணியுங் களிறுமாம். ....1054
பதங்க மெனும்பெயர் விட்டிற் பறவையும்
புட்பொதுப் பெயரும் புகலப் பெறுமே. ....1055
பயலெனும் பெயர்ச்சிற் றாளும் பள்ளமும்
பந்தியு மெனவே பகருவர் புலவர். ....1056
பணில மெனும்பெயர் சலஞ்சலப் பெயரும்
சங்கின் பெயருஞ் சாற்றுவர் புலவர். ....1057
பப்பெனும் பெயரே பரப்பும் உவமையும். ....1058
பந்தெனும் பெயர்கந் துகமும் கட்டும்
நீர்தூவுஞ் சிறுது ருத்தியும் நிகழ்த்துவர். ....1059
பவன மெனும்பெயர் பாருங் காற்றும்
இராசியும் கோயிலு நாடு மில்லமுமாம். ....1060
படமெனும் பெயரே பாம்பின் பணமும்
சித்திரப் படமும் சிலையும் கொடியுமாம். ....1061
பறம்பெனும் பெயரே மலையு முலையுமாம். ....1062
பரத ரெனும்பெயர் தனவைசியர் பேரும்
நெய்தனில மாக்களு நிகழ்த்தப் பெறுமே. ....1063
பவமெனும் பெயரே பாவமும் பிறப்புமாம். ....1064
பண்ணல் எனும்பெயர் சொல்லு நெருக்கமும்
பருத்தியின் பெயரும் பகரப் பெறுமே. ....1065
பயிரெனும் பெயரே யொலியும் பைங்கூழும்
விதந்து கட்டிய வழக்கும் புட்குரலும்
விலங்கின் குரலும் விளம்புவர் புலவர். ....1066
படரெனும் பெயரே பரியும் நோயும்
வீரரு நினைத்தலு நடையும் விளம்புவர். ....1067
பவித்திர மெனும்பெயர் தருப்பையுஞ் சுசியுமாம். ....1068
படிவ மெனும்பெயர் வடிவமு நோன்புமாம். ....1069
படுத்த லெனும்பெய ரொலியு முண்டாதலும்
பூத்தலு மின்மைப் பெயரும் புகலுவர். ....1070
பதியெனும் பெயரே கணவனும் நாகமும்
தலைவனு மெனவே சாற்றப் பெறுமே. ....1071
பத்தி யென்பெயர் வழிபாடு மொழுங்கும்
அடைப்பது முறைமையு மாமென வியம்புவர். ....1072
பரித்தல் எனும்பெயர் அறுத்தலும் வெட்டலும்
இரங்கலு மன்பும் இசைக்கப் பெறுமே. ....1073
பஞ்ச மெனும்பெயர் ஐந்துஞ் சிறுமையும். ....1074
பனுவ லெனும்பெயர் செய்யுளும் நூலுமாம். ....1075
பராக மென்பெயர் மலர்த்தாதுவு மிரேணுவும். ....1076
பல்ல மெனும்பெயர் பாணமும் கரடியும்
கணக்கிலோர் குணிப்பும் கருதப் பெறுமே. ....1077
பத்திரி யெனும்பெயர் பறவையும் பரியுமாம். ....1078
பட்டிகை யெனும்பெயர் பணையு மீரமும்
கச்சு மெனவே கருதப் பெறுமே. ....1079
பரிவெனும் பெயரே யின்பமுந் துன்பமும்
அன்பு மிதன்பெய ராமென வியம்புவர். ....1080
பற்ப மெனும்பெயர் பதுமமுந் தூளுமாம். ....1081
பரணி யெனும்பெயர் தரும னாளும்
அழுந்திடு கலனு மதகரிப் பெயருமாம். ....1082
பனையெனும் பெயரே போந்தையின் தருவும்
அநுடநாட் பெயரு மாகு மென்ப. ....1083
பணமெனும் பெயரே பாம்பின் படமும்
அரவுஞ் செம்பொற் காசு மாமே. ....1084

 

பகுதி யெனும்பெயர் பரிவே டத்துடன்

வட்ட வடிவு மிரவியு நேமியும். ....1009

 

பகலெனும் பெயர்பகற் போதும் பிரிவும்

நடுவும் பரணி நாளும் இயம்புவர். ....1010

 

பச்சை யெனும்பெயர் பசுமையும் புதனும்

தோலும் இலாபமு மரகத மணியுமாம். ....1011

 

பங்கெனும் பெயரே பகுத்தலும் சனியும்

முடமும் பாதியும் மொழிந்தனர் புலவர். ....1012

 

பக்க மெனும்பெய ரருகு மிறகுந்

திதியு மண்மையுஞ் செப்பப் பெறுமே. ....1013

 

பதமெனும் பெயரே பாதமும் சோறும்

வரிசையும் விழாவும் வழியும் வார்த்தையும்

உணவு மீரமுஞ் செல்வியுஞ் சேமமும்

பொழுது மெனவே புகன்றனர் புலவர். ....1014

 

பணியெனும் பெயரே பணமுடைப் பாம்பும்

தொழிலுந் தொழில்படு கலனுஞ் சொல்லுவர். ....1015

 

பயமெனும் பெயரே பாலும் சலிலமு

மச்சமும முதுமி லாபமு மாமே. ....1016

 

பரவை யெனும்பெயர் பரப்புங் கடலுமாம். ....1017

 

பயோதர மெனும்பெயர் மேகமு முலையுமாம். ....1018

 

பனியெனும் பெயரே துன்பமு நடுக்கமும்

அச்சமுங் குளிர்ச்சியு மிமமு மாமே. ....1019

 

பகவ னெனும்பெயர் பரமனு மாலும்

பிரமனும் அருகனும் குருவும் புத்தனும். ....1020

 

பண்ணவ னெனும்பெயர் முனியும் தேவனும்

குருவுந் திறலோன் பெயருங் கூறுவர். ....1021

 

பசுவெனும் பெயர்வெண் பெற்றமு முயிருமாம். ....1022

 

படியெனும் பெயரே பகையும் குணமும்

புவனமு முலகமும் புகலப் பெறுமே. ....1023

 

படப்பை யெனும்பெயர் நாடு நகரமும்

தோட்டமும் பசுநிரைப் பெயருஞ் சொல்லுவர். ....1024

 

பட்டெனும் பெயரே பட்டின் விகற்பமும்

சிற்றூர்ப் பெயரும் துகிலுஞ் செப்புவர். ....1025

 

பள்ளி யெனும்பெயர் தவத்தோ ரிடமும்

துயிறலும் பாயலுஞ் சிற்றூர்ப் பெயரும்

கோயிலின் பெயருங் கூறப் பெறுமே. ....1026

 

பட்ட மெனும்பெயர் மேம்படு பதவியும்

வழியுங் கவரி மாவுந் துகிலும்

வாயிலு மதகரி முகப டாமும்

விலங்கு துயிலிடமும் படமும் விளம்புவர். ....1027

 

பதுக்கை யெனும்பெயர் பாறையு மேடும்

சிறுதூ றுமெனச் செப்புவர் புலவர். ....1028

 

பதலை யெனும்பெயர் மலையுந் தாழியும்

ஒருகட் பரந்த வாய்ப்பறையு மோதுவர். ....1029

 

பணையெனும் பெயரே பருத்தலு ழூங்கிலும்

மருத நிலமும் வயலு முரசமும்

குதிரையின் பந்தியு மரத்தின் கொம்புமாம். ....1030

 

பண்ணை யெனும்பெயர் வயலும் வாவியும்

சபையு மகளிர் விளையா டிடமும்

விலங்கு துயிலிடமும் விளம்புவர் புலவர். ....1031

 

படுவெனும் பெயரே மரத்தின் குலையும்

மதுவும் நன்மையும் வாவியு மாமே. ....1032

 

பயம்பெனும் பெயரே பகடுபடு குழியும்

நீர்நிலைப் பெயரு நிகழ்த்தினர் புலவர். ....1033

 

பங்க மெனும்பெயர் சேறும் துகிலும்

பின்னமுந் தீவினைப் பெயரும் பேசுவர். ....1034

 

பரிசு மென்பெயர் கணைப்படைக் கலமும்

புரிசை யுள்ளுயர்ந்த நிலமும் அகழியும்

மேடையு மெனவே விளம்புவர் புலவர். ....1035

 

பணவை யெனும்பெயர் பரணுங் கழுதுமாம். ....1036

 

படையெனும் பெயரே பரிமாக் கலனையும்

ஆயுதப் பொதுவு மடர்கொடுஞ் சேனையும்

கண்படை யுடனே கலப்பையுங் கருதுவர். ....1037

 

பலமெனும் பெயரே பழமும் கிழங்கும்

சேனையும் லாபமும் நிறையும் செப்புவர். ....1038

 

பங்கி யெனும்பெயர் ஆண்பான் மயிரும்

அஃறிணைப் பொதுவின் பெயரு மாமே. ....1039

 

பண்ட மெனும்பெயர் பண்ணி காரத்துடன்

விண்டொளிர் பொன்னும் விளம்பப் பெறுமே. ....1040

 

படலிகை யென்னும் பெயர்பெரும் பீர்க்கும்

கைமணி வட்டமும் பூத்தட்டின் பெயருமாம். ....1041

 

படங்கென் பெயர்பெருங் கொடியு மேற்கட்டியும். ....1042

 

படலை யெனும்பெயர் வாசிக் கோவையும்

படர்தலுந் தொடையலும் பரந்தவாய்ப் பறையுமாம்.....1043

 

பண்ணெனும் பெயரே பரிமாக் கலனையும்

பாட்டின் பண்ணும் பகரப் பெறுமே. ....1044

 

பறையென் பெயர்புள்ளி னிறகும் பணையும்

வசனமு மெனவே வழங்கப் பெறுமே. ....1045

 

பகழி யெனும்பெயர் பகழிக் குதையும்

கணையு மெனவே கருதப் பெறுமே. ....1046

 

பரமெனும் பெயரே பரிமாக் கலனையும்

மெய்யு மெய்புகு கருவியும் பாரமும்

முன்பு மேலு மொழிந்தனர் புலவர். ....1047

 

பழங்கணெ னும்பெய ரோசையும் துன்பமும். ....1048

 

படிறெனும் பெயரே பொய்யொடு களவுமாம். ....1049

 

பந்த மெனும்பெயர் சீரின் தொடர்ச்சியும்

அழகும் திரட்சியும் கிளையொடு கட்டுமாம். ....1050

 

பத்திர மெனும்பெய ரழகும் நன்மையும்

சுரிகையும் சிங்கா சனமும் புள்ளிறகும்

இலையு மெனவே இயம்பப் பெறுமே. ....1051

 

பலியெனும் பெயரே தேவ பூசையும்

பிச்சையும் பலித்தலும் பேசுவர் புலவர். ....1052

 

பரியெனும் பெயரே பாது காத்தலும்

பருத்தியுஞ் சுமத்தலுங் குதிரையும் பெருமையும். ....1053

 

பகடெனும் பெயரே பெருமையு மெருதும்

எருமை யாண்பெயருந் தோணியுங் களிறுமாம். ....1054

 

பதங்க மெனும்பெயர் விட்டிற் பறவையும்

புட்பொதுப் பெயரும் புகலப் பெறுமே. ....1055

 

பயலெனும் பெயர்ச்சிற் றாளும் பள்ளமும்

பந்தியு மெனவே பகருவர் புலவர். ....1056

 

பணில மெனும்பெயர் சலஞ்சலப் பெயரும்

சங்கின் பெயருஞ் சாற்றுவர் புலவர். ....1057

 

பப்பெனும் பெயரே பரப்பும் உவமையும். ....1058

 

பந்தெனும் பெயர்கந் துகமும் கட்டும்

நீர்தூவுஞ் சிறுது ருத்தியும் நிகழ்த்துவர். ....1059

 

பவன மெனும்பெயர் பாருங் காற்றும்

இராசியும் கோயிலு நாடு மில்லமுமாம். ....1060

 

படமெனும் பெயரே பாம்பின் பணமும்

சித்திரப் படமும் சிலையும் கொடியுமாம். ....1061

 

பறம்பெனும் பெயரே மலையு முலையுமாம். ....1062

 

பரத ரெனும்பெயர் தனவைசியர் பேரும்

நெய்தனில மாக்களு நிகழ்த்தப் பெறுமே. ....1063

 

பவமெனும் பெயரே பாவமும் பிறப்புமாம். ....1064

 

பண்ணல் எனும்பெயர் சொல்லு நெருக்கமும்

பருத்தியின் பெயரும் பகரப் பெறுமே. ....1065

 

பயிரெனும் பெயரே யொலியும் பைங்கூழும்

விதந்து கட்டிய வழக்கும் புட்குரலும்

விலங்கின் குரலும் விளம்புவர் புலவர். ....1066

 

படரெனும் பெயரே பரியும் நோயும்

வீரரு நினைத்தலு நடையும் விளம்புவர். ....1067

 

பவித்திர மெனும்பெயர் தருப்பையுஞ் சுசியுமாம். ....1068

 

படிவ மெனும்பெயர் வடிவமு நோன்புமாம். ....1069

 

படுத்த லெனும்பெய ரொலியு முண்டாதலும்

பூத்தலு மின்மைப் பெயரும் புகலுவர். ....1070

 

பதியெனும் பெயரே கணவனும் நாகமும்

தலைவனு மெனவே சாற்றப் பெறுமே. ....1071

 

பத்தி யென்பெயர் வழிபாடு மொழுங்கும்

அடைப்பது முறைமையு மாமென வியம்புவர். ....1072

 

பரித்தல் எனும்பெயர் அறுத்தலும் வெட்டலும்

இரங்கலு மன்பும் இசைக்கப் பெறுமே. ....1073

 

பஞ்ச மெனும்பெயர் ஐந்துஞ் சிறுமையும். ....1074

 

பனுவ லெனும்பெயர் செய்யுளும் நூலுமாம். ....1075

 

பராக மென்பெயர் மலர்த்தாதுவு மிரேணுவும். ....1076

 

பல்ல மெனும்பெயர் பாணமும் கரடியும்

கணக்கிலோர் குணிப்பும் கருதப் பெறுமே. ....1077

 

பத்திரி யெனும்பெயர் பறவையும் பரியுமாம். ....1078

 

பட்டிகை யெனும்பெயர் பணையு மீரமும்

கச்சு மெனவே கருதப் பெறுமே. ....1079

 

பரிவெனும் பெயரே யின்பமுந் துன்பமும்

அன்பு மிதன்பெய ராமென வியம்புவர். ....1080

 

பற்ப மெனும்பெயர் பதுமமுந் தூளுமாம். ....1081

 

பரணி யெனும்பெயர் தரும னாளும்

அழுந்திடு கலனு மதகரிப் பெயருமாம். ....1082

 

பனையெனும் பெயரே போந்தையின் தருவும்

அநுடநாட் பெயரு மாகு மென்ப. ....1083

 

பணமெனும் பெயரே பாம்பின் படமும்

அரவுஞ் செம்பொற் காசு மாமே. ....1084

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.