|
||||||||
பகர அகர வருக்கம் |
||||||||
பகுதி யெனும்பெயர் பரிவே டத்துடன்
வட்ட வடிவு மிரவியு நேமியும். ....1009
பகலெனும் பெயர்பகற் போதும் பிரிவும்
நடுவும் பரணி நாளும் இயம்புவர். ....1010
பச்சை யெனும்பெயர் பசுமையும் புதனும்
தோலும் இலாபமு மரகத மணியுமாம். ....1011
பங்கெனும் பெயரே பகுத்தலும் சனியும்
முடமும் பாதியும் மொழிந்தனர் புலவர். ....1012
பக்க மெனும்பெய ரருகு மிறகுந்
திதியு மண்மையுஞ் செப்பப் பெறுமே. ....1013
பதமெனும் பெயரே பாதமும் சோறும்
வரிசையும் விழாவும் வழியும் வார்த்தையும்
உணவு மீரமுஞ் செல்வியுஞ் சேமமும்
பொழுது மெனவே புகன்றனர் புலவர். ....1014
பணியெனும் பெயரே பணமுடைப் பாம்பும்
தொழிலுந் தொழில்படு கலனுஞ் சொல்லுவர். ....1015
பயமெனும் பெயரே பாலும் சலிலமு
மச்சமும முதுமி லாபமு மாமே. ....1016
பரவை யெனும்பெயர் பரப்புங் கடலுமாம். ....1017
பயோதர மெனும்பெயர் மேகமு முலையுமாம். ....1018
பனியெனும் பெயரே துன்பமு நடுக்கமும்
அச்சமுங் குளிர்ச்சியு மிமமு மாமே. ....1019
பகவ னெனும்பெயர் பரமனு மாலும்
பிரமனும் அருகனும் குருவும் புத்தனும். ....1020
பண்ணவ னெனும்பெயர் முனியும் தேவனும்
குருவுந் திறலோன் பெயருங் கூறுவர். ....1021
பசுவெனும் பெயர்வெண் பெற்றமு முயிருமாம். ....1022
படியெனும் பெயரே பகையும் குணமும்
புவனமு முலகமும் புகலப் பெறுமே. ....1023
படப்பை யெனும்பெயர் நாடு நகரமும்
தோட்டமும் பசுநிரைப் பெயருஞ் சொல்லுவர். ....1024
பட்டெனும் பெயரே பட்டின் விகற்பமும்
சிற்றூர்ப் பெயரும் துகிலுஞ் செப்புவர். ....1025
பள்ளி யெனும்பெயர் தவத்தோ ரிடமும்
துயிறலும் பாயலுஞ் சிற்றூர்ப் பெயரும்
கோயிலின் பெயருங் கூறப் பெறுமே. ....1026
பட்ட மெனும்பெயர் மேம்படு பதவியும்
வழியுங் கவரி மாவுந் துகிலும்
வாயிலு மதகரி முகப டாமும்
விலங்கு துயிலிடமும் படமும் விளம்புவர். ....1027
பதுக்கை யெனும்பெயர் பாறையு மேடும்
சிறுதூ றுமெனச் செப்புவர் புலவர். ....1028
பதலை யெனும்பெயர் மலையுந் தாழியும்
ஒருகட் பரந்த வாய்ப்பறையு மோதுவர். ....1029
பணையெனும் பெயரே பருத்தலு ழூங்கிலும்
மருத நிலமும் வயலு முரசமும்
குதிரையின் பந்தியு மரத்தின் கொம்புமாம். ....1030
பண்ணை யெனும்பெயர் வயலும் வாவியும்
சபையு மகளிர் விளையா டிடமும்
விலங்கு துயிலிடமும் விளம்புவர் புலவர். ....1031
படுவெனும் பெயரே மரத்தின் குலையும்
மதுவும் நன்மையும் வாவியு மாமே. ....1032
பயம்பெனும் பெயரே பகடுபடு குழியும்
நீர்நிலைப் பெயரு நிகழ்த்தினர் புலவர். ....1033
பங்க மெனும்பெயர் சேறும் துகிலும்
பின்னமுந் தீவினைப் பெயரும் பேசுவர். ....1034
பரிசு மென்பெயர் கணைப்படைக் கலமும்
புரிசை யுள்ளுயர்ந்த நிலமும் அகழியும்
மேடையு மெனவே விளம்புவர் புலவர். ....1035
பணவை யெனும்பெயர் பரணுங் கழுதுமாம். ....1036
படையெனும் பெயரே பரிமாக் கலனையும்
ஆயுதப் பொதுவு மடர்கொடுஞ் சேனையும்
கண்படை யுடனே கலப்பையுங் கருதுவர். ....1037
பலமெனும் பெயரே பழமும் கிழங்கும்
சேனையும் லாபமும் நிறையும் செப்புவர். ....1038
பங்கி யெனும்பெயர் ஆண்பான் மயிரும்
அஃறிணைப் பொதுவின் பெயரு மாமே. ....1039
பண்ட மெனும்பெயர் பண்ணி காரத்துடன்
விண்டொளிர் பொன்னும் விளம்பப் பெறுமே. ....1040
படலிகை யென்னும் பெயர்பெரும் பீர்க்கும்
கைமணி வட்டமும் பூத்தட்டின் பெயருமாம். ....1041
படங்கென் பெயர்பெருங் கொடியு மேற்கட்டியும். ....1042
படலை யெனும்பெயர் வாசிக் கோவையும்
படர்தலுந் தொடையலும் பரந்தவாய்ப் பறையுமாம்.....1043
பண்ணெனும் பெயரே பரிமாக் கலனையும்
பாட்டின் பண்ணும் பகரப் பெறுமே. ....1044
பறையென் பெயர்புள்ளி னிறகும் பணையும்
வசனமு மெனவே வழங்கப் பெறுமே. ....1045
பகழி யெனும்பெயர் பகழிக் குதையும்
கணையு மெனவே கருதப் பெறுமே. ....1046
பரமெனும் பெயரே பரிமாக் கலனையும்
மெய்யு மெய்புகு கருவியும் பாரமும்
முன்பு மேலு மொழிந்தனர் புலவர். ....1047
பழங்கணெ னும்பெய ரோசையும் துன்பமும். ....1048
படிறெனும் பெயரே பொய்யொடு களவுமாம். ....1049
பந்த மெனும்பெயர் சீரின் தொடர்ச்சியும்
அழகும் திரட்சியும் கிளையொடு கட்டுமாம். ....1050
பத்திர மெனும்பெய ரழகும் நன்மையும்
சுரிகையும் சிங்கா சனமும் புள்ளிறகும்
இலையு மெனவே இயம்பப் பெறுமே. ....1051
பலியெனும் பெயரே தேவ பூசையும்
பிச்சையும் பலித்தலும் பேசுவர் புலவர். ....1052
பரியெனும் பெயரே பாது காத்தலும்
பருத்தியுஞ் சுமத்தலுங் குதிரையும் பெருமையும். ....1053
பகடெனும் பெயரே பெருமையு மெருதும்
எருமை யாண்பெயருந் தோணியுங் களிறுமாம். ....1054
பதங்க மெனும்பெயர் விட்டிற் பறவையும்
புட்பொதுப் பெயரும் புகலப் பெறுமே. ....1055
பயலெனும் பெயர்ச்சிற் றாளும் பள்ளமும்
பந்தியு மெனவே பகருவர் புலவர். ....1056
பணில மெனும்பெயர் சலஞ்சலப் பெயரும்
சங்கின் பெயருஞ் சாற்றுவர் புலவர். ....1057
பப்பெனும் பெயரே பரப்பும் உவமையும். ....1058
பந்தெனும் பெயர்கந் துகமும் கட்டும்
நீர்தூவுஞ் சிறுது ருத்தியும் நிகழ்த்துவர். ....1059
பவன மெனும்பெயர் பாருங் காற்றும்
இராசியும் கோயிலு நாடு மில்லமுமாம். ....1060
படமெனும் பெயரே பாம்பின் பணமும்
சித்திரப் படமும் சிலையும் கொடியுமாம். ....1061
பறம்பெனும் பெயரே மலையு முலையுமாம். ....1062
பரத ரெனும்பெயர் தனவைசியர் பேரும்
நெய்தனில மாக்களு நிகழ்த்தப் பெறுமே. ....1063
பவமெனும் பெயரே பாவமும் பிறப்புமாம். ....1064
பண்ணல் எனும்பெயர் சொல்லு நெருக்கமும்
பருத்தியின் பெயரும் பகரப் பெறுமே. ....1065
பயிரெனும் பெயரே யொலியும் பைங்கூழும்
விதந்து கட்டிய வழக்கும் புட்குரலும்
விலங்கின் குரலும் விளம்புவர் புலவர். ....1066
படரெனும் பெயரே பரியும் நோயும்
வீரரு நினைத்தலு நடையும் விளம்புவர். ....1067
பவித்திர மெனும்பெயர் தருப்பையுஞ் சுசியுமாம். ....1068
படிவ மெனும்பெயர் வடிவமு நோன்புமாம். ....1069
படுத்த லெனும்பெய ரொலியு முண்டாதலும்
பூத்தலு மின்மைப் பெயரும் புகலுவர். ....1070
பதியெனும் பெயரே கணவனும் நாகமும்
தலைவனு மெனவே சாற்றப் பெறுமே. ....1071
பத்தி யென்பெயர் வழிபாடு மொழுங்கும்
அடைப்பது முறைமையு மாமென வியம்புவர். ....1072
பரித்தல் எனும்பெயர் அறுத்தலும் வெட்டலும்
இரங்கலு மன்பும் இசைக்கப் பெறுமே. ....1073
பஞ்ச மெனும்பெயர் ஐந்துஞ் சிறுமையும். ....1074
பனுவ லெனும்பெயர் செய்யுளும் நூலுமாம். ....1075
பராக மென்பெயர் மலர்த்தாதுவு மிரேணுவும். ....1076
பல்ல மெனும்பெயர் பாணமும் கரடியும்
கணக்கிலோர் குணிப்பும் கருதப் பெறுமே. ....1077
பத்திரி யெனும்பெயர் பறவையும் பரியுமாம். ....1078
பட்டிகை யெனும்பெயர் பணையு மீரமும்
கச்சு மெனவே கருதப் பெறுமே. ....1079
பரிவெனும் பெயரே யின்பமுந் துன்பமும்
அன்பு மிதன்பெய ராமென வியம்புவர். ....1080
பற்ப மெனும்பெயர் பதுமமுந் தூளுமாம். ....1081
பரணி யெனும்பெயர் தரும னாளும்
அழுந்திடு கலனு மதகரிப் பெயருமாம். ....1082
பனையெனும் பெயரே போந்தையின் தருவும்
அநுடநாட் பெயரு மாகு மென்ப. ....1083
பணமெனும் பெயரே பாம்பின் படமும்
அரவுஞ் செம்பொற் காசு மாமே. ....1084
பகுதி யெனும்பெயர் பரிவே டத்துடன் வட்ட வடிவு மிரவியு நேமியும். ....1009
பகலெனும் பெயர்பகற் போதும் பிரிவும் நடுவும் பரணி நாளும் இயம்புவர். ....1010
பச்சை யெனும்பெயர் பசுமையும் புதனும் தோலும் இலாபமு மரகத மணியுமாம். ....1011
பங்கெனும் பெயரே பகுத்தலும் சனியும் முடமும் பாதியும் மொழிந்தனர் புலவர். ....1012
பக்க மெனும்பெய ரருகு மிறகுந் திதியு மண்மையுஞ் செப்பப் பெறுமே. ....1013
பதமெனும் பெயரே பாதமும் சோறும் வரிசையும் விழாவும் வழியும் வார்த்தையும் உணவு மீரமுஞ் செல்வியுஞ் சேமமும் பொழுது மெனவே புகன்றனர் புலவர். ....1014
பணியெனும் பெயரே பணமுடைப் பாம்பும் தொழிலுந் தொழில்படு கலனுஞ் சொல்லுவர். ....1015
பயமெனும் பெயரே பாலும் சலிலமு மச்சமும முதுமி லாபமு மாமே. ....1016
பரவை யெனும்பெயர் பரப்புங் கடலுமாம். ....1017
பயோதர மெனும்பெயர் மேகமு முலையுமாம். ....1018
பனியெனும் பெயரே துன்பமு நடுக்கமும் அச்சமுங் குளிர்ச்சியு மிமமு மாமே. ....1019
பகவ னெனும்பெயர் பரமனு மாலும் பிரமனும் அருகனும் குருவும் புத்தனும். ....1020
பண்ணவ னெனும்பெயர் முனியும் தேவனும் குருவுந் திறலோன் பெயருங் கூறுவர். ....1021
பசுவெனும் பெயர்வெண் பெற்றமு முயிருமாம். ....1022
படியெனும் பெயரே பகையும் குணமும் புவனமு முலகமும் புகலப் பெறுமே. ....1023
படப்பை யெனும்பெயர் நாடு நகரமும் தோட்டமும் பசுநிரைப் பெயருஞ் சொல்லுவர். ....1024
பட்டெனும் பெயரே பட்டின் விகற்பமும் சிற்றூர்ப் பெயரும் துகிலுஞ் செப்புவர். ....1025
பள்ளி யெனும்பெயர் தவத்தோ ரிடமும் துயிறலும் பாயலுஞ் சிற்றூர்ப் பெயரும் கோயிலின் பெயருங் கூறப் பெறுமே. ....1026
பட்ட மெனும்பெயர் மேம்படு பதவியும் வழியுங் கவரி மாவுந் துகிலும் வாயிலு மதகரி முகப டாமும் விலங்கு துயிலிடமும் படமும் விளம்புவர். ....1027
பதுக்கை யெனும்பெயர் பாறையு மேடும் சிறுதூ றுமெனச் செப்புவர் புலவர். ....1028
பதலை யெனும்பெயர் மலையுந் தாழியும் ஒருகட் பரந்த வாய்ப்பறையு மோதுவர். ....1029
பணையெனும் பெயரே பருத்தலு ழூங்கிலும் மருத நிலமும் வயலு முரசமும் குதிரையின் பந்தியு மரத்தின் கொம்புமாம். ....1030
பண்ணை யெனும்பெயர் வயலும் வாவியும் சபையு மகளிர் விளையா டிடமும் விலங்கு துயிலிடமும் விளம்புவர் புலவர். ....1031
படுவெனும் பெயரே மரத்தின் குலையும் மதுவும் நன்மையும் வாவியு மாமே. ....1032
பயம்பெனும் பெயரே பகடுபடு குழியும் நீர்நிலைப் பெயரு நிகழ்த்தினர் புலவர். ....1033
பங்க மெனும்பெயர் சேறும் துகிலும் பின்னமுந் தீவினைப் பெயரும் பேசுவர். ....1034
பரிசு மென்பெயர் கணைப்படைக் கலமும் புரிசை யுள்ளுயர்ந்த நிலமும் அகழியும் மேடையு மெனவே விளம்புவர் புலவர். ....1035
பணவை யெனும்பெயர் பரணுங் கழுதுமாம். ....1036
படையெனும் பெயரே பரிமாக் கலனையும் ஆயுதப் பொதுவு மடர்கொடுஞ் சேனையும் கண்படை யுடனே கலப்பையுங் கருதுவர். ....1037
பலமெனும் பெயரே பழமும் கிழங்கும் சேனையும் லாபமும் நிறையும் செப்புவர். ....1038
பங்கி யெனும்பெயர் ஆண்பான் மயிரும் அஃறிணைப் பொதுவின் பெயரு மாமே. ....1039
பண்ட மெனும்பெயர் பண்ணி காரத்துடன் விண்டொளிர் பொன்னும் விளம்பப் பெறுமே. ....1040
படலிகை யென்னும் பெயர்பெரும் பீர்க்கும் கைமணி வட்டமும் பூத்தட்டின் பெயருமாம். ....1041
படங்கென் பெயர்பெருங் கொடியு மேற்கட்டியும். ....1042
படலை யெனும்பெயர் வாசிக் கோவையும் படர்தலுந் தொடையலும் பரந்தவாய்ப் பறையுமாம்.....1043
பண்ணெனும் பெயரே பரிமாக் கலனையும் பாட்டின் பண்ணும் பகரப் பெறுமே. ....1044
பறையென் பெயர்புள்ளி னிறகும் பணையும் வசனமு மெனவே வழங்கப் பெறுமே. ....1045
பகழி யெனும்பெயர் பகழிக் குதையும் கணையு மெனவே கருதப் பெறுமே. ....1046
பரமெனும் பெயரே பரிமாக் கலனையும் மெய்யு மெய்புகு கருவியும் பாரமும் முன்பு மேலு மொழிந்தனர் புலவர். ....1047
பழங்கணெ னும்பெய ரோசையும் துன்பமும். ....1048
படிறெனும் பெயரே பொய்யொடு களவுமாம். ....1049
பந்த மெனும்பெயர் சீரின் தொடர்ச்சியும் அழகும் திரட்சியும் கிளையொடு கட்டுமாம். ....1050
பத்திர மெனும்பெய ரழகும் நன்மையும் சுரிகையும் சிங்கா சனமும் புள்ளிறகும் இலையு மெனவே இயம்பப் பெறுமே. ....1051
பலியெனும் பெயரே தேவ பூசையும் பிச்சையும் பலித்தலும் பேசுவர் புலவர். ....1052
பரியெனும் பெயரே பாது காத்தலும் பருத்தியுஞ் சுமத்தலுங் குதிரையும் பெருமையும். ....1053
பகடெனும் பெயரே பெருமையு மெருதும் எருமை யாண்பெயருந் தோணியுங் களிறுமாம். ....1054
பதங்க மெனும்பெயர் விட்டிற் பறவையும் புட்பொதுப் பெயரும் புகலப் பெறுமே. ....1055
பயலெனும் பெயர்ச்சிற் றாளும் பள்ளமும் பந்தியு மெனவே பகருவர் புலவர். ....1056
பணில மெனும்பெயர் சலஞ்சலப் பெயரும் சங்கின் பெயருஞ் சாற்றுவர் புலவர். ....1057
பப்பெனும் பெயரே பரப்பும் உவமையும். ....1058
பந்தெனும் பெயர்கந் துகமும் கட்டும் நீர்தூவுஞ் சிறுது ருத்தியும் நிகழ்த்துவர். ....1059
பவன மெனும்பெயர் பாருங் காற்றும் இராசியும் கோயிலு நாடு மில்லமுமாம். ....1060
படமெனும் பெயரே பாம்பின் பணமும் சித்திரப் படமும் சிலையும் கொடியுமாம். ....1061
பறம்பெனும் பெயரே மலையு முலையுமாம். ....1062
பரத ரெனும்பெயர் தனவைசியர் பேரும் நெய்தனில மாக்களு நிகழ்த்தப் பெறுமே. ....1063
பவமெனும் பெயரே பாவமும் பிறப்புமாம். ....1064
பண்ணல் எனும்பெயர் சொல்லு நெருக்கமும் பருத்தியின் பெயரும் பகரப் பெறுமே. ....1065
பயிரெனும் பெயரே யொலியும் பைங்கூழும் விதந்து கட்டிய வழக்கும் புட்குரலும் விலங்கின் குரலும் விளம்புவர் புலவர். ....1066
படரெனும் பெயரே பரியும் நோயும் வீரரு நினைத்தலு நடையும் விளம்புவர். ....1067
பவித்திர மெனும்பெயர் தருப்பையுஞ் சுசியுமாம். ....1068
படிவ மெனும்பெயர் வடிவமு நோன்புமாம். ....1069
படுத்த லெனும்பெய ரொலியு முண்டாதலும் பூத்தலு மின்மைப் பெயரும் புகலுவர். ....1070
பதியெனும் பெயரே கணவனும் நாகமும் தலைவனு மெனவே சாற்றப் பெறுமே. ....1071
பத்தி யென்பெயர் வழிபாடு மொழுங்கும் அடைப்பது முறைமையு மாமென வியம்புவர். ....1072
பரித்தல் எனும்பெயர் அறுத்தலும் வெட்டலும் இரங்கலு மன்பும் இசைக்கப் பெறுமே. ....1073
பஞ்ச மெனும்பெயர் ஐந்துஞ் சிறுமையும். ....1074
பனுவ லெனும்பெயர் செய்யுளும் நூலுமாம். ....1075
பராக மென்பெயர் மலர்த்தாதுவு மிரேணுவும். ....1076
பல்ல மெனும்பெயர் பாணமும் கரடியும் கணக்கிலோர் குணிப்பும் கருதப் பெறுமே. ....1077
பத்திரி யெனும்பெயர் பறவையும் பரியுமாம். ....1078
பட்டிகை யெனும்பெயர் பணையு மீரமும் கச்சு மெனவே கருதப் பெறுமே. ....1079
பரிவெனும் பெயரே யின்பமுந் துன்பமும் அன்பு மிதன்பெய ராமென வியம்புவர். ....1080
பற்ப மெனும்பெயர் பதுமமுந் தூளுமாம். ....1081
பரணி யெனும்பெயர் தரும னாளும் அழுந்திடு கலனு மதகரிப் பெயருமாம். ....1082
பனையெனும் பெயரே போந்தையின் தருவும் அநுடநாட் பெயரு மாகு மென்ப. ....1083
பணமெனும் பெயரே பாம்பின் படமும் அரவுஞ் செம்பொற் காசு மாமே. ....1084
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|