|
||||||||
பகர இகர வருக்கம் |
||||||||
பிள்ளை யெனும்பெயர் வடுகக் கடவுளுங்
காரிப் புள்ளுட னிளமரக் கன்றும்
மகவின் பெயரும் வகுத்துரைத் தனரே. ....1119
பிதா வெனும்பெயர் சிவபெருமான் பெயரும்
பிரமன் பெயரும் தாதைதன் பெயரும்
பெருநா ரைப்புட் பெயரும் பேசுவர். ....1120
பிசித மெனும்பெயர் நீறும் புலாலும்
வேம்பின் பெயரும் விளம்புவர் புலவர். ....1121
பிச்ச மெனும்பெயர் பீலிக் குடையும்
ஆண்பான் மயிரும் வெண்குடையு மாமே. ....1122
பிசியெனும் பெயரே பேசுதற் பொருளும்
பொய்யுஞ் சோறும் புகலப் பெறுமே. ....1123
பிண்டி யெனும்பெயர் நென்மா முதலவும்
அசோக மரமும் பிண்ணாக்கு மாமே. ....1124
பிரச மெனும்பெயர் தேனீப் பெயரும்
தேனின் பெயரு மிறாலுஞ் செப்புவர். ....1125
பிறங்க லெனும்பெயர் பெருமையு நிறைவும்
மலையு முயரமும் வகுக்கப் பெறுமே. ....1126
பிணையெனும் பெயரே விலங்கின் பெண்பாலும்
விருப்பமு மானும் விளம்புவர் புலவர். ....1127
பிணிமுக மெனும்பெயர் புட்பொதுப் பெயருடன்
மயிலு மன்னமும் வகுத்து ரைத்தனரே. ....1128
பிங்கல மெனும்பெயர் செங்கன கத்தொடு
பொன்னி னிறமும் புகன்றனர் புலவர். ....1129
பின்னை யெனும்பெயர் பிற்றைப் பொழுதும்
தங்கையுங் கண்ணன் மனைவியுஞ் சாற்றுவர். ....1130
பிண்ட மெனும்பெயர் பிச்சையுந் திரட்சியும்
தேகமு மென்னச் செப்புவர் புலவர். ....1131
பிரம மெனும்பெயர் சிவனு மாயனும்
பிரமனும் இரவியு மதியுங் கனலும்
மந்திரமும் வேதமும் முத்தித் தருமமும்
வேள்வியு முனிவரும் விளம்பப் பெறுமே. ....1132
பிப்பில மெனும்பெயர் திப்பிலி அரசுமாம். ....1133
பிலவங்க மென்பெயர் தேரையுங் குரங்குமாம். ....1134
பிதிரெனும் பெயரே தென்புலத் தெய்வமும்
நொடித்தலும் திவலையுங் கிளியின் விகற்பமும்
கதையு மெனவே கருதப் பெறுமே. ....1135
பித்திகை யெனும்பெயர் கவர்த்த லத்துடனே
கொத்தவிழ் கருமுகைப் பெயருங் கூறுவர். ....1136
பிறழ்த லெனும்பெயர் பெயர்தலும் ஒளிர்தலும். ....1137
பிசின மெனும்பெயர் பொய்யனுங் கோளனும். ....1138
பிள்ளை யெனும்பெயர் வடுகக் கடவுளுங் காரிப் புள்ளுட னிளமரக் கன்றும் மகவின் பெயரும் வகுத்துரைத் தனரே. ....1119
பிதா வெனும்பெயர் சிவபெருமான் பெயரும் பிரமன் பெயரும் தாதைதன் பெயரும் பெருநா ரைப்புட் பெயரும் பேசுவர். ....1120
பிசித மெனும்பெயர் நீறும் புலாலும் வேம்பின் பெயரும் விளம்புவர் புலவர். ....1121
பிச்ச மெனும்பெயர் பீலிக் குடையும் ஆண்பான் மயிரும் வெண்குடையு மாமே. ....1122
பிசியெனும் பெயரே பேசுதற் பொருளும் பொய்யுஞ் சோறும் புகலப் பெறுமே. ....1123
பிண்டி யெனும்பெயர் நென்மா முதலவும் அசோக மரமும் பிண்ணாக்கு மாமே. ....1124
பிரச மெனும்பெயர் தேனீப் பெயரும் தேனின் பெயரு மிறாலுஞ் செப்புவர். ....1125
பிறங்க லெனும்பெயர் பெருமையு நிறைவும் மலையு முயரமும் வகுக்கப் பெறுமே. ....1126
பிணையெனும் பெயரே விலங்கின் பெண்பாலும் விருப்பமு மானும் விளம்புவர் புலவர். ....1127
பிணிமுக மெனும்பெயர் புட்பொதுப் பெயருடன் மயிலு மன்னமும் வகுத்து ரைத்தனரே. ....1128
பிங்கல மெனும்பெயர் செங்கன கத்தொடு பொன்னி னிறமும் புகன்றனர் புலவர். ....1129
பின்னை யெனும்பெயர் பிற்றைப் பொழுதும் தங்கையுங் கண்ணன் மனைவியுஞ் சாற்றுவர். ....1130
பிண்ட மெனும்பெயர் பிச்சையுந் திரட்சியும் தேகமு மென்னச் செப்புவர் புலவர். ....1131
பிரம மெனும்பெயர் சிவனு மாயனும் பிரமனும் இரவியு மதியுங் கனலும் மந்திரமும் வேதமும் முத்தித் தருமமும் வேள்வியு முனிவரும் விளம்பப் பெறுமே. ....1132
பிப்பில மெனும்பெயர் திப்பிலி அரசுமாம். ....1133
பிலவங்க மென்பெயர் தேரையுங் குரங்குமாம். ....1134
பிதிரெனும் பெயரே தென்புலத் தெய்வமும் நொடித்தலும் திவலையுங் கிளியின் விகற்பமும் கதையு மெனவே கருதப் பெறுமே. ....1135
பித்திகை யெனும்பெயர் கவர்த்த லத்துடனே கொத்தவிழ் கருமுகைப் பெயருங் கூறுவர். ....1136
பிறழ்த லெனும்பெயர் பெயர்தலும் ஒளிர்தலும். ....1137
பிசின மெனும்பெயர் பொய்யனுங் கோளனும். ....1138
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|