LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கலைசைக்கோவை

பகற்குறி

கிழவோன்பிரிந்துழிக் கிழத்தி மாலையம்பொழுது
155.
வெள்ளைவண் டூர்செய்க் கலைசைத் தியாகரை மேவலர்போல்
வள்ளையை மோதுங்கண் ணாயன்பர் சேய்மையர் வாரியிலேழ்
கிள்ளையந் தேரினன் வீழ்ந்தொளித் தான்மதி கீண்டெனக்கே
கொள்ளைவெம் மாலை யெழுப்பவிம் மாலை குறுகியதே. 1

பாங்கி புலம்பல்.
156.
சடைநெடு மோலிக் கலைசைத் தியாகர் சயிலத்தென்னை
உடையவள் சோரவிம் மாலையம் போதிங் குறவருவித்
திடையற வின்றிர வித்தேர் விரைந்திழுத் தேகுதலால்
கடையி லரிசி வடவையின் வேவக் கடவதுவே. 2

தலைவன் நீடத் தலைவி வருந்தல்.
157.
தென்மாலை யுண்ணும் பணியார் கலைசைத் தியாகர்வெற்பில்
பன்மாலை கொண்டுநற் பண்ணைமின் னார்வந்தெம் பாலுறுமுன்
என்மாலை வேலொடும் வந்தில ரென்னல மேய்ந்துண்டுநென்
னன்மாலை தேர்க்கொரு காலோ னுடன்சென்ற நல்லவரே. 3

தலைவியைப் பாங்கி கழறல்
158.
திருவாளர் வாழுங் கலைசைத் தியாகர்நற் றேசத்தையை
மருவார் குழலி யிரண்டா முருபின் மதித்திடனீ
அருவான கோவெங்கும் போய்வரு மாறில்லை யம்புவிமேல்
உருவான கோவெங்கும் போய்வரு மாலொவ் வொருதொழிற்கே. 4

தலைவி முன்னிலைப்புறமொழி மொழிதல்.
159.
பொன்னொன் றிலாத வறியரைப் போலுறும் புன்மையல்லால்
மன்னொன்று மாறு மறக்கிலென் னாநல்ல மார்க்கமதா
முன்னொன்று கூறிக் கலைசைத் தியாகரை முன்னலர்போல்
பின்னொன் றுரைத்திடுந் தன்மையர்க் கேதென்று பேசுவதே. 5

தலைவி பாங்கியொடு புலம்பல்.
160.
தோயும் ‍பொழுது முலைத்தடந் தோய்தலில் லாவிடத்தும்
ஏயும் குளிர்பனி நீருஞ்செந் தீயு மெனச்சுகமும்
காயும் பரிவையும் காட்டுவர் செம்‍பொற் கனங்குழையாய்
ஆயுங் கலைகொள் கலைசைத் தியாக ரசலத்தரே. 6

தலைவியைப் பாங்கி அச்சுறுத்தல்.
161.
ஏறும் புகழ்வண் கலைசைத் தியாகர்வெற் பேந்தலின்பால்
ஏறு மனத்தொ டினைதலென் னீபுள் ளினங்களின்வாய்
ஏறுந் தினைக்குரல் கண்டாலிக் காவ லினிப்புதிதாய்
ஏறு நமக்குப் புனங்காவன் மாறுமில் லேறுவமே. 7

நீங்கற்கருமை தலைவி நினைந்திரங்கல்.
162.
திருமங்கை பாகர் கலைசைத் தியாகர் சிலம்பின்மலர்
ஒருமங்கை கேள்வன் மருமங்கைக் கொண்ட வுபாயமுநூல்
வருமங்கைகொண்கன்செந்நாவுறைவஞ்சமும்வாய்ப்பக் கண்டேன்
கருமங்கை கூடச்சென் றார்கள்ளங் கண்டல்லல் கண்டபின்னே. 8

தலைவிக்கு அவன்வரல் பாங்கி சாற்றல்.
163.
கருநட்ட கண்டர் கலைசைத் தியாகர் கடையுகநாள்
திருநட்ட மாடுபொற் பாதங்கொள் வேதச் சிலம்பொலிபோல்
செருநட்ட வேன்மன்னர் தேர்மணி யோசை செவிப்புலனால்
மருநட்ட பூங்குழல் கேட்டரு ளுன்கண் மழைநிற்கவே. 9

தோழி சிறைப்புறமாகச் செழிப்பறிவுறுத்தல்.
164.
ஆண்டகை யாரெங் கலைசைத் தியாக ரருளினல்லாய்
ஈண்டுகை யாற்றழை கொய்யார்நம் மன்ன ரினிக்கலைமான்
மீண்டுகை யாளுந் தினைக்கு நமக்கும் விடைதந்துதீத்
தீண்டுகை யார்பின் கொடிகட்டி வாழ்வரித் தேம்புனத்தே. 10

தோழி முன்னிலைப்புறமொழி மொழிந்து
இற்செறிப்புணர்த்தல்.
165.
இளங்காளை யூருங் கலைசைத் தியாகர்வெற் பேறுசிகா
வளங்காள் சுகங்காண் மறக்கப் பெறீரெம்மை மன்மதன்கா
களங்காள மையன்ன சொற்குழ லாளைக் கலந்தவிறல்
விளங்காளி மொய்ம்புடை வேலா னயர்ந்து விடுக்கினுமே. 11

பாங்கி தலைமகன் முன்னின்று இற்செறிப்புணர்த்தல்.
166.
பனையை யிடங்கொள் கலைசைத் தியாகர் பரமரென்றீ
வினையையெல் லாமரிந் தாங்குநற் போது விளக்கணிகள்
தினையையெல் லாமரிந் தாரெமர் யாங்கள்செவ் வேலண்ணலெ
மனையையின் றேகுவம் வண்புனங் காவற் றொழிலொழிந்தே. 12

பாங்கி தலைவன்முன்னின்று இற்செறிப்புணர்த்தி
ஓம்படை சாற்றல்.
167.
இரும்புலி போற்றுங் கலசத் தியாக ரெழிற்கலைசைப்
பெரும்புகழ் நாட பசும்பயிர் தானிவள் பேசிடுநான்
விரும்புமோர் வேலி யருண்மாரி யென்று மிகப்பொழியும்
கரும்புய னீயத னாற்பாது காக்குங் கடனுனக்கே. 13

தலைமகன் தஞ்சம்பெறாது நெஞ்சொடு கிளத்தல்.
168.
தனியா னுகக்குங் கலைசைத் தியாகர் தடத்தினெஞ்சே
தொனியார் சகுந்தங்க ளோட்டிச்செவ் வேனலஞ் சூழல்வைகிக்
கனியா ரிதழ்மதுத் தந்திது காறுங் கலந்திருந்த
இனியார் பிரியி னினியாரைக் காண்பம்வந் திப்புனத்தே. 14

by Swathi   on 19 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.