|
|||||
சரப்ஜித்சிங்கை மேல் சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்ப மாட்டோம் - பாகிஸ்தான் அரசு ! |
|||||
பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு உயிருக்கு போரடி வரும் இந்திய தூக்குதண்டனை கைதி சரப்ஜித்சிங்கை மேல்சிகிச்சைக்காக லண்டன் கொண்டுசெல்லுமாறு பாகிஸ்தான்
மருத்துவர்கள் அறிவுறுத்திய போதும், பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்க மறுத்துள்ளது.
பாகிஸ்தானில் லாகூர் கோட் லக்பாட் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய தூக்குதண்டனை கைதி சரப்ஜித்சிங் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சக கைதிகளால் கூர்மையான ஆயுதங்களால் அவர்
தாக்கப்பட்டார். இதனால் படுகாயம் அடைந்த அவர் லாகூரில் உள்ள ஜின்னா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். ஆழ்நிலை கோமாவில் இருக்கும் அவருக்கு பாகிஸ்தான் மருத்துவ குழு
தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. தொடர்ந்து அவருடைய உடல் நிலை கவலைக்கிடமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் இருந்து சென்ற சரப்ஜித்சிங்கின் குடும்பத்தினர் லாகூரில் சிகிச்சை பெற்றுவரும் சரப்ஜித்சிங்கை ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தனர். 15 நிமிடங்கள் மட்டுமே அவர்கள்
சரப்ஜித்சிங்கை பார்க்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சரப்ஜித்தின் சகோதரி, அவரை மேல் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று,
கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், சரப்ஜித்சிங் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கப்படலாம் என்று, நேற்று பாகிஸ்தானில் தகவல் வெளியானது. அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள்
குழுவினர் அது குறித்து முடிவு எடுப்பார்கள் என்றும் அந்த தகவல் கூறியது. ஆனால், இந்த தகவலை பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பஞ்சாப் மாகாண
சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர், அதுபோன்ற எந்த ஒரு திட்டமும் இல்லை என்று அறிவித்தார். மேலும் சரப்ஜித்துக்கு பாகிஸ்தானிலேயே சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக
கூறிய அவர், வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு அனுப்புவது தொடர்பாக, டாக்டர்கள் குழுவுக்கு சட்டபூர்வ அதிகாரம் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு உயிருக்கு போரடி வரும் இந்திய தூக்குதண்டனை கைதி சரப்ஜித்சிங்கை மேல்சிகிச்சைக்காக லண்டன் கொண்டுசெல்லுமாறு பாகிஸ்தான் மருத்துவர்கள் அறிவுறுத்திய போதும், பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்க மறுத்துள்ளது.
பாகிஸ்தானில் லாகூர் கோட் லக்பாட் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய தூக்குதண்டனை கைதி சரப்ஜித்சிங் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சக கைதிகளால் கூர்மையான ஆயுதங்களால் அவர் தாக்கப்பட்டார். இதனால் படுகாயம் அடைந்த அவர் லாகூரில் உள்ள ஜின்னா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். ஆழ்நிலை கோமாவில் இருக்கும் அவருக்கு பாகிஸ்தான் மருத்துவ குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. தொடர்ந்து அவருடைய உடல் நிலை கவலைக்கிடமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் இருந்து சென்ற சரப்ஜித்சிங்கின் குடும்பத்தினர் லாகூரில் சிகிச்சை பெற்றுவரும் சரப்ஜித்சிங்கை ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தனர். 15 நிமிடங்கள் மட்டுமே அவர்கள் சரப்ஜித்சிங்கை பார்க்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சரப்ஜித்தின் சகோதரி, அவரை மேல் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று, கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், சரப்ஜித்சிங் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கப்படலாம் என்று, நேற்று பாகிஸ்தானில் தகவல் வெளியானது. அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் குழுவினர் அது குறித்து முடிவு எடுப்பார்கள் என்றும் அந்த தகவல் கூறியது. ஆனால், இந்த தகவலை பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பஞ்சாப் மாகாண சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர், அதுபோன்ற எந்த ஒரு திட்டமும் இல்லை என்று அறிவித்தார். மேலும் சரப்ஜித்துக்கு பாகிஸ்தானிலேயே சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு அனுப்புவது தொடர்பாக, டாக்டர்கள் குழுவுக்கு சட்டபூர்வ அதிகாரம் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
|
|||||
by Swathi on 30 Apr 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|