LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீதேசிகப் பிரபந்தம்

பலச்ருதி கூறல்

அந்தமிலா வாரணநா லாகி நின்ற
வதன்கருத்தை யாழ்வார்க ளாய்ந்தெ டுத்துச்
செந்தமிழா லருள்செய்த வகைதொ கையுஞ்
சிந்தாம லுலகங்கள் வாழ வென்று
சந்த மிகு தமிழ்மறையோன் றூப்புற் றோன்றும்
வேதாந்த குருமொழிந்த ப்ரபந்த சாரஞ்
சிந்தையினா லனுதினமுஞ் சிந்திப் போர்க்குச்
சேமமதாந் திருமாறன் கருணை யாலே.

ஆகாரநியமம்
சிறப்புத்தனியன்

சீராரும் வேதாந்த தேசி கர்கோன்
செழுமறையி னுட்பொருளைச் சந்தை செய்தே
யாராய்ந்து வாழ்வுறவிப் புவியோர் தங்கட்
கன்புடனே யாகார நியதி சொன்னா
னேரார மெதிராச ரருளி னாலே
யெதிர்த்தவர்கள் சிங்கமென விங்கு வந்தோன்
சீராரும் வேங்கடவன் றூப்புற் பிள்ளை
செழுந்திருத்தாளிணைமலரென் சென்ன மேலே.

இந்த ப்ரபந்தவரலாறு


19-1
ஆகாரத் திருவகையா நன்றுந் தீது
மருமறைகொண் டெதிராச ரிவைமொ ழிந்தா
ராகாத வழிவிலக்கி யாக்கங் கண்ண
னணைத்துலகும் வாழவிது சாற்றி வைத்தான்
போகாது போக்குவிக்கு முனிவர் சொன்ன
பொய்யாத மொழிகளையும் பொருந்தக் கேண்மி
னாகாதென் றவைதவிர்ந்தா மதுவே கொண்ட
வசகரனு மாகங்காத் தருள்பெற் றானே.

பாசுரம் 2 முதல் 10 வரை-விலக்கவேண்டிய அம்சங்கள்

19-2
வாயிலல்லா வாயிலினால் வந்த சோறும்
வரகுமுத லாகாதென் றுரைத்த சோறும்
வாயினின்றும் விழுமவைதாம் பட்ட சோறும்
வாய்கொண்ட கவளத்தின் மகுந்த சோறுந்
தீயவர்கண் படுஞ்சோறுந் தீதற் சோறுஞ்
சீரையுரை தும்மிலிவை பட்ட சோறு
நாய் முதலா னவைபார்க்குந் தீண்டுஞ் சோறு
நாடூய்தல் லாச்சோறு நண்ணாச் சோறே.

19-3
மனிசர்பசு முதலானோர் மோந்த சோறு
மனிசர்தமி லாகாதார் தீண்டுஞ் சோறு
மினிமையுட னாதரமில் லாதார் சோறு
மீப்புழுநூன் மயிருகிர்க ளிருக்குஞ் சோறு
முனிவரெனுந் துறவறத்தோ ரீந்த சோறு
முனிவர்தங்கள் பாத்திரத்திற் பட்ட சோறு
மனிசரெலி குக்குடங்கள் காகம் பூனை
வாய்கொண்ட கறிசோறு மருவாச் சோறே.

19-4
அத்திகள்பே ரார்க்கிறலி வெண்கத் தாரி
யாலரசு நறுவிலிபுங் காயி லாரை
புத்திகொல்லி குறிஞ்சிதான்றி குசும்பை வேளை
புனமுருங்கை முருங்கைசுக முளரி யுள்ளி
சிற்றவரை கொம்மட்டி பண்ணை தொய்யில்
சீங்கர்ன் றேறலுaவை பனைம யூரன்
சுத்தியிலா நிலத்திலவை கடம்பு காளான்
சுரைபீர்க்குச் சணந்தின்னார் சுருதி யோரே.

19-5
சிறுகீரை செவ்வகத்தி முருக்கி ரண்டுஞ்
சிறுபசளை பெரும்பசளை யம்ம ணந்தாள்
பறித்தொருவர் கொடாதிருக்கத் தானே சென்று
பாய்தெடுத்துக் கொள்ளுமவை பகிராக் கூறுங்
குறித்தாலுந் தின்னவொணாக் கைப்பு வர்ப்புங்
கூர்க்குமவை யழலுமவை கொடும்பு ளிப்புங்
கறிக்காகா விவையென்று கண்டு ரைத்தார்
கார்மேனி யருளாளர் கடகத் தாரே.

19-6
மாலமுது செய்யாமல் வந்த வெல்லாம்
வருவிருந்தில் வழங்காமல் வைத்த வெல்லாங்
காலமிது வன்றென்று கழித்த வெல்லாங்
கடையின்வருங் கறி முதல் கழுவா வெல்லா
நுலைசையா வழிகளினால் வந்த வெல்லா
நுகராத துடன்பாகஞ் செய்த வெல்லா
ஞ்சீலமிலாச் சிறியோராக் கினவு நல்லோர்
செலமலங்கள் பட்டனவுந் தின்னார் தாமே.

19-7
தேவர்களுக் கிவையென்று வைத்த வெல்லாஞ்
சிவன்முதலாத் தேவர்களுக் கிட்ட வெல்லா
மாவிமுத லானவற்றுக் காகா வெல்லா
மதுவிதவென் றறியவரி தான வெல்லா
நாவிலிடு வதற்கரிதா யிருப்ப வெல்லா
நன்றென்று தம்முள்ள மிசையா வெல்லா
மோவியநா ளோவாத பூவுங் காயு
முத்தமர்க ளட்டுப்பு முகவார் தாமே.

19-8
கிளிஞ்சின்முதல் சுட்டனசுண் ணாம்பு தானுங்
கிளர்புனலி லெழுங்குமிழி நுரைக டாமும்
விளைந்தனின் முதன்மாலுக் கீயா வெல்லாங்
விளைந்தநில மறுகாம்பென் றெழுந்த வெல்லாங்
களைந்தமனத் தார்மற்றுங் கழித்த வெல்லாங்
கடியமுதி னியமத்தார் கழத்த வெல்லாந்
தெளிந்தபுனற் றிருவேங்க டத்த மாறன்
றிருவாணை கடவாதார் தின்னார் தாமே.

19-9
மோரலது சாரங்கள் வாங்கிற் றெல்லா
முழுப்பகலில் விளங்கனியுந் தானந் தானு
மோரிரவி லெள்ளுசனே கூடிற் றெல்லா
மெள்ளதனி லெண்ணைய்தயர் தருபண் டங்க
ளோர்தவத்தை மந்திரத்தை யொழிப்ப வெல்லா
முண்ணாத நாட்களிலூ ணத்திப் போதூ
ணூரணனூ ரடிபணியு நல்லோர் நாளு
நள்ளிரவி லூணுமிவை யுண்ணார் தாமே.

19-10
குளிமுதலா னவைசெய்யா துண்ணு மூணுங்
கூட்டலடலாப் பந்திலூண் பிறக்கை யூணு
நளிமதிதீ வளக்காக வுண்ணு மூணு
நள்ளிரவில் வளக்கின்றி யுண்ணு மூணுங்
கிளிமொழியா ளுணூநிற்கக் கணவ னூணுங்
கீழோரை நோக்கூணு மிடக்கை யூணு
மொளிமறையோர் மற்றுமுக வாத வூணு
மொளியரங்க ரடிபணிவார் ருகவார் தாமே.

19-11
எச்சிறனில் வார்க்குந்நெய் யிருபா கங்க
ளிருமபாலுங் கையாலு மிட்ட வெல்லாம்
பச்சையலாற் கடித்தகுறை பழைய வூசல்
பிறரகத்துப் பாகஞ்செய் தெடுத்த வன்ன
மச்சினவை பழித்தவைமண் ணாற்றந் தீது
நகத்தாலே விண்டவைதாங் காணு முப்பும்
பிச்சுளதா மவைகாடி பின்ன பாகம்
பிசின்கடனிற் சிவந்ததுவும் பிழையூ ணாமே.

19-12
தாதைநல்லா சூரியன்முதற் றமைய னெச்
சிறரணிசுரர் சோமத்தி லருந்து மெச்சின்
மாதர்கடகுக் கணவனித மான வெச்சின்
மயிர்புழுநூல் வழுந்தாலும் புனித மண்ணின்
மாதவத்துக் கூவிளங்காய் முகவா சத்து
மாதுளங்காய் மரணம்வரிற் கழித்த வெல்லா
மோதிவைத்த வுண்ணாநா ளுகந்த வெட்டு
முளவென்றுங் கழித்தவற்றி னன்றா மூணே.

19-13
மாகரும்பின் சாறுதயிர் பானெய் பாக்கு
வளை மிளகு தேனேலம் பனிநீ ராதி
யாகரசந் துஎய்தாகு மறியா வெல்லா
மறியாதார்க் கறியவுந் தூய வாகுஞ்
சாகரங்க டூயனவா முவாக்கள் கூடிற்
சலமெல்லாங் கங்கையதா முபரா கத்தின்
மாகரங்கள் பிணமுதலா மனைத்துங் கொண்டு
வருபுனலுந் தூய்தாகும் வேகத் தாலே.

19-14
தீயாலே நீரொழிய வெந்த வெல்லாந்
தீயிடுத லொழிந்திடவே பழுத்த வெல்லாந்
தீயாலு நீராலும் வெந்த வற்றிற்
றேறவுலர் நெல்லுமுத லான வெல்லா
மூசாத மாவடக மப்பஞ் சீடை
யுரொட்டிமுத லாமவற்றிற் பழைய தேனுங்
கூசாதே கொண்டிடுமின் புதிய தேனுங்
கொள்ளேனமின் றன்னிரதங் குலைந்தக் காலே.

19-15
தலைப்பயனாம் விகாரங்கள் சாக தங்கள்
சக்கரங்கக் னக்கடைத்த மருந்து தானுங்
கலக்கமிலா நன்னீரில் வைத்த சோறுங்
கறிமோர்நெய் பாறயிர்கள் கலந்த சோறும்
விலக்கமிலா மாக்கன்னற் கோது மத்தால்
விளைவுறவாக் கியநல்வி காரந் தானு
மிலைக்கறிபோ லிவையனைத்தும் பழைய வேனு
மெந்நாளும் வைத்துண்ண விசைகின் றாரே.

19-16
தயிர்தன்னின் விகாரங்கள் பூவிற் காயிற்
பழத்தில்வருஞ் சாறூச றூய வாகு
முயிரழியா மைக்குண்ணா வூச லுண்ணி
லுறக்கழுவி நெய்தேனிட் டுண்ண லாகும்
பயின்மறைநூ லுரையாத பழைய வூசல்
பழிப்பிலதா நெய்யாலென் றுரைத்தான் சங்கன்
மயிற்முதலா னவைபின்னும் பட்ட தாயின்
மண்ணீர்மற் றுரைத்தவற்றால் வரங்க ளாமே.

19-17
ஒருகுளம்பி யிருகன்றி யொட்fட கப்பா
லுப்புடன்பான் மோருடன் மாதர் தம்பால்
கருவுடைய வற்றின்பால் கன்றி லாப்பான்
மறுகன்றாற் கறத்திடும்பா றிரிந்தி டும்பா
றிருமகளார் கணவனலாத் தெய்வத் தின்பேர்
சின்னமுடை யவற்றின்பால் செம்ம றிப்பால்
பரிவதிலந் தணர்விலைப்பால் செம்பி னிற்பா
றீதாம்பா லிவையனைத்தும் பருகாப் பாலே.

19-18
கங்கையல்ல திரண்டநாள் வைத்த நீருங்
கால்கழுவி மகுநீருங் கலங்க னீருந்
தெங்கனுள தாய்தீயாற் காய்ந்த நீருஞ்
சிறுகுழுநீர் வழித்தண்ணீர்ப் பந்த னீருஞ்
சங்கைடை நீர்வண்ணான் றுறைவி னீருந்
தாரையினா லெச்சிலுது வென்ற நீருஞ்
சங்குகல மாக்கொண்டு பருகு நீருந்
தரையில்விழா மழைநீருந் தவிரு நீரே.

19-19
வெற்றிலைமுன் றின்னாதே தின்னும்
வெற்றிலையி னடிநுனியு நடுவி லீர்க்கும்
வெற்றிலையும் பாக்குமுடன் கூட்டித் தின்னும்
விதவைக்கு முதன்முடிவாச் சிரமத் தார்க்கும்
வெற்றிலையுஞ் சுண்ணாம்பி னிலையு மற்றும்
விரதங்கொண் டிடுநாள்வெற் றிலையும் பாக்கும்
செற்றிலைதின் னாநிற்கப் பருகு நீரும்
விதையெனவைத் ததுதினலும் விலக்கி னாரே.

19-20
சாதிகுண மாச்சிரமந் தேசங் காலந்
தருமங்க ணிமித்தங்லண் முதலா வோதும்
பேதமுத லாகவொரு திரவி யந்தான்
பிரிந்துநலந் தீங்கினையும் பெற்று நிற்கும்
பாதமிசைப் பிறந்தோர்க்குக் கபிலை யின்பால்
பருகிடலா காதென்று மறையோர் சொன்னா
ராதலினா லோதியுணர்ந் தவர்பா லெல்லா
மடிக்கடியுங் கேட்டயர்வு தீர்மி னீரே.

19-21
கங்கிருளால் விடியாத வுலகுக் கெல்லாங்
கைவிளக்கா மிவையென்று கண்ணன் காட்டும்
பொங்குபுக ழாகமங்க டெளியச் சொன்ன
பொருளிவைநாம் புண்ணியர்பாற் கேட்டுச் சொன்னோ
மங்குடலும் பொருளுமல்லல தறியா மாந்தர்
வலையுளகப் பட்டுவரம் பழியா தென்றும்
பங்கயமா துற்றவரு ளாளர் தம்பாற்
பத்திமிகு பவித்தரங்கள் பயின்மி னீரே.

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.