LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

தமிழும், தமிழ் நலனும் தன் வாழ்நாள் கடமையெனக் கொண்ட மனிதர் திரு.பழனிசாமி (டெக்சாஸ்) அவர்கள் மறைவுக்கு அஞ்சலி..

தோன்றின் புகழோடு தோன்றுக என்னும் குறளின் பொருள்படித் தமிழ்போற்றத் தமிழின் தலைமகனாக வாழ்ந்து, தன்னோடு இணைந்தவர்களையும் தமிழ்வழிப்படுத்திப் பல்வேறு சமுதாயப் பணிகள் மற்றும் தமிழ் அமைப்புகளில் பங்காற்றியவர். 

2001 ஆம் ஆண்டு டாலஸ் நகரத்தில் மனைவியுடனும், மூத்த மகளோடும் குடியேறியபின் 2003 ஆம் ஆண்டில் தான் பிறந்து வளர்ந்த மண்ணைப் போற்றும் வகையில் கொங்கு தமிழ்ப்பள்ளியை நண்பர்களோடு ஒன்றிணைந்து நிறுவி 16 ஆண்டுகளாக நடத்தி வந்தவர்.

10 ஆண்டுகளுக்கு மேலாக, சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நடத்தும் திருக்குறள் & தமிழ்த்திறன் போட்டிகளில் தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்தியவர். 

மேலும் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளில் தமிழ் இலக்கிய, பண்பாட்டு நிகழ்வுகளில் தனக்கே உரிய சிறப்புத்தன்மையுடன் செயலாற்றியவர்.

2018 -ஆம் ஆண்டில் டாலஸில் நடைபெற்ற பேரவையின் கருத்துக்களத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பங்கேற்றுப் பல மாதங்களாகப் பணியாற்றிச் சிறப்புற நடத்தினர். குறள் தேனீப் போட்டியை ஒருங்கிணைத்து வழிநடத்தியதில் இன்றியமையாத பங்காற்றினார்.

தன்னலம் பாராது தமிழ்நலம் போற்றித் திகழ்ந்த உள்ளம் கொண்ட திரு. பழனிசாமி பச்சாக்கவுண்டர் பிப்ரவரி 22 ஆம் தியதி அன்று மாலை 4 மணியளவில் மாரடைப்பினால் இயற்கை எய்தினார்.

அன்பும், அறனும் உடைத்தாயின் சுற்றமும், நட்பும்  நீண்ட காலம் பண்போடும் நல்வழிப்பயனோடும் இணைந்து வாழ முடியும் எனக் கண்முன்னே வாழ்ந்து காட்டியவர்  மறைவு மிகப்பெரிய இழப்பு.

அன்னாரின் ஆன்மா இறையருளில் இளைப்பாறட்டும்.

அன்னாரை இழந்து வாடும் அனைவருக்கும் வலைத்தமிழ் ஆசிரியர் குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

இந்த மிகப்பெரிய இழப்பிலிருந்து மீள அவரது குடும்பத்திற்கு உதவும் பொருட்டு நண்பர்களால் உருவாக்கப்பட்டுள்ள கீழ்காணும் உதவி இணைப்பில் உங்கள் உதவியை வழங்கலாம். 

Gofundme Link  for support:

https://bit.ly/2tDYx7L

 

by Swathi   on 26 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம் ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம்
உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல். உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல்.
அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை. அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை.
முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை. முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை.
வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம். வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம்.
இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா? இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா?
இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம். இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம்.
மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல். மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.