நீரர மகளிர் நெருக்குபு புகுந்து கண்முகம் காட்டிய காட்சித்து என்ன பெருங்குலை மணந்த நிறைநீர்ச் சிறைப்புனல் மணிநிறப் படாம்முதுகு இடையறப் பூத்து சுரும்பொடு கிடந்த சொரிஇதழ்த் தாமரை (5)
கண்ணினும் கொள்ளாது உண்ணவும் பெறாது நிழல்தலை மணந்து புனல்கிட வாது விண்உடைத் துண்ணும் வினைச்சூர் கவர்ந்த வானவர் மங்கையர் மயக்கம் போல பிணர்க்கரு மருப்பின் பிதிர்பட உழக்கி (10)
வெண்கார்க் கழனிக் குருகெழப் புகுந்து கடுக்கைச் சிறுகாய் அமைத்தவாற் கருப்பை இணைஎயிறு என்ன இடை இடை முள்பயில் குறும்புதல் முண்டகம் கரும்பெனத் துய்த்து செங்கண் பகடு தங்குவயல் ஊரர்க்கு (15)
அருமறை விதியும் உலகியல் வழக்கும் கருத்துறை பொருளும் விதிப்பட நினைந்து வடசொல் மயக்கமும் வருவன புணர்த்தி ஐந்திணை வழுவாது அகப்பொருள் அமுதினை குறுமுனி தேறவும் பெறுமுதல் புலவர்கள் (20)
ஏழ்எழு பெயரும் கோதறப் பருகவும் புலனெறி வழக்கில் புணருலக வர்க்கும் முன்தவம் பெருக்கும் முதல்தா பதர்க்கும் நின்றறிந் துணர தமிழ்ப்பெயர் நிறுத்தி எடுத்துப் பரப்பிய இமையவர் நாயகன் (25)
மெய்த்தவக் கூடவிளைல்பொருள் மங்கையர் முகத்தினும் கண்ணினும் முண்டக முலையினும் சொல்லினும் துவக்கும் புல்லம் போல எம்மிடத்து இலதால் என்னை தம்முளம் தவறிப் போந்தது இவ்விடனே. (30)
|