|
||||||||
பப்பாளி அடை (palliyadi) |
||||||||
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், முற்றிய பெரிய பப்பாளிக்காய் - 1, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், இஞ்சி - ஒரு துண்டு, சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: 1.அரிசியுடன் பாசிப்பருப்பையும் ஊற வைத்து, இஞ்சி சேர்த்து அரைக்கவும். பப்பாளிக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2.அரைத்த மாவுடன் நறுக்கிய பப்பாளித்துண்டுகளைப் போட்டு வெங்காயம், சீரகம், பெருங்காயத்தூள், தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். 3.கல் காய்ந்ததும், மிதமான தீயில் அடை தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். |
||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|