LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

பண்டாய நான்மறை - அனுபவத்து ஐயமின்மை உரைத்தல்

 

பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங் 
கண்டாரு மில்லை கடையேனைத் தொண்டாகக் 
கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே 
உண்டாமோ கைம்மா றுரை. 628 
உள்ள மலமூன்றும்மாய உகுபெருந்தேன் 
வெள்ளந் தரும்பரியின் மேல்வந்து வள்ளல் 
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்காள் வாழ்த்தக் 
கருவுங் கெடும்பிறவிக் காடு. 629 
காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன் 
நாட்டிற் பரிப்பாகன் நம்வினையை வீட்டி 
அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம் 
மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து. 630 
வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாருந் 
தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாருஞ் சூழ்ந்தமரர் 
சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை 
நன்றிறைஞ்சி ஏத்தும் நமர். 631 
நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல 
எண்ணி எழுகோ கழிக்கரசைப்-பண்ணின் 
மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக் 
கழியா திருந்தவனைக் காண். 632 
காணுங் கரணங்கள் எல்லாம்பே ரின்பமெனப் 
பேணும் அடியார் பிறப்பகலக் காணும் 
பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும் 
பிரியானை வாயாரப் பேசு. 633 
பேசும் மொருளுக் கிலக்கிதமாய்ப் பேச்சிறந்த 
மாசில் மணியின் மணிவார்த்தை பேசிப் 
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல 
மருந்தினடி என்மனத்தே வைத்து. 634 

 

பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங் 

கண்டாரு மில்லை கடையேனைத் தொண்டாகக் 

கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே 

உண்டாமோ கைம்மா றுரை. 628 

 

உள்ள மலமூன்றும்மாய உகுபெருந்தேன் 

வெள்ளந் தரும்பரியின் மேல்வந்து வள்ளல் 

மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்காள் வாழ்த்தக் 

கருவுங் கெடும்பிறவிக் காடு. 629 

 

காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன் 

நாட்டிற் பரிப்பாகன் நம்வினையை வீட்டி 

அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம் 

மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து. 630 

 

வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாருந் 

தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாருஞ் சூழ்ந்தமரர் 

சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை 

நன்றிறைஞ்சி ஏத்தும் நமர். 631 

 

நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல 

எண்ணி எழுகோ கழிக்கரசைப்-பண்ணின் 

மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக் 

கழியா திருந்தவனைக் காண். 632 

 

காணுங் கரணங்கள் எல்லாம்பே ரின்பமெனப் 

பேணும் அடியார் பிறப்பகலக் காணும் 

பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும் 

பிரியானை வாயாரப் பேசு. 633 

 

பேசும் மொருளுக் கிலக்கிதமாய்ப் பேச்சிறந்த 

மாசில் மணியின் மணிவார்த்தை பேசிப் 

பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல 

மருந்தினடி என்மனத்தே வைத்து. 634 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.